Tuesday, December 27, 2005

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா யாராவது செய்தால் எப்படி இருக்கும் அன்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். வெற்றிகரமாகவும், புதுமையாகவும், ஏதேனும் செய்து வரும் முத்ரா பாஸ்கர் உபயத்தால் நேற்று அந்த ஆசை நிறைவேறியது. நேற்று வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ப்ரீடம் ஹாலில் நடைபெற்ற இந்த கர்னாடிக் ஜுகல் பந்தி நிகஷ்ச்சியில், குழல், கீ போர்ட், சிதார், தபலா உதவியுடன் 8 பாடகர்கள் திரு.எல்.கிருஷணன் இசை அமைத்த 24 பாடல்களை பாடினர். உங்களில் பலருக்கும் தெரிந்த பாடல்கள்தான். பாடல்களின் விபரமும், பாடியவர்கள் பெயரும் தருகின்றேன்.

1. பச்சை மாமலை போல் மேனி - பூபாளம் - சாருலதா மணி
2. ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி - ரதி பதிப்ரியா - தர்ஷினி
3. கண்ணா வா - மதுவந்தி - டாக்டர்.ராதா பாஸ்கர்
4. ஆறுமுகம் (திருப்புகழ்) - folk tune - ஸ்ரீகாந்த்
5. ஸ்திரதா நஹி நஹி - சாருகேசி - சைந்தவி
6. தந்¨தை தாய் - ஷண்முகப் ப்ரியா - கீதா ராஜா
7. அமைதியில் - பௌளி - சுபிக்ஷா
8. வந்தேஹம் - யமன் கல்யாணி - டாக்டர்.கணேஷ்
9. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - மாண்டு - சாருலதா மணி
10. திக்கெட்டும் - ராகேஸ்ரீ - தர்ஷினி
11. ஸர்வம் ப்ரம்ஹ மயம் - பஸந்த் பஹார் - டாக்டர்.ராதா பாஸ்கர்
12. விட்டு விடுதலை - கீரவாணி - ஸ்ரீகாந்த்
13. ராமநாம - சாலக பைரவி - சுபிக்ஷா
14. கனிகள் கொண்டு வரும் - மத்யமாவதி - சைந்தவி
15. நாதவிந்து கலாதி - நாத நாமகிரியா - கீதா ராஜா
16. துன்பம் நேர்கையில் - தேஷ் - டாக்டர்.கணேஷ்
17. எத்தனை இன்பங்கள் - தர்ஷினி
18. கூவி அழைத்தால் - வலஜி - டாக்டர்.ராதா பாஸ்கர்
19. ரகுவர தும்கோ - காபி - ஸ்ரீகாந்த்
20. கேலதி மம ஹ்ருதயே - சைந்தவி
21. கலியுக வரதன் - ப்ருந்தாவன் சாரங்கா - கீதா ராஜா
22. சந்தன சர்ச்சித - பஹாடி - சுபிக்ஷா
23. போ சம்போ - ரேவதி - டாக்டர்.கணேஷ்
24. சாந்தி நிலவ வேண்டும் - திலங் - கோரஸ்

எல்.கிருஷணன் அவர்களை உன்னிக் கிருஷ்ணண் மோதிரம் அணிவித்துக் கௌரவித்தார். விழாவிற்கு வந்த மற்ற முக்கியமானவர்கள் பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜ்குமார் பாரதி.

வழக்கம் போலவே டாக்டர்.ராதா பாஸ்கர் அவர்களும், முத்ரா பாஸ்கர் அவர்களும், நிறைவான ஒர் நிகழ்ச்சி வழங்கி, பார்வையாளர்களப் பரவசப்படுத்தினர். மதுசூதனன் தபேலாவில் பூந்து விளையாடி விட்டார். ராமானுஜம் புல்லாங்குழலில் கானடா மற்றும் ப்ருந்தாவன சாரங்காவில் கலக்கினார். கீ போர்ட் சத்யா ஒரிரு பாடல்களுக்கு மட்டுமே முழுமையாக வாசித்தாலும், கூட்டத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார். ஆண்களில் டாக்டர்.கணேஷ¤க்கும் பெண்களில் சைந்தவிக்கும் மானசீகமாக முதல் பரிசைத் தாராளமாகத் தந்தோம். சம்பிரதாயக் கச்சேரி அல்ல என்றாலும், எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தது னிகழ்ச்சி.

சங்கீத நிகழ்ச்சிகளில் பாரம்பரியம் கெடாமல் புதுமை புகுத்தி வரும், முத்ரா தம்பதியினருக்கு, 'சங்கீத நவீன கலா போஷகா' போன்ற விருதுகள் யாரேனும் தந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை

- சிமுலேஷன்