Saturday, February 11, 2006

புதிரோ புதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?

2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?

3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம் படித்து, 150 படங்களுக்கும் மேல் கதானாயகனாக நடித்த தமிழ் நடிகர் யார்?

4. 1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மானாட்டுக்கு, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு உதவி செய்து மானாட்டை வெற்றிகரமாக முடிக்க உதவி செய்த திரைப்படப் பிரபலம் யார்?

5. பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண ஸாஸ்திரியார்) அவர்கள் எத்தனை காலம் உயிர் வாழ்ந்தார்?

6. தஞ்சையில் மருத்துவம் பயின்று, மலேசியாவில் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்.சிவசுவாமி, பின்னாளில் வேறு ஒரு பெயருடன் புகழ்பெற்றார். அவரது பின்னாள் பெயர் என்ன?

7. பட்டிமன்றம் போலவே, தமிழில் வழக்காடு மன்றம் என்ற ஒரு புது னிகழ்ச்சியினை கண்டு பிடித்து, அறிமுகப்படுத்தியவர் யார்?

8. தமிழின் தொன்மையான, தொல்காப்பியத்தினை, "பயப்படாதீர்கள்" என்ற தலைப்பில், ஒரு எளிய நூலாக எழுதியவர் யார்? அவருக்கு 'ஜோதி' என்ற புனை பெயரும் உண்டு.

9. சுவாமி சித்பவானந்தர், எந்தப் பிரபல அரசியல்வாதியின் சிறிய தகப்பனார்? இந்தப் பிரபலம் ஒரு பாரத்ரத்னா கூட.

10. "மகாதேவ்லைட்" என்றால் என்ன? எங்குள்ளது?

11. பாரத்ரத்னா விருதினை முதன்முதலில் பெற்ற தமிழ்னாட்டைச் சேர்ந்த மூவர் யார் யார்?

12. வைஸ்ரால் இர்விங் பிரபு, 1927ஆம் ஆண்டு, கோவை மாகரிலுள்ள இந்த இடத்திற்குச் சென்ற போது, "இது போன்ற அதிசயத்தை னான் எங்கும் கண்டதில்லை" என்றார். அது எந்த இடம்?

13. விற்பனை வரி என்ற ஒரு வரியினை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் வருவாயினைக் கணிசமாக உயர்த்திய முதலமச்சர் யார்?

14. ஜவுளிக்கடை, வேர்க்கடலைக் கடை, மோட்டார்க் கம்பெனி அகிய இடங்களில் வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை, ஆயுர்வேத மருத்துவரிடம் வேலை, குதிரைப் பந்தய சூதாட்டக் கிளப்பில் வேலை என்று பல்வேறு இடங்களிலும் சிற்சில காலங்கள் பணி புரிந்த புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் யார்?