Thursday, December 29, 2011

சீசன் சபேசன்

"ஹலோ ரவி, எப்படியிருகே" குரல் கேட்டுத் திரும்பினேன்.

கேட்ட குரல் சபேசனுடையது. சபேசன் கிராமத்தில் எனது பள்ளி நண்பன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால் அத்துடன் படிப்ப நிறுத்திக் கொண்டவன். கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கே வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கும் போது இவன் என்ன செய்யப் போகின்றான் என்று நான் கவலைப்பட்டதுண்டு.

"டேய் சபேசா. நான் சென்னையில்தான் வேலையாக இருக்கேன். நீ எப்ப சேன்னைக்கு வந்தே? இப்ப என்ன பண்றே?"

"ரவி. நம்ம கிராமம்தான் தெரியுமே. அங்க பிழைக்க பெரிசா வழி ஒண்ணும் இல்லே. அதனால இங்கே வந்துட்டேன். நிரந்த்தரமா வேலை ஒண்ணும் கெடைக்கல. சீசனுக்க்குத் தகுந்த்தாப் போலே ஒரு தொழில் செய்யறேன்"/

"என்னட  சொல்றே? புரியலையேடா"

"இப்ப பள்ளிக் கூடம் தொறக்கற சீசன் இல்லையா? ஒரு குழந்தை ஸ்கூலுக்கூப் போறதுன்னு தெரிஞ்சவுடனே, அதனோட அம்மா, அப்பாவை சினேகம் புடிச்சு, குழந்தையோட புத்தகங்க்களுக்கு பைண்ட் பண்றது, புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர்றது, இது மாதிரி பண்ணிப் பிழைப்பை நடத்தறேன்.   எதோ காலம் ஓடறது. இப்ப கூட பைண்டிங் பண்ணத்தான் போயிட்டிருக்கேன். அவசரமாப் போறேன். அப்புறமாப் பாக்க்கலாமா, வரட்டா" என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று விட்டான்.

சபேசனை அதன் பின் அவ்வப்போது சந்திப்பதுண்டு. சீசனுக்குத் தகுந்தாற் போல் தொழில் செய்வதாக அவன் சொன்னது உண்மைதான். ஒரு மாம்பழ சீசனில் அதனை ஓரிடத்திலிருந்திலிருந்து வாங்கி மற்றொரு இடத்த்க்கு அனுப்புவதை மேல்பார்வை பார்ப்பது செய்வதாக ஒரு முறை கூறினான். ஓரளவு சுமாராக வண்டி ஓட்ட முடிகிறது என்றும் சொன்னான்.

எங்கள் ஆபிசர் வெங்கடேசன் ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

"என் அக்கா பெண் அமெரிக்காவிலிருந்து வந்து டிசம்பர் சீசனில் சென்னையீல் கச்சேரி செய்கின்றாள்.. நீங்களெல்லாம் குடும்பத்தோடு அவசியம் வர வேண்டும்" என்று  வேண்டுகோள் விடுத்தார்.

சங்கீதக் கச்சேரிகளில் பெரிதும் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூப்பிட்டிருப்பது
ஆபீசராயிற்றே என்று அன்று குறித்த நேரத்திற்கும்  முன்பாகவே அகாடெமி வாசலில் ஆஜாராகி விட்டோம். அங்கே பார்த்தால் படு பிசியாக சபேசன்.  

"என்னடா இது ஆச்சரியமா இருக்கு! உனக்குக் கூட சங்கீதத்லேயெல்லாம் இண்ட்ரஸ்ட் வந்து விட்டதா?"

""ரவி இது என்ன மாசம்? என்ன சீசன்? டிசம்பர் சங்கீத சீசன் இல்லையா? நாந்தான் சொன்னேனே, சீசனை ஒட்டித்தான் நம்ம பிழைப்புன்னு."

"சரி. கொஞ்சம் புரியும்படியா சொல்லு."

"சங்கீத சீசன்லே பாட்டு, டான்ஸ் கச்சேரிகளுக்கு ரசிகர்களைப் பிடிச்சுக் கொண்டு வருவதுதான் என்னோட வேலை இப்ப."

"என்னடா ஒளர்றே? ரசிகர்களை பிடிச்சுக்க் கொண்டு வர்றதா? அது எப்படி முடியும்?

"ஆமாம்பா. எல்லா ரசிகர்காளும் தங்களுக்குப் பிடிச்ச பாடகர்கள் பாடறதைக் கேட்க ஓடீடறாங்க. அதுனால பல சபாக்கள்லே காத்து வாங்குது. அந்த மாதிரி இடத்லே   ரசிகர்களை பிடிச்சுக் கொண்டு வருவது என் பொறுப்பு."

"யார் உனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்தது?"

"யாரு? வெளி நாட்டிலேர்ந்து வர்ற பாடாகர்கள்தான். அவர்களுக்குப் பணம் பெரிசில்லை. அங்கீகாரம் தான் முக்கியம். எக்கச்சக்கமாக செலவு செய்து கொண்டு அமெரிக்காவிலேர்ந்தும், ஆஸ்ட்ரேலியாவிலேர்ந்தும் வந்து பாடும்போது, சபாவிலே ஒரு ஏழெட்டுப் பேர் மாத்திரம் இருந்தாங்கன்னா  எப்படி இருக்கும்? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் வரக் கூடாதுன்னுதான் ரசிகர்களை கொண்டு வந்து சேக்கறதை இந்த சீசன் சமயத்திலே தேர்ந்த்தெடுத்திருக்கேன். "

"முந்தி அரசிய்யல் கூட்டங்களுக்கு ஆள் சப்ளை பண்ணிட்டிருந்தேன். ஆனால் அரசிய்யல்வாதிகள் சமாச்சாரம்தான் தெரியுமே. இந்த வேளியூர்ப் பாடகர்கள் அப்படியில்லே. ப்ராம்டா பணம் கொடுத்துடுவாங்க. நம்ம ரசிகர்களும் உண்மையான ரசிகர்கள் என்பதால், பாடகர், ரசிகர் இரண்டு பேருக்குமே திருப்தி. ரசிகர்கள் எந்த இடத்திலே "பலே" போடணுமோ, எந்த இடத்திலே கை தட்டணுமோ, அதேல்ல்லாம் கரெக்டாச் செய்வாங்க."

