Thursday, September 29, 2011

கொலு வைப்பது எப்படி?

கடந்த சில நாட்களில் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதனைப பற்றிய ஒரு சுருக்கம் இங்கே.

முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது.

மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது.

நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.

ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது.

ஆறாம் பதிவில் தீமாட்டிக் கொலு குறித்து விளக்கப்பட்டது.

ஏழாம் பதிவில் கொலுவுக்கு அழைக்கும் முறையும், பூஜை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.  

எட்டாம் பதிவில் கொலுப் போட்டிகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.

ஒன்பதாம் பதிவில் கொலு முடிந்தவுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவை விளக்கப்பட்டது.

நவராத்திரியின் போது கொலு வைக்கும் அனைவருக்கும் இந்தப் பதிவுகள் பயனுள்ளதாக இருந்திருக்குமென்று நம்புகின்றேன்.

-       சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவை
கொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும். 

அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பின்பு அவற்றை அட்டைப் பெட்டியில் அடுக்க வேணடும்.  தேவைப்ப்பட்டால் இந்த அட்டை பெட்டிக்குள் பேப்பர் கட்டிங் துகள்களையும் இட்டு நிரப்பி பொம்மைகள் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அட்டை பெட்டியின் வெளியில் ஒரு மார்க்கர் பேனா கொண்டு உள்ளே என்னென்ன பொம்மைகள் வைத்திருக்கின்றோம் என்று எழுதி வைத்து விடுதல் வசதியாக இருக்கும். ஸ்லாடட் கொலுப் படிகளை கழட்டும் முன்னர் எந்த படி எந்த ஆங்கிளில் எத்தனையாவது ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்று மார்க்கர் பேனாவில் குறித்து வைக்க, அடுத்த முறை படிகள் கட்டுவது எளிதாகும்.  

வருடா வருடம் புதுப் பொம்மைகள் வாங்குபவராக இருந்தால் வீட்டில் பொம்மைகள் எக்கச்சக்கமாக சேர்ந்து ஒரு நேரத்தில் கையாளுவது கடினமாக இருக்கும். எனவே வருடா வருடம் ஒரு சில பொம்மைகளையாவது வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம்.

-       நிறைந்தது

- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவை
கொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும். 

அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பின்பு அவற்றை அட்டைப் பெட்டியில் அடுக்க வேணடும்.  தேவைப்ப்பட்டால் இந்த அட்டை பெட்டிக்குள் பேப்பர் கட்டிங் துகள்களையும் இட்டு நிரப்பி பொம்மைகள் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அட்டை பெட்டியின் வெளியில் ஒரு மார்க்கர் பேனா கொண்டு உள்ளே என்னென்ன பொம்மைகள் வைத்திருக்கின்றோம் என்று எழுதி வைத்து விடுதல் வசதியாக இருக்கும். ஸ்லாடட் கொலுப் படிகளை கழட்டும் முன்னர் எந்த படி எந்த ஆங்கிளில் எத்தனையாவது ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்று மார்க்கர் பேனாவில் குறித்து வைக்க, அடுத்த முறை படிகள் கட்டுவது எளிதாகும்.  

வருடா வருடம் புதுப் பொம்மைகள் வாங்குபவராக இருந்தால் வீட்டில் பொம்மைகள் எக்கச்சக்கமாக சேர்ந்து ஒரு நேரத்தில் கையாளுவது கடினமாக இருக்கும். எனவே வருடா வருடம் ஒரு சில பொம்மைகளையாவது வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம்.

-       நிறைந்தது

- சிமுலேஷன்

Wednesday, September 28, 2011

கொலு வைப்பது எப்படி? - 08

கொலுப் போட்டிகள்
தற்காலத்தில் கொலுப் போட்டிகள் நடப்பது சாதாரணமாகி விட்டது. இதற்கெல்லாமா போட்டிகள் என்று எண்ணினாலும், இந்தப் போட்டிகள் பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கொலு போன்ற விஷயங்களில் மேலும் ஆர்வம் கொண்டு பங்கெடுக்க செய்கின்றபடியால் இத்தகைய போட்டிகளை மனமார வரவேற்கலாம். கொலுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்காக ஒரு சிறப்பான கொலு வைத்திருத்தல் அவசியம். தீமாட்டிக் கொலுவாக இருத்தல் இன்னமும் சிறப்பு.
கொலுப் போட்டிகள் பல வைகப்படும். பெரும்பாலான போட்டிகளில் கொலு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உங்கள் கொலுவை பற்றிய புகைப்படங்கள் எடுத்து விளக்கங்களும் எழுதிப் போட்டியாளர்களுக்குத் தபாலில் அனுப்ப வேண்டும். அவர்கள அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் அளிப்பார்கள். இது தவிர சில போட்டியாளர்கள் தங்களது நடுவர்களை தேர்ந்தெடுக்கப்ப்ட்ட ஒரு சில வீடுகளுக்கு அனுப்புவார்கள். நடுவர்கள் உங்கள் வீட்டுக்கு வரும் போது, அவர்கள் கொலு எப்படி பாரம்பரியமாக அமைக்கப்பட்டுள்ளதா, என்னென்னெ சிறப்பம்சங்கள் உள்ளன என்பவற்றைக் கவனிப்ப்பது மட்டுமல்லாத்து, விருந்தினர்களை நீங்கள் உபசரிக்கும் முறைகள், அவர்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்கும் முறைகள் ஆகியவற்றிற்கும் மதிப்பெண்கள் அளிப்பர்கள். இவர்கள் முன்னறிவின்றி வரலாம். எனேவே வீட்டில் உள்ள எவரும் நடுவர்களை சந்த்திக்க தயார் நிலையில் இருத்தல் நல்லது.
இந்த வருடம் கொலுப் போட்டிகள் நடத்துவர்கள் பற்றி ஒரு சில குறிப்புகள் தருகின்றேன்.
வசந்த் & கோவும், தி ஹிண்டு நாளிதழும் சேர்ந்து நடத்தும் கொலுப் போட்டி குறித்த விபரங்கள் இங்கே:-
“ஸ்ரீ மயிலாப்பூர் ட்ரையோ”எனப்படும் சுமுகி ராஜசேகரன் மெமோரியல் ட்ரஸ்ட்ச் சேர்ந்த்தவர்கள் மயிலாப்பூர் டைம்ஸ் இதழுடன் சேர்ந்த்து கொலுப் போட்டிகள் நடத்துகிறார்கள். இது தவிர இவர்கள் ஒவ்வொரு வருடமும் “கொலு பத்ததி” என்ற தலைப்பில் கொலு வைப்பது எப்படி என்ற ஒரு பட்டறையையும் நடத்துகின்றார்கள். அதன் விபரம் இங்கே:-
விகடன் நிறுவனத்தினர் நடத்து போட்டி விவரம் இங்கே:-
சென்னை லைவ்நியூஸ் என்ற அமைப்பு நடத்தும் கொலுப் போட்டிகள் இங்கே:-
பார்லே நிறுவனம் நடத்துக் கொலு கலாட்டா போட்டி:-
மற்றொரு போட்டி இங்கே:-
ஏர்டெல் நிறுவன நடத்தும் போட்டி இங்கே:-
யூஏஈ தமிழ் சங்கம் நடத்தும் உலக அளவிலான நவராத்திரி கொலு போட்டி
மேற்கண்ட போட்டிகள் தவிர வேறு ஏதேனும் விடுபட்ட போட்டிகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
தொடரும்

