"அடுத்த வீட்டு ஆத்ரேயா,
அத்தை, மாமாவுடன் அலைந்தானாம்;
சின்னக் குட்டி ஷில்பாவோ,
சித்தி, சித்தப்பாவுடன் சென்றாளாம்.
எனக்கென்று அப்படி
யாருண்டு இன்றிங்கு?" என்று கேட்ட
பேரப் பிள்ளையிடம்,
பேச்சை மாற்றும் வழி மறந்து,
பேதலித்து நின்றாள்,
முப்பது வருட முன்பாக
முதல் குழந்தையுடன் போதுமென
முடிவெடுத்த
முத்துப் பாட்டி.
- சிமுலேஷன்