சீசன் சபேசன் பிழைக்கத் தெரிந்தவன்தான்.

- சிமுலேஷன்

Monday, November 14, 2011

Tuesday, November 01, 2011

வாடிக்கையாளரே ராஜா

“என்னங்க, வண்டியை அந்தக் கடையாண்டை நிறுத்துச் சொன்னா, இங்கே வந்து நிறுத்தறீங்க”

ஆள்வார்ப்பேட்டையிலிருந்த சற்றே சிறிய கண்ணாடிக்கடையினை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து, ஒரு பெரிய கடையின் முன்னால் பைக்கை நிறுத்தினான் ராஜேஷ்.

“வா. ரம்யா. இந்தக் கடைக்கே போகலாம்”

“எதுக்குங்க. அந்தக் கடையிலும் ஏற்கெனவே ஒரு முறை கண்ணாடி வாங்கியிருகோம். இந்தக் கடையிலேயும் வாங்கியிருகோம். ஆனா, அந்தக் கடையிலே இருநூறு ரூபாய்  கொறச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் காபி, கூல் ட்ரிங்ஸ் எல்லாம் கூடக் கொடுத்தாங்க. அதை விட்டுட்டு இங்க ஏன் வந்தீங்க?”

“ரம்யா. போனமுறை அந்தக் கடைக்குப் போன போது, நடந்த சம்பவம் மறந்துடுச்சா?”

“ஆமாமா? யாரோ ஒரு எலக்ட்ரீஷியனுக்கு ஷாக் அடிச்சுதுன்னு நினைக்கிறேன்!”

“கரெக்ட். நாம கண்ணாடி வாங்கிட்டிருந்தப்போ எலக்ட்ரீஷியன் ஒருத்தன் சீலிங்லே ட்ரில்லிங் மெஷின் வெச்சுட்டு வேலை செஞ்சுட்டிருந்தான். அவனுக்கு திடீர்னு எலக்ட்ரிக் ஷாக் அடிச்சுடிச்சு. கிட்டத்தட்ட மயக்கம் போடற நெலமைக்கு வேற போயிட்டான். உடனே கடை ஓனர், கடையிலே பரபரப்பு அதிகமாகி, வியாபாரம் பாதிச்சுருமோன்னு எண்ணி, அவனை ‘அப்புறமா வாப்பா’ன்னு சொல்லிட்டாரு. அவனுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கவும் இல்ல. ஒரு வாய்த்தண்ணி கூட கொடுக்கவும் இல்லை. ஆனா அதே சமயத்திலே நமக்கெல்லாம் கூல் ட்ரிங்க்ஸ். காபி எல்லாம் கொடுத்து உபசாரம் பண்ணிட்டிருந்தாரு.

ஒரு பிஸினஸ் செய்பவருக்கு வாடிக்கையாளர்தான் ராஜாவாக இருக்கலாம். வாடிக்கையாளரைக் கவனிப்பது முக்கியமாகவும் இருக்கலாம். ஆனா, அதே சமயம் மனிதாபிமானம் கொஞ்சம் கூட வேண்டாமா? அதனாலதான் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத அந்தக் கடையை எனக்குப் பிடிக்கலே. விலை கம்மியாயிருந்தாலும் சரி”

ராஜேஷைப் பெருமையுடன் பார்த்தாள் ரம்யா. 

- சிமுலேஷன்

தேவையா மொபைல்

சுரேஷ், பாரதி பூங்காவில் பத்தாவது சுற்றுச் சுற்றிக் கொண்டிருந்த போதும், அந்தக் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன் மொபைலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அழுக்கான ஒரு டி-ஷர்ட். அரை நிஜார் தெரிய ஒரு லுங்கி.  ஐந்து நாட்களுக்கும் மேலே ஆகியிருக்கும் அவன் குளித்து. வறுமைக்கோட்டைத் தாண்டி வர, அவனுக்குப் பல வருடங்களாகலாம். இப்படிப்பட்ட ஒருவன் மொபல் போனில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசிக் கொண்டிருப்பது சுரேஷுக்கு ஆச்சரியத்தையும் மட்டுமல்ல, எரிச்சலையும்கூடத் தந்தது.

இந்த மாதிரி அவன் பேசிக் கொண்டிருந்தால், நிச்சயம் மாசம் ஆயிரம் ருபாய்க்குக் குறைவாக  பில் வராமலிருக்காது. அவன் சம்பாதிப்பது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐயாயிரம் ரூபாய் இருக்கலாம். அதில், ஆயிரம் ருபாய்க்கு மொபைலில் பேசினால் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படி என்ன அரட்டை வேண்டிக் கிடக்கு? திருந்தாத ஜென்மங்கள்!” என்றெல்லாம் நினத்தபடி வாக்கிங்கை முடித்த சுரேஷுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவனுடன் பேசிப் பார்த்தால் என்ன? “இப்படியெல்லாம் காசை வீணாக்காதே அப்பா”, என்று நைசாக எடுத்துரைத்தால்தான் என்னவென்று யோசித்தபடி அந்த லுங்கி வாலாவை நெருங்கினான்.
சுரேஷைப் பார்த்தவுடன் அவன் மையமாகச் சிரித்தான்.

“டெய்லி போன்ல பேசறீங்க போலிருக்கு.”

“ஆமாங்க”

“டெய்லி அரை மணிநேரத்துக்கும் மேலே பேசறீங்களே. நெறையக் காசு ஆவுமே. யார்கூட அப்படிப் பேசறீங்க?”

“என்னோட பொண்ணுகிட்டையும், பையன்கிட்டையும்தாங்க”

“என்னது? பொண்ணு, பையன்கிட்டேயா? அவங்க எங்க இருக்காங்க?”