கொலு வைப்பது எப்படி? - 07

கொலுவுக்கு அழைத்தல்
அந்தக் காலத்தில் கொலுவிற்கு நண்வர்களை அழைக்க குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை போன்ற வேடங்களிட்டு அவர்களைப் போய் எல்லோரையும் அழைத்துவிட்டு வரச் சொல்வது வழக்கம். பின்னர் நேரில்  சென்று அழைக்க இயலாதவர்கள் போஸ்ட் கார்டில் நவராத்திரி அழைபிதழ்கள் அனுப்பத் துவங்கினார்கள். அதில் தங்கள் கைவண்ணத்தையும் காண்பிக்க முடிந்தது. அப்புறம் போன் மூலமாகவும் இமெயில் மூலமாகவும் அழைப்புகள் அனுப்புவது வாடிக்கையாயிற்று. தற்போது சோஷியல் மீடியாக்கள் பிரபலமாக, பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற மீடியாக்கள் மூலம் அழைக்க முடிகின்றது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குப் போகும் பட்சத்தில், எல்லோரையும் எல்லா நாட்களிலும் எண்டர்டெய்ன் பண்ணுவது கடினம்தான். எனவே அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், உடன் வேலை செய்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனைத்தனியாக நாள் ஒதுக்கி அழைத்தால் ஈஸியாக இருக்கும். மேலும் ஒவ்வொரு க்ரூப்புக்கும் ஒவ்வொரு விதமான கிப்ட் வாங்கியிருக்கலாம். ஒரே நாளில் வருபவர்களுக்கு  ஒவ்வொரு விதமான் கிப்ட் கொடுத்து அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.

வருபர்களுக்கு பாய் விரித்து அமரச் செய்து, கொலுவினை ஆற, அமரப் பார்க்கச் சொல்லலாம். பின்னர் பாடத் தெரிந்தவர்களைப் பாடச் சொல்லலாம்.   பின்னர் வெத்தலை, பாக்கு, பழம், தேங்காய் உள்ளிட்ட தாம்பூலம், சுண்டல் மற்றும் கிப்ட் பொருட்களைத் தரலாம். அவற்றை எடுத்துச் செல்ல வசதியாக பை ஒன்றும் கொடுத்தால் நல்லது. இவற்றையெல்லாம் அழகழகாக அடுக்கி வைப்பது, விருந்தினர்களுக்குக் கொடுப்பது போன்ற வேலைகளை வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்தால் அவர்கள் ஆர்வமுடன் செய்வது மட்டுமின்றி, விருந்தினர்களை உபசரிப்பது எப்படி போன்ற பண்புகளையும் கற்றுக் கொள்வார்கள்.

ஒன்பது அல்லது பத்து நாட்களும் ஒவ்வொரு வகை சுண்டல்கள் செய்யலாம். இதற்கு முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுதல் நல்லது. சிலர் வெள்ளிக் கிழமைகளில் புட்டும், சனிக் கிழமைகளில் எள்ளாலான பண்டங்களும் செய்வார்கள். இது தவிர பொட்டுக் கடலை உருண்டை, பொட்டுக் கடலை மாவு, நிலக்கடலை உருண்டை ஆகியவற்றைச் செய்து வைத்துக் கொண்டால் சுண்டல் தட்டுப்பாடு ஏற்படும் போது சமாளிக்க உதவும். சுண்டல் முதலிய பண்டங்களை காலையிலோ அல்லது மாலையிலோ எப்போது செய்கின்றோமோ அப்போதே நைவேத்யம் செய்ய வேண்டும்.

கொலுப்படிகள் முன்பு மாக்கோலம் போட்டு, காவி இட்டு, குத்து விளக்குகள் ஏற்றி வைப்பது நல்லது. கலர்ப் பொடிகள் கொண்டு ரங்கோலி கோலம் போட்டாலும் கவர்ச்சியாக இருக்கும். இது தவிர ஜவ்வரிசி கொண்டு “முத்தால் ஆரத்தி” எடுப்பது விசேஷம். அதாவது ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அதில் பேனாவினால் கோலம் வரைந்து கொண்டு, பின்னர் ஒரு மெல்லிய குச்சியினால் பெவிகால் அல்லது கோந்தை தொட்டுக் கொண்டு கோலத்தின் மீது வரைய வேண்டும். பின்னர் இதன் மீது ஜவ்வரிசிகளை ஓட விட அவை சரியாக பசை உள்ள இடங்களில் ஒட்டிக் கொண்டு விடும். இப்போது காலியாக உள்ள இடங்களில் வண்ணப் பொடிகளைத் தூவிட, முத்தாலாரத்தி தயார். ஒவ்வொரு நாள் இரவும் இந்தக் கோலத்தின் மீது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். நவராத்திரியில் அம்மனுக்குப் பூஜையாக தினமும் கொலு முன் விளக்கேற்றீ, தெரிந்த ஸ்லோகங்கள் சொல்லி, பாட்டுப் பாடி வந்த விருந்தினர்களுக்கு தாம்பூலம், சுண்டல் ஆகியவை கொடுத்து அனைவரும் சென்ற பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டு கொல்லு பெரிய முறையிலோ அல்லது திமாட்டிக் கொலுவாகவோ அமைக்கப்படிருக்கும் பட்சத்தில் அதனை வந்திருக்கும் விருந்தினர்களுக்கு பொறுமையாக, அழகாக விளக்கிக் கூற வேண்டும். சில குழந்தைகள் ஆர்வக் கோளாறினால் அன்ங்உம் இங்கும் ஓடி உங்கள் ஏற்படுகளைக் கலைத்து விடலாம். இவர்களிடமிருந்து உங்கள் ஏற்பாடுகளைச் சற்றே கவனமாகப்  பார்த்து கொள்ள வேண்டும்.

