நேற்றைய தினம் பூர்ணம் விசுவநாதன் நாடகக் குழுவில் பணியாற்றும், மெலட்டூர் நடராஜன் என்ற நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மயிலையில் படைப்பாளிகளின் ஒர் சந்திப்புக்குச் செல்வதாகக் கூறியவர், என்னையும் வரச் சொன்னார். அப்புசாமி, சீதப்பாட்டி புகழ் பாக்கியம் ராமஸ்வாமி அவர்கள் மயிலையில் உள்ள தனது அலுவலகத்தில் ஒவ்வொரு மாத்ம் மூன்றாம் சனிக்கிழமையன்று ஒத்த கருத்துடைய படைப்பாளிகளின் கூட்டத்துக்கு ஏர்பாடு செய்து வருகின்றார்.
இந்தக் கூட்டத்தில் கிழக்குப் பதிப்பக பத்ரி த்ங்களது அப்புசாமி படைப்புகளை பற்றிப் பேசினார். இந்தச் சந்திப்பில் மற்ற பிரபலங்கள் சிலரையும் நான் சந்த்திது உரையாட முடிந்த்தது. முதலில் ராணி மைந்தன். இவர் பலருடைய வரலாற்றுச் சரிதைகளைப் புத்தகமாக எழுதியுள்ளவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றிய ஒரு புத்தகம் கூட எழுதியுள்ளார். பிறகு, கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன். சமீபத்தில் 1981ல் கல்கி மற்றும் தினமணிக்கதிரில் வரும் இவரது கேள்வி-பதில் பகுதிக்கு கேள்விகள் கேட்டு வருவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஆண்டு, தேவன் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் தேவன் நினைவுப் பதக்கம் வென்றவரில் இவரும் ஒருவர். (மற்றவர் துக்ளக் சத்யா.) அடுத்தபடியாக வாதூலன் என்ற் பெயரில் எழுதி வந்த லக்ஷ்மணன். இவர் 'பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதியுள்ளார்.
வெளிநாட்டுத் தோழர்களே. உங்கள் மனம் குளிர ஒரு விஷயம் கிட்டத்தட்ட ஒரு தொண்ணூறு நிமிடங்கள நல்ல பொழுதாகப் போன இந்தச் சந்திப்பில் போண்டாவோ, வடையோ கொடுக்கப்படவில்லை. கேக்தான் தரப்பட்டது
Sunday, September 17, 2006
போண்டா வடை போயாச்சு
12:46 AM
1 comment
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உங்கள் ஊகம் சரிதான் சார்..நான் சத்தியத்திற்கு கட்டுபட்டவன்....தங்களுக்கு எப்படி தெரிந்தது?.
Post a Comment