“அவங்க பெங்களூர்லே படிக்கறாங்க சார். என் சம்சாராம் மூணு மாசம் முன்னாடி தவறிப் போச்சு. அதனால அவங்களைப் பள்ளிக் கூடத்திலேர்ந்து நிறுத்திரலாமான்னு நெனைச்சேன். ஆனா அவங்க அம்மா வேலை செஞ்ச எடத்து மொதலாளி அம்மாவோட மக, என் பசங்கள பெங்களூரு கூட்டிட்டுப் போய்ப் படிக்க வெக்கறேன்னு சொன்னாங்க. என்னாலையும் சரி, என் பசங்களாலையும் சரி. தினமும் ஒருத்தருகொருத்தர் தெனமும் பேசாம இருக்க முடியாது. அதுக்காக அவங்களே எனக்கும் எம் பசங்களுக்கும் மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஸ்கூலுக்குப் போறத்துக்கு முன்னாடி தெனம் அரை மணிநேரம் என்னோட பேசுவாங்க. ஆனா, அவங்களோட மொபைல் பேசறது இன்னியோடக் கடைசி நாளுங்க.”

“ஏம்ப்பா? என்ன ஆச்சு?”

“மொதலாளியம்மா எனக்கும் பெங்களூர்லே வேலை வாங்கிக் கொடுத்துட்டாங்க. இன்னிக்கி ராத்திரியே நானும் பெங்களூரு போறேன். இனிமே என் பசங்களோடயே நானும் இருப்பேன் சார். போன்ல பேசத் தேவையில்லை”

- சிமுலேஷன்

Sunday, October 30, 2011

பசு வதைத் தடுப்பும் துக்ளக்கும்


- சிமுலேஷன்

குருமூர்த்தியைக் கலாய்த்த துக்ளக்

-சிமுலேஷன்

கடுப்படித்த துக்ளக்கும் கலங்கிய சிதம்பரமும்-01


சிதம்பரம் அவர்களைக் கடுப்படிக்கும் வகையில் 19.10.2011 இதழ் துக்ளக்கில் வெளியான கேள்வி-பதில்தான் என்ன?  மேலும் 27 மற்றும் 35ஆம் பக்கங்களில் வெளியான கேலிச் சித்திரங்கள்தான் என்னென்ன?

அடுத்த பதிவில்.

- சிமுலேஷன்

Friday, October 21, 2011

முழு முகவரியும் இல்லாட்டா இவங்களுக்குத் தபாலே போய்ச் சேராதா?

முழு முகவரியும் இல்லாட்டா இவங்களுக்குத் தபாலே போய்ச் சேராதா? அப்புறம் ஏன் இந்தக் கொல வெறி?

Infosys Limited
Plot No: TP 1/1
Central Avenue
Techno Park SEZ
Mahindra world city
Natham sub post
Chengalput - 603 002

Infosys Limited
Special Economic Zone
Survey Nos. 50 (part), 51, 54, 49, 48, 44 & 45 (part), 41 (part), 36 (part)
Pocharam Village
Singapore Township Post Office
Ghatkesar Mandal, Ranga Reddy (Dist)
Hyderabad - 500 088

Tata Consultancy Services
Unit No. 801, 901 & 1001
A-Wing
Kensington Building IT/TES/SEZ
Hiranandani Business Park
Powai, Mumbai 400076

Tata Consultancy Services
Deccan Park 
Plot No.1 
Software Units Layout 
Madhapur 
Hyderabad 500 081

Tata Consultancy Services
Yantra Park Unit No 6  
Voltas Compound 
Opp Voltas HRD Centre 
Subhash Nagar , Pokhran Road 2 
Thane (W) 400601

Tata Consultancy Services
Empire Plaza
Empire Industrial Estate
101, LBS Marg
Vikhroli West
Mumbai 400 083

Cognizant Technology Solutions
Global Delivery Center
Technocomplex
 Plot GN-34/3, Sector-V
 Saltlake Electronic Complex
 Kolkata 700 091
India

HCL Technologies Ltd
ETA- Techno Park” Block I
SPECIAL ECONOMIC ZONE
33, Rajiv Gandhi Salai
Navallur Village and Panchayat
Thiruporur Panchayat Union
Chengalpet Taluk
Kanchipuram dist, Chennai – 603 103

HCL Technologies Ltd
ELCOT – SEZ Unit -I
Special Economic Zone
602/3, 138, Shollinganallur Village
Shollinganallur - Medavakkam High Road
Tambaram Taluk
Kancheepuram (Dist)
Chennai- 600 119. Tamilnadu, India

HCL Technologies BPO Services Ltd(C-5)
Module 1, Tower 1
Floor Nos. 1 & 6
“Chennai One” SEZ Unit
ETL Infrastructure Services Ltd.
200 Ft, Thoraipakkam
Pallavaram Ring Road
Thoraipakkam, Chennai – 600 096 

HCL Technologies Ltd. - SEZ Unit
M/s. Unitech Hi-Tech Structures Limited
Special Economic Zone – IT/ITES
Plot No.1, Block No. A2, 3rd & 4th Floors.
DH Street, 316 New Town
Rajarhat, Dist. North 24 Parganas
Kolkata – 700 156, India

Satyam Computer Services Limited
Chennai Satyam Center
 
Survey No. 478/1A, Door No. 11A and 13
Old Mahabalipuram Road
Tambaram Taluk 
Sholinganallur
Kancheepuram District
TamilNadu

Satyam Computer Services Limited
Registered Office
Info City
Unit-12, Plot No.35 & 36
Hitech City Layout, Sy No.64
Madhapur, Hyderabad-500081

Satyam Computer Services Limited
Satyam Gateway
Block 1 & 2,S.No. 79(P) & 64 ( P)
Madhapur Village
Serilingampally Mandal and Municipality
R R Dist., Hyderabad 500 081