உறவினர்கள், அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், உடன் வேலை செய்பவர்கள் மட்டுமல்லாது, நம் வீட்டில் வேலை செய்பவர்கள், காவல் வேலை செய்பவர்கள் போன்ற விளிம்புநிலை மாந்தர்களையும் கொலுவுக்கு அழைத்து பொம்மைகளையெல்லாம் காட்டி, வெத்தலை, பாக்கு, சுண்டல் ஆகியவற்றைக் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நமக்கும் அவர்களையும் மதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது என்ற ஒரு திருப்தி கிடைக்கும்.

நவராத்திரியின் நிறைவு நாளன்று ஆயுத பூஜை, விஜயதசமி பூஜகள் செய்ய வேண்டும். ஆய்த பூஜயன்று, உங்கள் புத்தகங்கள், இசைக் கருவிகள், ஓவியம் உள்ளிட்ட மற்ற கலைகள் சம்பந்தமான கருவிகள், உங்கள் தொழிற்கருவிகள் ஆகியவற்றை கடவுள் முன் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஆய்த பூஜையன்று படிப்பற்கும், பாடுவதற்கும் ஓய்வு கொடுப்பார்கள். இன்றைய தினம், பிரசாதமாக சிலர் கடலைப் பருப்பு சுண்டலும், சுகியனும் செய்வார்கள். மறுநாள விஜயதசமியன்று மீண்டும் கடவுள் முன்பு வைக்கப்பட்ட கருவிகளுக்கு எல்லாம் மீண்டும் பூஜை செய்து புத்தகங்கள் படித்து, பாட்டுப் பாடி, இசைக் கருவிகள் இசைத்து அறிவு வளர வேண்டிக் கொள்ள வேண்டும்.
-       தொடரும்
 - சிமுலேஷன்

Sunday, September 25, 2011

Monday, September 19, 2011

கொலு வைப்பது எப்படி? - 06

தீமாட்டிக் கொலு
பல வருடங்களாக ஒரே மாதிரி கொலு வைத்து வந்து அலுப்பு ஏற்பட, புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களின் படைப்புத்தான் தீமாட்டிக் கொலு (Thematic Kolu). அதாவது ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல பொம்மைகளைத் தேர்வு செய்து அழகுற அதற்கான சூழலை ஏற்படுத்தி வைப்பது தீமாட்டிக் கொலுவாகும். இதில் கொலு வைப்பரின் படைபாற்றல் வெளிப்படுவது மட்டுமின்றி கொலுவினைப் பார்ப்பவர்களுக்கும் நன்கு பொழுது போகும். இன்றைய தினம் பலரும் பலவிதமான கருத்துக்களில் தீமாட்டிக் கொலு வைக்கின்றார்கள்.  இவற்றில் சில.

பெண்கள் – இதில் முப்பெருந் தேவியர், ஆண்டாள், மீரா, ஔவையார், நடன மாது, பாடகி ஆகிய பொம்மைகளை வைக்கலாம்.

எண்கள் - 1. ஒரே சூரியன், 2.பிள்ளையார்-முருகர், 3. மும்மூர்த்திகள், 4.நான்முகன், 5.பஞ்ச பூதங்கள், 6.ஆறுமுகன் – கார்த்திகைப் பெண்டிர், 7.ஏழு குதிரை பூட்டிய தேர், 8.அஷ்ட லஷ்மி, 9.நவக்ரகங்கள், 10.தசாவதாரம்

தீமாட்டிக் கொலு வைக்க செட்டு செட்டாக பொம்மகைள் இருந்தால் நல்லது. பாரம்பரியமாக பொம்மை விற்கும் இடங்களில் செட் பொம்மைகள் கிடைக்கும். உதாரணமாக, தசாவதார செட், ஆழ்வார்கள் செட், சமயக் குரவர்கள் நால்வர் செட், அஷ்ட லஷ்மி செட், இராவணன் தர்பார் செட், கல்யாண செட், ஊர்வலம் செட் ஆகியவை புகழ் பெற்றவை. இப்படி செட் பொம்மைகள் இல்லாத் பட்சத்தில் இருக்கும் பொம்மைகளைக் கொண்டு சிவன் திருவிளையாடல்கள், கிருஷ்ண லீலைகள், சர்வம் கிருஷ்ணமயம் போன்ற பரந்த தலைப்புகளில் தீமாட்டிக் கொலு வைக்கலாம்.

தீமாட்டிக் கொலு வைக்கும் போது சிலர் ஆர்வக் கோளாறால், சமீபத்திய சம்பவங்களில் அடிப்படையில் தீமாட்டிக் கொலு வைப்பதும் உண்டு. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அவை சுனாமி, பூகம்பம், தீவிபத்து போன்ற எதிர்மறையான கருத்துக்களின் மீது அமையக் கூடாது. ராஜீவ் காந்தி மரணித்த போது அந்த சம்பவத்தினைக் கூட அடிப்படையாக வைத்து ஒரு வீட்டில் கொலு வைத்திருந்தாக ஞாபகம்! அதே போல சிலர் பள்ளிகளில் நடைபெறும் விஞ்ஞானக் கண்காட்சி போல அமைப்பது கூட உண்டு. தீமாடிக் கொலுவுக்கும் விஞ்ஞானக் கண்காட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் செய்யும் ஆர்வக் கோளாறில் இதுவும் ஒன்று. தீமாட்டிக் கொலுக்கள், இந்தியப் பாரம்பரியத்தினையும், கலாச்சாரத்தினையும் விளக்கும் வண்ணமோ அல்லது ஒரு பாஸிட்டிவான கருத்தினை விளக்கும் வண்ணமோ அமைவது நல்லது.

தீமாட்டிக் கொலு வைத்த பின்னர், அதனை வந்திருப்பவர்களிடம் நல்ல முறையில் எடுத்து விளக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கூறுவது இயலாத பட்சத்தில், யாவருக்கும் புரியும் வண்ணம் சிறு விளக்க அட்டைகளைக் கூட செய்து வைக்கலாம். ஒரு வீட்டில் ஒரு பெண்மணி தனது வீட்டில் வைக்கப்பட்ட தீமாட்டிக் கொலு பற்றி   10 நிமிடங்களுக்கு கேசட்டில் ஆடியோ ரிகார்டிங் செய்து வைத்து அவ்வப்போது அதனை இயக்கி எல்லொருக்கும் விளக்கம்  கொடுத்து வந்தார்.

