Wednesday, May 11, 2016

ஆரஞ்சு மிட்டாய் ஆராவமுதன்

எம்.எல்.ஏவாக இருந்த ஆராவமுதன் ஆடி அமாவாசையன்று அதிர்ஷ்டம் அடித்து, அமைச்சரானார். கவர்னர் மாளிகையில் பதவியேற்ற மறு நாளே குல தெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குப் பயணித்தார். ஆராவமுதன் அமைச்சராகி விட்டார் என்றதுமே பாரியூர் பரபரப்பாகி விட்டது. அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழாவுக்கு எற்பாடு செய்து விட்டார்கள்.  பள்ளியின் ப்யூன் முதல் தலைமை ஆசிரியர் வரை பாராட்டு விழாவில் பரவசமாய் இருந்தார்கள். அதிலும் தமிழ் ஆசிரியர் தங்கதுரைக்கு ஒரே மகிழ்ச்சி.  ஆம். அவர்தான் மூன்றண்டுகள் ஆராவமுதனுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர். அவர்...