Satyam Computer Services Limited
DLF
Special Economic Zone - Unit
DLF Commercial Developers Ltd.
Special Economic Zone
S.Nos. 129 (P), 130, 131 (P) and 132
Gachibowli Village
Shirlingampalli Mandal,Ranga Reddy District

L&T Infotech
2nd & 3rd floor, IT-6 Building
Flagship Infrastructure Pvt. Ltd.
IT & ITES, SEZ, Survey No.154/6
Rajiv Gandhi Infotech Park
Hinjewadi, Phase-1
Pune 41105

Monday, October 17, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - ப்ருந்தாவன சாரங்கா

22ஆவது மேஎளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகங்களில் ஒன்று ப்ருந்தாவனா சாரங்கா. தேசீய ராகங்களிலும் ஒன்றான இந்த ராக்கம் மயக்கம் தரவல்ல ராகம் என்றால் மிகையாகாது. பக்தி ரசமும் இந்த ராகத்தில் சொட்டுவதனால் பஜன் மற்றும் ஸ்லோகங்கள் பாட இசைந்த ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ் ரி1 ம1 ப் நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ம1 ரி2 ஸ்

இது பிரபலமான் ராகமான மத்யமாவதி போல இருக்கும். ஆனால் ஆரோகணத்தில் கசிக நிஷாததிற்குப் பதிலாக காகலி நிஷாதம் வரும். அதுவே மத்தியமாவதிக்கும் ப்ருந்தாவன சாரங்காவிற்கும் உள்ள வித்தியாசம். வட இந்திய இசையில் உள்ள ப்ருந்த்தாவனி இதை பெரிதும் ஒத்த ராகம். இப்போது ப்ருந்தாவன சாரங்காவில் அமைந்த தமிழ்த் திரைப் படப் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' திரைப்படத்தில் வரும் 'சிங்காரக் கண்ணே' என்ற பாடலைப் பார்ப்போம். வாரலட்சுமி அவர்கள் பாடியது. தமிழ்ப் பாடலின் சுட்டி கிடைக்காதலால் இதே பாடலின் தெலுங்கு வர்ஷன் இங்கு கொடுக்கின்றேன்.



அடுத்து 'படித்தால் மட்டும் போதுமா?' படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற பாடலான 'பொன்னோன்று கண்டேன்' என்ற பாடல்.  சிவாஜிக்கும்,, பாலாஜிக்கும் முறையே டி.எம்.எஸ் அவர்களும் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள்.



ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் ' கண்ணன் முகம் காண' என்ற பாடலை பாடியிருப்பவர்கள் ஜெயச்சந்திரன் மற்ற்றும் வாணி ஜெயராம்.



அடுத்து வருவது 'ஒரு தலை ராகம்' படத்தில் வரும் பாடல். இதில் வரும் பாடல்கள் அனைத்துமே பிரபலமானவை. இதில் மிகவும் இனிமையான பாடல் 'இது குழந்தை பாடும் தாலாட்டு' ஆகும். முரண்பாடுகள் ஒவ்வொன்றையும் பட்டியலிடும் இந்தப் பாடலில்  ப்ருந்தாவன சாரங்கா சொட்டி வழிகின்றது.



'இலக்கணம் மாறுதோ' என்ற இந்தப் பாடல் இடம் பெறும் படம் 'நிழல் நிஜமாகிறது' எஸ்.பி.பியின் இனிய குரலில்.



ஜேசுதாஸ் குரலில் 'மரகதவல்லிக்கு மணக்கோலம்' என்ற பாடல் இடம் பெறுவது 'அன்புள்ள அப்பா' என்ற படம்.



சமீபத்தில் 2005ல் வெளிவந்த பாடல்களில் ப்ருந்தாவன் சாரங்காவில் அமைந்த ஒரு பாடல் 'டீஷ்யூம்' படத்தில் இடம் பெறும் 'நெஞ்சாக் கூட்டில் நீயே நிற்கிறாய்" என்ற பாடல்



- சிமுலேஷன்

கணையாழி கடைசிப் பக்கங்களும் தமிழ்ப் பதிவர்களும்

ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் வாசகர்களுடன் சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வது சுஜாதாவுக்குக் கை வந்த கலை. ஆனால் அந்த விஷயம் ரொம்பச் சின்ன விஷயமாக இருந்தால் அதே போல பல விஷயங்களை ஒரே குடையின் கீழ் தொகுத்து எழுதி வந்தார். அதுதான் கணையாழி கடைசிப் பக்கங்கள். இதில் என்ன வசதி என்றால் இதுதான் எழுத வேண்டும் என்ற எந்த விதக் கட்டாயமும் இல்லாமல் மனதுக்குத் தோன்றிய விஷயங்களை எல்லாம் ஒரு கதம்பமாகத் தொகுத்து வழங்கலாம். ஒரு விஷயத்துக்கும் அடுத்த விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சொல்லுவது மட்டும் சுவாரசியமாக இருக்க வேண்டும்.

இந்த 'கணையாழி கடைசிப் பக்கங்கள்' உத்தி வசதியாகத் தோன்றுவதாகத் தெரிவதால் தமிழ் வலைப்பதிவர்கள் பலரும் எழுத பெரிதாக ஏதும் இல்லாத் போது ஆனால் தங்களைப் பாதித்த விஷயங்கள சின்னதாக இருந்தாலும் ஒரு மெட்லியாக தொகுத்து இடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரின் பதிவுகள் இங்கே:-

1. டோண்டு - நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்

2. கேபிள் சங்கர் - கொத்ட்து பரொட்டா

3. டி.வி.ராதாகிருஷ்ணன் - தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்

4. ஜாக்கி சேகர் - சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்

5. ஆர்.வி.எஸ் - திண்ணைக் கச்சேரி

6. சிமுலேஷன் - ஃபலூடா பக்கங்கள் ஹி..ஹி

இந்த மாதிரி கதம்பமாக எழுதும் வேறு ஏதேனும் பதிவர்களின் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அவற்றையும் இங்கு சேர்க்கின்றேன்.