எங்கள் வீட்டில் ஒரிரு வருடங்கள் முன்பாக வைத்த ஒரு தீமாட்டிக் கொலு பற்றி இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். நாங்கள் எடுத்து கொண்ட தலைப்பு, “அறம் வளர்த்த ஆன்றோர்கள்”. இந்தத் தலைப்பினில் சமயக் குரவர்கள் நால்வர், பனிரெண்டு ஆழ்வார்கள், மீரா, இராமலிங்க வள்ளலார், புத்தர், திருவள்ளுவர்,  சங்கீத மும்மூர்த்திகள், விவேகானந்தர் ஆகீயோர் பொம்மைகளை வைத்தோம். இதில் ஒவ்வொரு பொம்மைக்கும் கவித்துவமான தலைப்புக்கள் வைத்து அதனை அச்சடித்து பொம்மை பக்கத்தில் ஒட்டியும் வைத்தோம்.





தொடரும்…

- சிமுலேஷன்

Thursday, September 15, 2011

கொலு வைப்பது எப்படி? - 05

கொலுவிற்கு மதிப்புக் கூட்டுதல்
எவ்வளவு படிகள் கொலு வைத்தாலும், எத்தனை அழகான பொம்மைகளை வாங்கி வைத்தாலும், கொலுவுக்கு மதிப்புக் கூட்டுவது படிகளைச் சுற்றி வைக்கப்படும் பூங்கா, தெப்பக் குளம், மலை போன்ற சமாச்சாரங்கள்தான். ஏனென்றால் இங்குதான் நாம் குடும்பத்திலிருக்கும் அனவரது பங்களைப்பினையும் பெற்றுக் கிரியேட்டிவிட்டி எனப்படும் படைபாற்றலைக் காண்பிக்க இயலும்.  இப்போது இவையனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் பூங்கா அமைக்க இடம் இருகின்றதா என்று பார்த்துக் கொண்டு அதற்குத் தோதான இடத்தினைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பூங்கா  போன்ற சமாச்சாரங்களில் சின்னஞ்சிறு பொம்மைகளைப் பயன்படுத்தப் போவதால் அவை விருந்தினர்களின் கண்பார்வையில் இடம் பெறும் வண்ணம் அமைக்க வேண்டும். பூங்கா செய்ய ஒரு பெரிய மரப் பெட்டியினைப் எடுத்து கொள்ளலாம். ஆனால் தண்ணீர் பட்டு ஈரமாகி, மரப்பெட்டி கெட்டு விடலாம். அதறுகுப் பதிலாக செங்கற்களை வரிசையாக அடுக்கி அதற்குள் மணலைப் பரப்பி, அதன் மேல் செம்மண்ணையும் பரப்பி, நீர் தெளிக்க வேண்டும். இதில் ராகி, கம்பு போன்ற தானியங்களைத் தூவி, மீண்டும் நீர் தெளித்து வர அவை ஓரிரு நாட்களில் முளைவிட்டு அழகாகக் காட்சி தரும். கடுகு போன்றவற்றைப் பயன்படுத்தினால் அவை ஓரிரு நாளில் கிடு,கிடுவென வளர்ந்து அடுத்த சில நாட்களில் தலை சாய்ந்து அசிங்கமாகக் காட்சியளிக்கும். எனவே கடுகினைத் தவிர்த்து  ராகி எனப்படும் கேழ்வரகினைப் பயன்படுதலே சிறந்தது. இவ்வாறு செய்வதற்குப் பதிலாக சிறிய செவ்வக வடிவப் ப்ளாஸ்டிக் பெட்டிகளில் தானியங்களை மாடுலராக வளர்த்து அந்தப் பெட்டிகளைக் கூடத் தேவையான இடங்களில் வைக்கலாம். இந்த தண்ணீர் தெளித்தல், செடி வளர்த்தல் போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் எங்களுக்கு ஒத்து வராது என்று எண்ணினீர்களென்றால், இருக்கவே இருக்கிறது, ப்ளாஸ்டிக் செடிகள், மரங்கள் மற்றும் புல்வெளிகள். இவற்றைத் தேவையான அளவு வாங்கிப் பரத்தலாம். சிறிய ப்ளாஸ்டிக் கப்புகளில் இருப்பமான பேப்ரிக் பெயிண்ட் அடித்து, அவை காய்ந்த பின்னர் அவற்றில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கரைசலை ஊற்றி செயற்கை செடிகளையும் மரங்களையும் ஆங்காங்கே நட்டு வைக்கலாம்.


புல்வெளியினைச் சுற்றி அட்டையால் காம்பவுண்டுச் சுவர்கள் எழுப்பி அவற்றிக்கு அழகாகப் பெயிண்ட் அடிக்கலாம். பூங்காவினுள் குட்டிக் குட்டியாகச் சிலைகளும் வைக்கலாம். உள்ளே கற்களாலோ அல்லது மணலாலோ ரோடுகள் அமைக்கலாம். வேலி, பூங்கா விளக்குகள், பூங்கா நுழை வாயில், கதவு ஆகியவற்றை உங்கள் கற்பனை வளத்திற்கேற்ப அமைக்கலாம். இந்த்ப் பூங்காவினுள் பொம்மைகளை வைக்கும் போது அவை அளவு விகிதம் (Proportion) சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லயென்றால் ஒரு யானை பொம்மை பக்கத்தில் சம்பந்தம் இல்லாத அளவில் பெரிய கிளி பொம்மை வைக்க ரொம்பவுமே தமாஷாக இருக்கும்.

அடுத்தாக வைக்க வேண்டியது தெப்பக் குளம். வீட்டில் கான்க்ரீட்டால் ஆன ரெடிமேட் ஹோமகுண்டம் இருந்தால் அதனை தெப்பக் குளம் செய்யப் பயன்படுத்தலாம். அல்லது உலாகத்தால் ஆன தட்டுக்களில் தண்ணீர் விட்டும் இதனை செய்யலாம். குண்டத்தின் அல்லது தட்டின் அடியில் வெளிர் நீலம் அல்லது பச்சை நிறத்தில் வண்ணம் அடித்துக் கொள்ளலாம். மீண்டும் தண்ணீர் போன்ற சமாச்சாரங்கள் அலர்ஜி என்றால், ஒரு வெளிர் நீல நிறக் காகித்தத்தின் மேல் ஒரு செவ்வகக் கண்ணாடி பதித்து குளத்தினை சிமுலேட் செய்யலாம். தண்ணீர் இருப்பது போலவே தெரியும். குளத்தின் மையத்தில் நீராழி மண்டபம் அமைக்க வேண்டும். தண்ணீரில் சிறு, சிறு மீன்கள், ஆமை போன்ற நீந்தும் உயிரினங்களை விடலாம். குளத்தின் கரையில் ஆங்காங்கே மனிதர்கள் இருப்பது போல வைத்தால் இயற்கையாக இருக்கும்.


