Friday, January 13, 2012

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 09 - ஹமீர் கல்யாணி

சாரங்கா என்ற கர்நாடக ராகத்தினை போலவே இருக்கும் ஹிந்துஸ்தானி ராகம் ஹமீர் கல்யாணியாகும். இது கல்யாணி ராகத்தின் ஜன்ய ராகமாகும்.  மெல்லிய உணர்வுளை வெளிப்படுத்த அமைந்த அருமையான ராகம் இது. இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் இது வெளிப்படையாகப் புலப்படும்.

ஆரோகணம்: ஸ் ப ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 ம1 க3 ப ம1 ரி2 ஸ்


முதலில் நாம் கேட்க இருப்பாது "சந்திரோதயம்" என்ற படத்தில் அமைந்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" என்ற பாடல். சுத்தமான ஹமீர் கல்யாணியில்   துவங்கும் இந்தப் பாடலில், பின்னர் சில அன்னிய ஸ்வரங்கள் கலக்கின்றது. இருந்த போதும் ஹமீர் கல்யாணியில் அமைந்த ஒரு அருமையான பழைய பாடல் என்பதனால் இத்துடன் துவங்குகின்றோம்.



அடுத்து கேட்க இருப்பது "கர்ணன்" படத்தில் இடம் பெரும் "என்னுயிர் தோழி" என்ற பாடல். எளிதில் பொருள் புரியும் இந்தப் பாடலுக்கு ஒரு அருமையான கோரியோக்ரபி. சிவாஜியும் அசோகனும் ஓரிரு கணங்களே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கின்றார்கள்.



திரையிசைப் பாடல்களுக்கே உரிய சுதந்திரத்துடன் ஒரு ராகத்தில் (ஹமீர் கல்யாணியில்) ஆரம்பித்து மற்ற சில பல ராகங்களுக்குள் சஞ்சாரம் செய்து விட்டு, மீண்டும் அரம்பித்த ராகத்துக்கே வரும் சில பாடல்களை இப்போது பார்போம்.

"காயத்ரி" படத்தில் இடம் பெறும் "காலைப் பனி" என்ற பாடல்.



"கல்யாண அகதிகள்" என்ற படத்தி வரும் "மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்" என்ற பாடல் இங்கே.



அடுத்து "தெனாலி" படத்தில் இடம் பெறும் "ஸ்வாசமே என் ஸ்வாசமே" என்ற பாடல்.



நிறிவாக "லவ் பேர்ட்ஸ்" படத்தில் இடம் பெரும் "மலர்களே, மலர்களே"' என்ற பாடல்.