- சிமுலேஷன்

Sunday, October 16, 2011

மெரினா - சுஜாதா - நூல் விமர்சனம்

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கான களம். நூற்றுச் சில பக்கங்கள் கொண்டது சுஜாதாவின் மெரினா என்ற இந்தக் குறுநாவல். குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது.

கதையின் முடிச்சு பலமானது அல்லதான். இருந்தாலும் தனது விறுவிறுப்பான நடையால் கட்டிப் போடுகின்றார் சுஜாதா. அதிலும் குறிப்பாக முதல் சில அத்தியாயங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஒரு புறம் ந்டுத்தரக் குடும்பத்தினர்களும், குழந்தைகளும் குதூகலமாக விளயாடிக் கொண்டிருக்கும் மெரினா கடற்கறையின் மற்றொரு புறம் பணக்கார இளந்தாரிப் பையன்கள் அடிக்கும் கூத்துடன் ஆரம்பித்து, அதில் ஒரு குறிப்பிட்ட முயற்சி எப்படி 'விவகார'மாய் முடிகின்றது என்று துவங்குகின்றது. போதை மருந்து இன்ன பிற கெட்ட சகவாசங்கள் இருக்கும் ஒரு அயோக்கினாய் இருந்தாலும், நாயகன் திலீப் எப்படியாவது தப்பித்துக் கொள்ள மாட்டானா என்று வாசகர்களை ஏங்க வைப்பதுதான் சுஜாதாவின் சாமர்த்தியம். இதற்கு உதவ கணேஷ், வசந்த்தும் வருகின்றார்கள். இருவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் செய்யாததால் மனதில் நிற்பதில்லை. ஆனால் கணேஷ் அப்சர்வ் பண்ணும் ஒரு சிறிய விஷயமான ஒரு சின்னஞ்சிறு முடிச்சினை வைத்துக் கொண்டு நூறு பக்கங்களுக்கு மேல் சுவாரசியமாக எழுதும் சுஜாதாவும் அவரது நடையும் மனதை விட்டு நீங்குவதில்லை.

கதை: மெரினா - குறுநாவல்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பு: விசா பப்ளிகேஷன்ஸ் - 1999
பக்கங்கள் - 112
விலை - Rs. 35

- சிமுலேஷன்

Wednesday, October 12, 2011

கோயம்புத்தூர்வாசிகளுக்கு டோஸ்ட்மாஸ்டர்ஸ்ஸில் சேர ஒரு வாய்ப்பு


பேச்சுக் கலை (ஆங்கிலத்தில்) மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப் பற்றி முன்பு ஒரு முறை எனது இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவினைப் படித்து விட்டு ரமேஷ் என்ற தமிழ் வலைப்பதிவர் என்னைத் தொடர்பு கொண்டு 'மெட்ராஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப்பில்' உறுப்பினராகி, உற்சாகமாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.  

சென்னையில் மட்டுமே 25க்கும் மேற்பட்ட க்ளப்புகள் கொண்ட டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பு இப்போது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் காலடி பதித்துள்ளது. இவற்றில் ஒரு சில மட்டுமே கம்யூனிட்டி க்ளப்புகள். அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இங்கு உறுப்பினராக முடியும்.  மற்றவை அந்தந்த நிறுவனத்தில் பணி புரியும் / பயிலும் நபர்களுகு மட்டுமானது 

கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்கள் இந்த அமைப்பில் இதுநாள் வரை ஆர்வம் காட்டாமலிருந்தது ஆச்சரியமே! தற்போது கோயம்பூத்தூரிலிருந்து டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப் ஆரம்பிக்க ஒரு சிலர் ஆர்வம் தெர்ர்வித்துள்ளனர்.  ஆனால் இருபது உறுப்பினர்கள் சேர்ந்த பின்னரே க்ளப் முழுமையாகச் செயல்பட முடியும். எனவே இதில் ஆர்வம் மிக்க கோயம்புத்தூர் வாசிகள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள முகநூல் இணைப்பில் இணைந்து கொண்டு தங்களது விருப்பத்தினத் தெரிவிக்கலாம்.  அல்லது என்னை 9840923764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- சிமுலேஷன்

Sunday, October 09, 2011

மாணவர்களுக்கான இலவச மடிக்கணிணி - மேம்பட்ட பயன்பாட்டிற்கு மேலான சில யோசனைகள்

09.10.11

திருமதி. சபீதா. இ.ஆ.ப
செயலர்
பள்ளிக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு அரசு
சென்னை

மதிப்பிற்குரிய கல்வித் துறை செயலருக்கு,

பொருள்: மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலவச மடிக் கணிணியினை சிறப்பாகப் பயன்படுத்த சில யோசனைகள்

இலவச மடிக்கணிணியினைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள மகிழ்திருக்கும் இந்த வேளையில், சமூக ஆர்வலர்கள் பலர் இந்த மடிக்கணிணிகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா என்று கவலை தெரிவித்துள்ளனர்கள். இவை முறையாகப் பயன்படுத்தப்படாமல் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படுமோ என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். தேவைற்ற இணைய தளங்களை அணுகுவது தடுக்கப்பட்டும், மடிக்கணிணியில் தேவையற்ற அம்சங்கள் தடுக்கப்பட்டும் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படும் வாய்ப்புக்களை தடுக்க அரசு ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுத்திருக்குமென்று நம்புகின்றேன். 

மாநிலக் குடிமகன் என்ற முறையில், மாணவர்கள் தங்களது மடிக்கணிணிகளை சிறப்பாகப் பயன்படுத்த சில யோசனைகளை வைக்க விரும்புகின்றேன். கீழ்க்காணும் இந்த யோசனைகளை தங்கள் துறை  கவனமாக ஆராய்ந்து அமுல்படுத்த வேண்டுகின்றேன்.