பூங்கா, தெப்பக் குளம் வைத்தது போக இன்னமும் இடம் இருக்கிறது என்று எண்ணும் பட்சத்தில் ஒரு மலை அல்லது குன்றம் அமைக்கலாம். ஓரளவு கொண்ட கற்களை அடுக்கி வத்தோ அல்லது பழைய செய்தித் தாட்களையோ கசக்கிப் போட்டோ அதன் மீது மண்ணைக் குழைத்துப் பூசி மலையினை உருவாக்கலாம். இந்துப் பாரம்பரியத்தின்படி எந்த ஒரு மலையின் மீதும் ஒரு கோயில் கண்டிப்பாக இருக்கும். எனவே மலை மீது ஒரு கோயில் அமையுங்கள. கோயில் அமைத்தால் கீழேயிருந்து அதனை அடைய படிக்கற்களும், வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் அமைக்க வேண்டும். ஏன்? விஞ்ச் அனப்படும் இழுவை ரயில் கூட அமைக்கலாம். கொஞ்சம் அட்டையும், கொஞ்சம் வண்ணமும், சிறிது கற்பனை மட்டுமே தேவை. மலையின் மீது ஆங்காங்கே விளக்குகள், மரங்கள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை அழகுடன் வைக்க வேண்டும்.


இவை தவிர உங்களிடம் இருக்கும் இடம் மற்றும் பொருட்களின் வசதிக்கேற்ப கிரிக்கெட் செட், ரயில் நிலையம், மார்க்கெட் போன்ற எந்த விதமான கருத்தையும் பிரதிபலிக்கும்  வண்ணம் செட் போட்டு உங்கள் வீட்டு கொலுவின் மதிப்பக் கூட்டலாம்.
 தொடரும்…

- சிமுலேஷன்

Tuesday, September 13, 2011

அருண் ஷோரி எனக்கு எழுதிய மறுமொழி

அருண் ஷோரி அவர்கள் 1982ஆம் வருடம் மக்ஸாஸே விருது பெற்ற போது அவருக்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுத, அவர் என்னையும் மதித்து ஒரு கடிதம் எழுதிருந்தார் என்பதனை முன்பு ஒரு முறை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தேன்.


இப்போது சில வாரங்களுக்கு முன்பு  தனது புத்தகத்தை வெளியிட சென்னன வந்திருந்த அவர் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 04

கொலு வைத்தல்

இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட்டட் ஆங்கிளைக் கொண்டு எளிதில் படிகள் அமைக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப 5,7,9 என்று ஒற்றை படையில் படிகள் அமைக் வேண்டும். கொலுவானது அமாவாசை அன்று வைப்பதுதான் சம்பிரதாயம். ஆனால் அமாவசையன்று கலசம் வைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டு, மற்ற பொம்மைகளை ஓரிரு நாட்கள் முன்பாகவே வைக்கலாம்.



படிகள் அமைத்த பின்னர், அதனை மறைக்கும் வண்ணம், இரண்டு பக்கங்களிலும் வேஷ்டியோ அல்லது அங்கவஸ்திரங்களோ கொண்டு மறைக்க வேண்டும். ஜம்ப் க்ளிப் துணை கொண்டு, துணிகள் கொச கொசவென்று தெரியாதபடி பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள டைனிங் டேபிளைப் போல நல்ல முறையில் டக் செய்ய வேண்டும். பிறகு படிகளின் மீது ஒரு நல்ல வேஷ்டியினையோ அல்லது புடவையினையோ விரிக்க வேண்டும்.


படிகளின் இரண்டு பக்கங்களிலும் ஜரிகை பார்டர் வருமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு விரிக்கும் துணி பருத்தியினால் ஆனது நல்லது. அப்படியில்லாமல் நைலக்ஸ் அல்லது பாலியெஸ்டர் போன்றவற்றால் இருந்தால் வழுக்கி விழுந்து விடும். ஜரிகை பார்டர்ருக்கு விசிறி மடிப்பு அங்க வஸ்திரம் அல்லது கடைகளில் கிடைக்கும் பார்டர் ஜரிகையினைக் கூடப் பயன்படுத்தலாம்.



இப்போது கொலுப்படி அமைத்து அதன் மேல் துணியையும் போட்டு பொம்மைகள் வைக்கத் தயாராக உள்ளது  கொலுப்படியில் பொம்மைகள் வைப்பதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும். அது என்னவென்று என்று அறிந்து கொள்வோம். முதல் படியில் கலசம் வைக்க வேண்டும். ஒரு வெள்ளி அல்லது தாமிர சொம்பில் அரிசி, வெற்றிலை, பாக்கு, நாணயம் ஆகியவற்றை இட்டு மாவிலைக் கொத்து, தேங்காய் கொண்டு மூட வேண்டும். அம்மன் முகம் இருப்பவர்கள் சொம்பில் அதனையும் வைத்து அலங்காரம் செய்யலாம். 

அடுத்தபடியாக மரப்பாச்சி பொம்மைகளை வைக்கலாம். மரப்பாச்சி பொம்மைகள என்பவை திருப்பதி போன்ற தலங்களில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆண், பெண் ஜோடி பொம்மைகள். இந்த மரப்பாச்சி பொம்மைகளுக்கென்று தனியாக ஆடை. அலங்காரங்கள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி அணிவிக்கலாம். அல்லது நாமே வீட்டில் செய்து மாட்டலாம். இதே படியில் முப்பெருந்தேவியர்களான லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி பொம்மைகளை வைக்கலாம். நவராத்திரியே அவர்கள் பண்டிகைதானே!. பிள்ளையார் பொம்மைக்கும் முதல் படியில் இடமுண்டு.

அடுத்த படியில் மற்றைய கடவுளர்களான சிவன், விஷ்ணு, முருகன் போன்றவர்களின் சிலைகளை வைக்கலாம். அடுத்ததாக அடியார்களான, நாயன்மார்கள், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள், மீரா, இராமலிங்க அடிகளார் போன்ற ஆன்றோர்களின் பொம்மைகளையும், அதற்கடுத்தாற்போல போலீஸ்காரர், செட்டியார் போன்ற மனித பொம்மைகளையும் வைக்கலாம்.
 அதற்கும் கீழ் படியில் விலங்குகள், பறப்பன மற்றும் ஊர்வன பொம்மைகளை வைக்க வேண்டும். பிறகு கடைசிப் படியில் சங்கு, சிப்பி, மாக்கல் பொம்மைகள், பழுக்காச் சொப்பு பொன்ற பொருட்களை வைக்கலாம்.



இப்படி நாம் எந்தப் பொம்மைகளை எந்தெந்தப் படிகளில் வைக்க வேண்டுமென்று பார்த்ததில், ஒரு ஒழுங்கினைக் கண்டு பிடித்திருக்கலாம். அதாவது கடைமட்டப் படியில்  அஃறிணை பொருட்களையும், அதற்கு அடுத்ததில் ஓரறிவு, ஈரறிவு கொண்ட  உயிரினங்களையும், அதற்கு அடுத்ததாக ஆறறிவு பெற்ற மாந்தர்களையும், பின்னர் அடியார்களையும், பிறகு தேவர்கள் முதலானோரையும், முதல் படிகளில் கடவுளர் பொம்மைகளையும் பரிணாம வளர்ச்சிக்கேற்ப வைந்திருக்கும் ஒழுங்கு புலப்பட்டிருக்கும்.


பொம்மகைளைப் படியில் வைக்கும் போது சிவன்-பார்வதி, பெருமாள்-தாயார், போன்ற ஜோடிகளைப் பிரித்து வைக்காமல் சேர்த்தே வைக்க வேண்டும். மற்றபடி இரண்டு புறாக்கள், இரண்டு பூனைகள, இரண்டு நாய்கள் என்றபடி பொம்மைகள் இருந்தால் ஒரே படியின் இந்த ஓரத்தில் ஒன்றும், அந்த ஓரத்தில் ஒன்றுமாக சிம்மெட்டிரிக்கலாக அமர்த்தலாம்.
தொடரும்…
- சிமுலேஷன்

Monday, September 12, 2011

கொலு வைப்பது எப்படி? - 03

முன்னேற்பாடுகள் – கொலு வைக்குமிடம்
முதன்முறையாகக் கொலு வைக்க இருப்பவர்கள், கொலு வைக்கும் இடத்தினைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். கொலு கிழக்குப் பார்த்து இருப்பது நல்லது என்றாலும், அபார்ட்மெண்ட்களில் எந்த இடம் வசதியோ அப்படித் தேர்வு செய்து கொள்ளலாம்.  முதலில் இந்த இடத்தையும், இந்த அறையியும், ஜன்னல்களையும்  ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விருந்தினர்கள் வரும் இந்த அறையிலுள்ள ஃபேன் முதலானவற்றை சோப் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பளிச்சென துடைக்கலாம்.  ட்யூப் லைட் மற்றும் அலங்கார விளக்குகளையும் அவற்றின் ஷேடுகளையும் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். திரச்சீலைகள் இருந்தால், அவற்றையும் கழட்டித் துவைத்து அயர்ன் செய்து மாட்டலாம்.  கொலு வைக்கும் இடத்திற்கு மேல் தோரணங்கள் கட்டத் தோதாக, சீலிங்க்கிலிருந்து அரை அடி தூரத்தில் நான்கு புறங்களிலும் ஆணி அடித்து அவற்றின் குறுக்கு நெடுக்காக துருப் பிடிக்காத இருப்புக் கம்பிகளை கட்டி வைக்கலாம். இந்தக் கம்பிகள் தோரணங்கள் கட்டத் தோதாக இருக்கும்.

கொலுப்படிகள் வைக்கும் இடத்திற்கு மேலாக துணியால் ஒரு கூடாரம் அமைத்தால் எடுப்பாக இருக்கும். இதனை விதானம் அல்லது அஸ்மான்கிரி என்று சொல்லுவார்கள். இவை கிரி ட்ரேடர்ஸ் அல்லது காதி கிராமோத்யோக் பவன் போன்ற கடைகளில் கிடைக்கும். இவை விலை அதிகம் என்று எண்ணினீர்கள் என்றால் உங்கள் வீட்டிலுள்ள புதிதான, பயன்படுத்தாத பெட்-ஸ்பிரெட்டைக் கூடப் பயன்படுத்தலாம். இதனை கொலுப்படியின் மேலே கூடாரம் போலக் கட்ட வேண்டும். அங்கே மின் விசிறி இருந்தால் அதனக் கழட்டிவிட்டு, ஆஸ்மானகிரி துணியில் ஒரு சிறிய துளையிட்டு அதனைக் கம்பிகளில் கட்டி விட்டுப் பின்னர் மின் விசிறியினை மாட்டலாம். இந்தத் தோரணத்திற்கு அழகூட்ட ரசகுண்டுகள், சமிக்கி வேலைப்பாடுகள் அமைந்த தெர்மோகோல் பதக்கங்கள் ஆகியவற்றை ஆங்காங்கே மாடி வைக்கலாம்.  இதற்குப் பின்னர் சுவற்றில் ப்ரேம் செய்யப்பட்ட துணியில் வரையப்பட்ட ஓவியங்களையும் மாட்டி வைக்கலாம். கொலு வைக்குமிடத்தை நன்கு பெருக்கி, மெழுகி கோலமிடலாம்.

பொம்மைகளை பரணிலிருந்து பத்திரமாக இறக்கி ஒவ்வொரு பொம்மையாக எடுத்து துணி கொண்டு தூசி தட்ட வேண்டும். இதற்கு ஒரு பட்டை பெயிண்டிங் பிரஷ்ஷினையும் உபயோகப்படுத்தலாம். பீங்கான் பொம்மைகளை சோப் கொண்டு அலம்பலாம். பொம்மைகள் சிறிய அளவில் உடந்திருந்தால் பெவிகால், குவிக்-பிக்ஸ் அணை கொண்டு சரி செய்யலாம். பொம்மைகளின் வர்ணங்கள் மங்கி இருந்தால், பொம்மைகளின் தேவைக்கெற்ப 'எனாமல் பெயிண்டோ' அல்லது 'வாட்டர் கலரோ' கொண்டு வண்ணம் தீட்டலாம். முடியவில்லயென்றால், குறைந்த பட்சம், 'கோல்டன் கலர் பெயிண்ட்' வாங்கி வந்து பொம்மைகளின் கிரீடம், மற்றும் இதர ஆபரணங்களுக்கு மட்டும் தங்க நிறத்தில் வர்ணம் தீட்டி விட்டாலே போதுமானது. அவை புதிய பொம்மைகள் போல ஜொலிக்கும்.


நல்ல பொம்மை உடைந்து விட்டது, ஆனால் நம்மால் சரி செய்ய முடியாது என்று எண்ணும் பட்சத்தில் பொம்மை ரிப்பேர் செய்பவர்களிடம் கொடுத்துச் சரி செய்யலாம். மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகே பொம்மைகளை சரி செய்து வர்ணம் தீட்டி, புதிய பொம்மை போலவே செய்வதற்கென்று ஒரு பிரத்யேகக் கடை உள்ளது. பரமசிவம் என்பவர் இந்தத் தொழிலைப் பல வருடங்களாகாச் செய்து வருகின்றார். இந்த மாதிரிக் கடைகள் ஒரு சிலவே இருப்பதால், பொம்மைகளை ரிப்பேர் செய்ய நீங்கள் முந்திக் கொள்ள வேண்டியிருக்கும்.