1.   வலைப்பதிவுகள்:-
யோசனை – ஒவ்வொரு மாணவனோ அல்லது மாணவர்கள் குழுவோ வலைப்பதிவு துவங்க வேண்டும். இந்த வலைப்பதிவில் சமூகக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், சொந்தமாக வரைந்த ஓவியங்கள், வண்ணப் படங்கள், ஒலித் தொகுப்புகள், கவிதைகள் ஆகியவற்றை இடுகையாக இடலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகளை பள்ளி அளவில் ஒரு பொது வலைப்பதிவாக உருவாக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறந்த வலைப்பதிவினை தேர்தெடுக்கலாம். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ அரசு சிறந்த வலைப்பதிவுக்கான சுழற்கோப்பை வழங்கலாம். தேவையானால் தனியார் நிறுவனங்களிடமிருந்து  இதற்கான நிதியும் பெறலாம். வலையுலகில் சிறந்த பதிவர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழு சிறந்த வலைப்பதிவுகளைத்  தேர்ந்தெடுக்க உதவி செய்யலாம்.  இந்த யோசனையை அமுல்படுத்தும் முன்னர் “வலைப்பதிவுகள் இடுவது எப்படி?” மற்றும் “இலக்கியத் திருட்டு ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?” (Plagiarism) குறித்த பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். 
பயன்கள் – மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தவும், மேலும் தங்கள் திறமைகளை வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளிப்பதுவது எப்படி என்றும் கற்றுக் கொள்வார்கள். 

2.   விக்கிப்பீடியா – கட்டற்ற கலைக் களஞ்சியம்
யோசனை – ஒவ்வோரு பள்ளியிலும் விக்கிப்பீடியா என்ற கட்டற்ற கலைக் களஞ்சியம் குறித்து ஒரு பட்டறை நடத்தப்பட வேண்டும். இதன் பின்னர் ஒவ்வொரு மாணவனையும் விக்கிபீடியா கலைக் களஞ்சியத்திற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வரைய ஊக்குவிக்க வேண்டும். இந்தக் கட்டுரைகள் மாணவர்கள் வசிக்கும் இடத்திலுள்ள சிறப்பான இடங்கள் அல்லது புகழ்பெற்ற மனிதர்கள் குறித்து இருக்கலாம். ஒவ்வொரு பள்ளியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வளவு கட்டுரைகள் படைக்க வேண்டும் என்றும் வரையறை செய்து கொள்ளலாம். விக்கிபீடியா மட்டுறுத்துநர்கள் ஒவ்வொரு கட்டுரைகளையும் மட்டுறுத்தி வெளியிடுவதால் பள்ளி ஆசிரியர்கள் இதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
பயன்கள் - தமிழ்நாட்டில் உள்ள  அரிய இடங்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்து மாணவர்கள் மூலம் அனைத்துலக மக்களும் அறிந்து கொள்ள ஏதுவாகும். மாணவர்களுக்கும் வலைப்பதிவில் எழுதுவதற்கும், கலைக் களஞ்சியத்திற்கு எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகள் புரிந்து கொள்ளலாம்.

3.   வினா வங்கி:-
யோசனை – வகுப்பில் ஒவ்வொரு பாடம் நடந்து முடிந்தவுடன், மாணவர்களே வினா வங்கி தயாரிக்கச் சொல்ல வேண்டும். இந்த வினா வங்கியினை ஆசிரியர்கள் மட்டுறுத்தலாம்.  பின்னர் அனைத்து வினா வங்கிகளும் தொகுக்கப்பட்டு ஒரு மாபெரும் வினா வங்கியினை உருவாக்கலாம்.
பயன்கள் – மாணவர்களே ஒவ்வொரு பாடத்தினையும் மாணவர்களே படித்து விட்டு, வினா வங்கி தயாரிப்பதால், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களையும் ஆழ்ந்து கற்றுக் கொள்ள முடியும்.  

4.   டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் மேசைப் பதிப்பு:-
யோசனை -  ஒவ்வொரு பள்ளியிலும் கலையாற்றல் மிக்க மாணவர்களைக் கணடறிந்து அவர்களுக்கு டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் மேசைப் பதிப்பு மென்பொருள்களான போட்டோஷாப், பேஜ்மேக்கர் அல்லது ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்த மூலநிரல் மூலம் கிடைக்கும் மென்பொருள்களில் பயிற்சி அளிக்க வேண்டும். இந்தக் குழு பள்ளி மலர், செய்தி மடல், நினைவு மலர், பள்ளிக் கண்காட்சிக்கான சுவரொட்டி ஆகியவை தயாரிப்பதில் உதவி செய்யலாம்.
பயன்கள் – மாணவர்கள் தங்கள கலையாற்றலை வளர்த்துக் கொள்வதுடன், பள்ளிக்குத் தேவையான இதழியல் பொருள்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கலாம்.

5.   குவிஸ் க்ளப் என்ற புதிர் மன்றங்கள்:-
யோசனை – ஒவ்வொரு பள்ளியிலும் குவிஸ் க்ளப் எனப்படும் புதிர் மன்றங்களை ஆரம்பிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். பல இலவச கல்வி மென்பொருட்கள் கிடைத்துள்ளதாலும் இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்துள்ளதாலும் மாணவர்கள் புதிர்களைச் சுலபமாய்த் தொகுத்து வாரம் ஒரு முறை புதிர் நிகழ்ச்சிகளை நடத்தலாம். இந்தப் புதிர்கள் பொது அறிவு சார்ந்ததாகவோ அல்லது ஒரு கருத்தின்  அடிப்படையில் அமைந்ததாகவோ இருக்கலாம். 
பயன்கள் – புதிர்ப் போட்டிகள் வைப்பதன் மூலம், மாணவர்கள் இலவச மென்பொருட்களையும், இணையத்தினையும் முறையாகப் பயன்படுத்தினார்களா என்று தெரிந்து கொள்ள முடியும்.

தங்கள் உண்மையுள்ள

சி.சுந்தரராமன்

Friday, October 07, 2011

இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை - மீள்பதிவு



(தீபாவளித் திருநாளன்று திருநெல்வேலி - படம் உதவி - விக்கிபீடியா)
மற்ற எந்த இந்துப் பண்டிகைகளுக்கும் இல்லாத பல விசேஷங்கள் தீபாவளித் திருநாளுக்கு உண்டு. அவை என்னவென்றால்:
  • குழந்தைகளையும், பெரியவர்களையும் பரவசப்படுத்தும் பட்டாசுகளும், மத்தாப்புக்களும் தீபாவளிக்குப் பலநாடகள் முன்பிருந்தே வெடிக்கப்படும்.
  • நான்கைந்து நாட்கள் முன்பாகவே, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்களும், பலகாரங்களும் செய்யப்படும். மற்ற பண்டிகைகள் போல பண்டிகை தினம் நைவேத்யம் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டுமென்ற கட்டாயம், தீபாவளிக்கு இல்லை. அடுப்படியிலிருந்து  அப்படியே சுடச்சுட எடுத்துச் சாப்பிடலாம்.
  • மற்ற பண்டிகைகளுக்கு புதுத் துணிமணிகள் எடுக்காவிட்டாலும், தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கியணிவது பலரின் வழக்கம்.
  • பல ஊர்களில் இருந்தாலும், தீபாவளியன்று குடும்பத்தினர் அனவரும் ஒன்று சேருவது  ஒரு குதூகலம்.
  • வீட்டிலுள்ள பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ தலைதீபாவளி என்றால் இரட்டிப்பு சந்தோஷம்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட தீபாவளித் திருநாள், மற்ற பண்டிகைகள் போல அல்லாமல் விடிய,விடிய கொண்டாடப்படும் பண்டிகை இது ஒன்றே.  தீபாவளியின் முதல் தினமும், மறுநாள் விடியற்காலையிலும், தீபாவளியன்ரின் இரவும் பெருத்த குதூகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களையொட்டி அமைந்துவிட்டால், இந்தக் கொண்டாட்டங்களை குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும். அப்படியில்லாமல் வாரத்தின் மைய நாட்களில் வந்து விட்டால், உற்சாகம் சற்றே குறைந்து விடும். இதற்குப் பெரிய காரணம், வெளியூரில் இருக்கும் குடும்பத்தின் ஒரு அங்கத்தினருக்குக் கிடைக்கும் 'ஒரே ஒரு நாள்' விடுமுறையேயாகும். இந்த ஒரு நாள் விடுமுறையின் காரணமாக வெளியூரில் இரு்க்கும் நபர், தீபாவளியின் முதல் நாள் மட்டுமல்லாது, தீபாவளி தினத்தின் இரவிலும், அவர் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்து கொண்டிருப்பார்.

இந்தியாவின் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் தீபாவளித் திருநாளைக்கு இரண்டி தினங்கள விடுமுறை அளித்தாலென்ன? உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்மஸ், தேங்ஸ் கிவ்விங் டே போன்ற பல முக்கிய தினங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்படுகின்றது. ஏன்? தமிழ்நாட்டிலேயே பொங்கல் திருநாளையொட்டி, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று தினங்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு தீபாவளிக்கு ஒரு நாளைக்கும் மேல் விடுமுறை வேண்டும் என்று எனக்குத் தெரிந்து எந்த ஊடகத்திலும் கோரிக்கை வைக்கப்படவில்லை. இந்து அல்லாத Vincent Desouza of Mylapore Times மட்டுமே ஓரிரு வருடங்கள் முன்பு இது குறித்து மயிலாப்பூர் டைம்ஸில் கட்டுரை எழுதியதாக நினைவு.  இந்த இடுகை எழுதும் முன்னர் சற்றே கூகிள் செய்தபோது, முஸ்லிம்கள் பெரிதும் வாழும் மலேசியா நாட்டில்கூட தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக அறிந்துகொள்ள முடிகின்றது.


நாத்திகம் பேசும் நண்பர்கள்கூட தனது மனைவி வீட்டாருகாகவும், தமது குழந்தைகளின் குதூகலத்திற்காகவும், தமது கொள்கைகளத் தியாகம் செய்துகொண்டு தீபாவளித் திருநாளைக் குதூகலத்துடன் கொண்டாடி வரும் இந்த நாட்களில், "இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை"என்ற கோஷம் தவறாக ஒலிக்கவில்லை.

எங்க வீட்டு கொலு - 2011















- சிமுலேஷன்

Thursday, September 29, 2011

கொலு வைப்பது எப்படி?

கடந்த சில நாட்களில் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதனைப பற்றிய ஒரு சுருக்கம் இங்கே.

முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது.

மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது.

நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.

ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது.

ஆறாம் பதிவில் தீமாட்டிக் கொலு குறித்து விளக்கப்பட்டது.

ஏழாம் பதிவில் கொலுவுக்கு அழைக்கும் முறையும், பூஜை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.  

எட்டாம் பதிவில் கொலுப் போட்டிகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.

ஒன்பதாம் பதிவில் கொலு முடிந்தவுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவை விளக்கப்பட்டது.

நவராத்திரியின் போது கொலு வைக்கும் அனைவருக்கும் இந்தப் பதிவுகள் பயனுள்ளதாக இருந்திருக்குமென்று நம்புகின்றேன்.

-       சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவை
கொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும். 

அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பின்பு அவற்றை அட்டைப் பெட்டியில் அடுக்க வேணடும்.  தேவைப்ப்பட்டால் இந்த அட்டை பெட்டிக்குள் பேப்பர் கட்டிங் துகள்களையும் இட்டு நிரப்பி பொம்மைகள் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அட்டை பெட்டியின் வெளியில் ஒரு மார்க்கர் பேனா கொண்டு உள்ளே என்னென்ன பொம்மைகள் வைத்திருக்கின்றோம் என்று எழுதி வைத்து விடுதல் வசதியாக இருக்கும். ஸ்லாடட் கொலுப் படிகளை கழட்டும் முன்னர் எந்த படி எந்த ஆங்கிளில் எத்தனையாவது ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்று மார்க்கர் பேனாவில் குறித்து வைக்க, அடுத்த முறை படிகள் கட்டுவது எளிதாகும்.  