தொடரும்…
- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 02

முன்னேற்பாடுகள் – வாங்க வேண்டியவை
நாம் கொலு வைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்த பிறகு அதற்குத் தேவையான ஏற்பாடுகளை எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாகக் செய்து கொள்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. எந்த மாதிரி கொலு, எவ்வளவு பெரிய கொலு, எங்கே கொலு வைக்கப் பாகின்றோம் போன்ற விஷயங்களை முன்னதாகவே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இவற்றிக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்றும் பட்டியலிட்டுக் கொண்டு பத்துப் பதினைந்து நாட்கள் முன்பாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது நவராத்திரி துவங்குவதற்கு முந்தைய சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளைல் இவற்றை வாங்கி வைத்து கொள்வதும் மற்றைய ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.

கொலுப்படிகள்
பாரம்பரியமாகக் கொலு வப்பவர்கள் வீடுகளில் கொலுப்படிகள் இருக்கும். மரத்தினாலோ அல்லது இரும்பினாலோ இந்தப் படிகள் செய்யப்பட்டிருக்கும். இவை போன்ற படிகள் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பலகைகள், பெஞ்சுக்கள், மேஜைகள், புத்தகங்கள் உதவி கொண்டு படி கட்டுவார்கள். புதிதாகக் கொலு வைக்க இருப்பவர்கள், இவ்வாறு கஷ்டப்படாமல், புதிதாகக் கொலுப்படிகள் வாங்கிக் கொள்வது நல்லது. மரத்தில் வேண்டுமென்றால் ஆசாரியிடம் ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் மரப்படிகளைக் கையாள்வது கடினம். மேலும் விலையும் அதிகம்.


எனவே எளிதில் கழட்டி மாட்டக் கூடிய ஸ்டீல் ஸ்லாட்டட் ஆங்கிள்களால் அமைந்த இரும்ப்புப் படியே சிறந்தது. இவை ஹார்ட்வேர் கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். எண்ணிக்கை குறைந்த படிகள் வைப்பவர்களும்,   குறைவான பொம்மைகள் வைப்பவர்களும், மெல்லிய தகடுகள் கொண்ட் விலை குறைந்த படிகளை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த மெல்லிய தகடுகள் மூலம் அதிகப்படியான படிகள் வைத்தால் அவற்றின் மீது நாம் ஏறி பொம்மகளை வைக்கும் போது இந்த மெல்ல்லிய தகடுகள கண்டிப்பாக வளைந்து விடும். எனவே நிறைய கனமான பொம்மைகளை வைக்க எண்ணினாலோ, அல்லது அதிகப் படிகள் வைக்க எண்ணினாலோ, சற்றெ அதிக ‘கேஜ்’ உள்ள தடிமனான தகடுகள் கொண்ட ஸ்லாட்டட் ஆங்கிள் படிகள் வாங்குவது நல்லது. இஅவை சற்றே விலை கூட இருந்தாலும் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு நல்லது.


தற்போது ப்ளாஸ்ட்டிக்கிலும் கொலுப் படிகள் கிடைக்கின்றன. இவை எவ்வளவு வலுவானவை என்பது தெரியவில்லை. ஆனால், எளிதில் பூட்டி மாட்ட்டவும், கழட்டிக் கையாள்வதற்கும் வசதியானவையாக இருக்கலாம். அடிக்கடி வேலை மாற்றல் காரணமாக வீடு மாறுபவர்களுக்கு இவை தோதாக இருக்கும்.

பொம்மைகள்



புதிதாகக் கொலு வைப்பவர்கள் கண்டிப்பாக பொம்மைகள் வாங்க வேண்டும். ஏற்கெனவே கொலு வைப்பவர்கள் கூட வருடா வருடம் புதிது, புதிதாகப் பொம்மகள் வாங்க ஆசைப்படுவார்கள். இப்போது எந்த மாதிரி கொலு வைக்கப் போகின்றோம், அதற்கு எப்படிப்பட்ட பொம்மைகள் வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். ஒரு படியில் வைக்கப்படும் பொம்மைகள், ஏறுமாறான உயரங்களில் இல்லாமல் இருந்தால் பார்வைக்கு அழகாக இருக்காது. எனவே எந்த அளவில் பொம்மைகள் வாங்க வேண்டுமென்று நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.



சென்னை போன்ற நகரங்களிம் கொலுப் பொம்மைகள் வாங்கப் பல இடங்கள் உள்ளன. முக்கியமாக மயிலாப்பூரில் உள்ள வடக்கு மாடவீதி, மற்றும் குறளகம், காதி கிராமோத்யோக பவன், பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் பொம்மைகள் வாங்கலாம். மற்றும் சில தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நவராத்திரி காலங்களில் கல்கத்தா பொம்மைகள் மற்றும் பண்ருட்டி பொம்மைகளை விற்பனை செய்கின்றார்கள். கடை வாடகை போன்ற இதர செலவுகள் இல்லாததால் இவர்களிடம் கடைகளை விட சற்றுக் குறைந்த  விலையில் பொம்மைகளை எதிர்பார்க்கலாம். தற்காலத்தில் மண் பொம்மைகள் தவிர, பேப்பர் மேஷ் பொம்மைகள் நேர்த்தியான அங்க அமைப்புகளுடனும், கண்ணைக் கவரும் வண்ணங்களுடனும், கையாள்வத்ற்கு எளிதாக எடை குறைவாகவும் கிடைக்கின்றன.  சில பொம்மைகள் பஞ்சலோக சிலைகள் போலவே உள்ளன. பார்த்தால் உலோகத்திலான சிலைகளுக்கும் அவற்றிற்கும் வித்தியாசமே தெரியாது. வெளிநாட்டில் உள்ளவர்கள் வாங்கும் வண்ணம் ஆன்-லைனில் பொம்மைகள் வாங்குவதற்கும் தற்காலத்தில் வசதிகள் உள்ளன.