வருடா வருடம் புதுப் பொம்மைகள் வாங்குபவராக இருந்தால் வீட்டில் பொம்மைகள் எக்கச்சக்கமாக சேர்ந்து ஒரு நேரத்தில் கையாளுவது கடினமாக இருக்கும். எனவே வருடா வருடம் ஒரு சில பொம்மைகளையாவது வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம்.

-       நிறைந்தது

- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவை
கொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும். 

அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பின்பு அவற்றை அட்டைப் பெட்டியில் அடுக்க வேணடும்.  தேவைப்ப்பட்டால் இந்த அட்டை பெட்டிக்குள் பேப்பர் கட்டிங் துகள்களையும் இட்டு நிரப்பி பொம்மைகள் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அட்டை பெட்டியின் வெளியில் ஒரு மார்க்கர் பேனா கொண்டு உள்ளே என்னென்ன பொம்மைகள் வைத்திருக்கின்றோம் என்று எழுதி வைத்து விடுதல் வசதியாக இருக்கும். ஸ்லாடட் கொலுப் படிகளை கழட்டும் முன்னர் எந்த படி எந்த ஆங்கிளில் எத்தனையாவது ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்று மார்க்கர் பேனாவில் குறித்து வைக்க, அடுத்த முறை படிகள் கட்டுவது எளிதாகும்.  

வருடா வருடம் புதுப் பொம்மைகள் வாங்குபவராக இருந்தால் வீட்டில் பொம்மைகள் எக்கச்சக்கமாக சேர்ந்து ஒரு நேரத்தில் கையாளுவது கடினமாக இருக்கும். எனவே வருடா வருடம் ஒரு சில பொம்மைகளையாவது வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம்.

-       நிறைந்தது

- சிமுலேஷன்

Wednesday, September 28, 2011

கொலு வைப்பது எப்படி? - 08

கொலுப் போட்டிகள்
தற்காலத்தில் கொலுப் போட்டிகள் நடப்பது சாதாரணமாகி விட்டது. இதற்கெல்லாமா போட்டிகள் என்று எண்ணினாலும், இந்தப் போட்டிகள் பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கொலு போன்ற விஷயங்களில் மேலும் ஆர்வம் கொண்டு பங்கெடுக்க செய்கின்றபடியால் இத்தகைய போட்டிகளை மனமார வரவேற்கலாம். கொலுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்காக ஒரு சிறப்பான கொலு வைத்திருத்தல் அவசியம். தீமாட்டிக் கொலுவாக இருத்தல் இன்னமும் சிறப்பு.
கொலுப் போட்டிகள் பல வைகப்படும். பெரும்பாலான போட்டிகளில் கொலு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உங்கள் கொலுவை பற்றிய புகைப்படங்கள் எடுத்து விளக்கங்களும் எழுதிப் போட்டியாளர்களுக்குத் தபாலில் அனுப்ப வேண்டும். அவர்கள அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் அளிப்பார்கள். இது தவிர சில போட்டியாளர்கள் தங்களது நடுவர்களை தேர்ந்தெடுக்கப்ப்ட்ட ஒரு சில வீடுகளுக்கு அனுப்புவார்கள். நடுவர்கள் உங்கள் வீட்டுக்கு வரும் போது, அவர்கள் கொலு எப்படி பாரம்பரியமாக அமைக்கப்பட்டுள்ளதா, என்னென்னெ சிறப்பம்சங்கள் உள்ளன என்பவற்றைக் கவனிப்ப்பது மட்டுமல்லாத்து, விருந்தினர்களை நீங்கள் உபசரிக்கும் முறைகள், அவர்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்கும் முறைகள் ஆகியவற்றிற்கும் மதிப்பெண்கள் அளிப்பர்கள். இவர்கள் முன்னறிவின்றி வரலாம். எனேவே வீட்டில் உள்ள எவரும் நடுவர்களை சந்த்திக்க தயார் நிலையில் இருத்தல் நல்லது.
இந்த வருடம் கொலுப் போட்டிகள் நடத்துவர்கள் பற்றி ஒரு சில குறிப்புகள் தருகின்றேன்.
வசந்த் & கோவும், தி ஹிண்டு நாளிதழும் சேர்ந்து நடத்தும் கொலுப் போட்டி குறித்த விபரங்கள் இங்கே:-
“ஸ்ரீ மயிலாப்பூர் ட்ரையோ”எனப்படும் சுமுகி ராஜசேகரன் மெமோரியல் ட்ரஸ்ட்ச் சேர்ந்த்தவர்கள் மயிலாப்பூர் டைம்ஸ் இதழுடன் சேர்ந்த்து கொலுப் போட்டிகள் நடத்துகிறார்கள். இது தவிர இவர்கள் ஒவ்வொரு வருடமும் “கொலு பத்ததி” என்ற தலைப்பில் கொலு வைப்பது எப்படி என்ற ஒரு பட்டறையையும் நடத்துகின்றார்கள். அதன் விபரம் இங்கே:-
விகடன் நிறுவனத்தினர் நடத்து போட்டி விவரம் இங்கே:-
சென்னை லைவ்நியூஸ் என்ற அமைப்பு நடத்தும் கொலுப் போட்டிகள் இங்கே:-
பார்லே நிறுவனம் நடத்துக் கொலு கலாட்டா போட்டி:-
மற்றொரு போட்டி இங்கே:-
ஏர்டெல் நிறுவன நடத்தும் போட்டி இங்கே:-
யூஏஈ தமிழ் சங்கம் நடத்தும் உலக அளவிலான நவராத்திரி கொலு போட்டி
மேற்கண்ட போட்டிகள் தவிர வேறு ஏதேனும் விடுபட்ட போட்டிகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
தொடரும்