தோரணங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள்


மற்ற பண்டிகைகள் போல மாவிலைத் தோரணம், பனையோலத் தோரணம்  ஆகியவற்றிக் கட்டினாலும், கொலுவிற்கு மேலும் பல அலங்காரங்கள செய்ய வேண்டும். அதற்காக ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள், வீட்டு வாசலில் கட்ட அலங்காரத் தோரணங்கள், கொலு இருக்கும் அறையை அலங்கரிக்க தொம்பைகள், கலர் காகிதத் தோரணங்கள, ஜரிகை, சமிக்கி வேலைப்பாடு கொண்ட தோரணங்கள் ஆகியவையும் தேவைப்படலாம். உங்கள் வீட்டிற்கு என்ன தேவையோ, உங்கள் கொலுவிற்கு எவை அழகாகப் பொருந்தி வருமோ அவற்றை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். அனாவசியமாக வாங்கிக் குவித்துக் குப்பை சேர்க்கக் கூடாது.

பரிசுப் பொருட்கள் மற்றும் இன்ன பிற
கொலுவிற்கு வரும் விருந்தினர்களுக்கு அந்தக் காலத்தில் வெத்தில, பாக்கு, தேங்காய், மஞ்சள் தவிர சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரவிக்கைத் துணி போன்ற பொருட்களைப் பரிசாகத் தருபது வழக்கம். ஆனால் இந்தக் காலத்தில் பெரும்பாலானோர்க்கு இவையெல்லாம் தேவைப்படாது. எனவே இப்போது பலரும் விருந்தினர்களுக்கு உபயோகமான பொருட்களை தருகின்றனர். இந்த வகையில் இன்றைய நாட்களில் ப்ளாஸ்டிக் டப்பா, தட்டு, கூடை, எவர்சில்வர் தட்டு, கிண்ணம், பூக்கூடை, கைப்பை, காதணிகள், வேலைப்பாடமைந்த பர்ஸ் எனப் பலவகை பொருட்களையும் பரிசாக அளிக்கின்றனர். எனவே என்ன பொருட்களை எவ்வளவு வாங்க வேண்டுமோ அவற்றைத் திட்டமிட்டுப் பட்டியலிட்டு முன்னதாகவே வாங்கி வைத்துக் கொண்டால் நேர விரயத்தினைத் தவிர்க்கலாம்.

பரிசுப் பொருட்கள தவிர, சுண்டல் முதலானவற்றைப் பேக் பண்ணிக் கொடுக்க பாலிதீன் பை (ஜிப்லாக்), அல்லது அலுமினியும் ஃபாயிலால் செய்யப்பட்ட டப்பாக்கள் இவையும்  தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நவராத்திரி சமயத்தில் வந்திருக்கும் ஸ்பெஷல் கடைகளிலோ அல்லது மயிலாப்பூர், பாரிமுனை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலோ இவற்றை வாங்கலாம்.
தொடரும்…
- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 01


நவராத்திரிப் பண்டிகை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைக்களில் ஒன்று. குறிப்பாக இந்தப் பண்டிகை வங்காளம், மைசூர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மைசூர் போன்ற நகரங்களில் “தசரா” என்ற பெயரில் அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையின்போது தமிழகத்தில் பலரும் பொம்மைக் கொலு வைப்பது வழக்கம். இதே போல ஜப்பான் நாட்டினரும் பொம்மைகளை வைத்து விழா எடுப்பதாக அறியப்படுகின்றது.

நவராத்திரிப் பண்டிகைக்கும்  மற்ற பண்டிகைக்களுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன். மற்ற பண்டிககள் ஒன்று அல்லது இரண்டு நாடகள்தான் கொண்டாடப்ப்டும். ஆனால் நவராத்திரியோ ஒன்பது அல்லது பத்து நாட்கள தொடர்ச்சியாக விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். மற்ற பண்டிகைகளில் ஆண்கள் அல்லது பெண்கள் மட்டுமே பெரும் பங்கு வகிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நவராத்திரிப் பண்டிகையில் குடும்பத்தில் உள்ள ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என அனைவருமே பங்கு கொள்ளூம் வாய்ப்பு உள்ளது.

அந்தக் காலத்தில் நவராத்திரிப் பண்டிகையானது பதினான்கு நாட்கள் கூட விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடு நிறையக் கொலு வைத்து ஊரில் உள்ள அனைவரையும் தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைப்பார்கள். மைசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற சமஸ்தானங்களில் நவராத்திரி பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தன. பொதுவாகக் கலைகள் எங்கு கொண்டாடப்பட்டதோ அங்கெல்லாம் நவராத்திரிக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொலு வைப்பதில் வீட்டுப் பெண்களும் ஆண்களும் மும்முரமாக இருக்க, கொலுவுக்கு அக்கப் பக்கத்தில் இருப்பவர்களை அழைக்க வீட்டில் உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் செல்வார்கள். அவர்கள் கிருஷ்ணர், ராதை போன்ற வேடமிட்டுச் சென்று அழைப்பதும் வழக்கம்.

பாரம்பரியமாகக் கொலு வைப்பவர்கள் தங்கள் முன்னோர்களின் வழியிலேயே கொலு வைப்பார்கள. அப்படியல்லாமல் சிலருக்கு புதிதாகக் கொலு வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதுண்டு. ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம் அனுமதியளிக்குமோ என்று குழம்புவார்கள். ஒரு நல்ல விஷயத்தைத் துவக்குவத்தில் தயக்கமே தேவையில்லை. இது தவிர, தற்காலத்தில் பெரும்பாலான பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலையில், கொலு வைப்பது என்பது சற்று சிக்கல் நிறைந்தது தான். ஆனால் மனம் இருந்தால் மார்க்கமுண்டு. சரியான திட்டமிடலுடன், குடும்பத்தினரின் ஒத்துழப்பும் கிடைக்கக் கொலு வைப்பது என்பது எளிதான வேலையாகும். அதற்கான எளிய முயற்சியே இந்தப் பதிவுத் தொடராகும்.

தொடரும்…
- சிமுலேஷன்
-


Sunday, September 11, 2011

6961 - சுஜாதா - நூல் விமர்சனம்


இன்றைக்குச் சரியாக 50 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத்  தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோ, கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு.   இந்தக் கதையையும், கல்கி இதழில் வெளிவந்த "ரோஜா" என்ற கதையையும், தினமணிக் கதிரில் வெளிவந்த "ஜோதி" என்ற கதையையும் விசா பப்ளிகேஷன்ஸ் தொகுத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார் இதனை.

ரசனையற்ற ராஜேஷிடன் பந்தம் ஏற்பட, சலிப்பூட்டும் மணவாழ்க்கையில் ஈடுபடும் விமலாவின் மனப்போராட்டத்தினை வருணித்து, அந்த மனப் போராட்டத்திற்கு ஆதாரமாக நடந்த ஒரு நிகழ்ச்சினையே கதைக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளார் சுஜாதா.  இந்த ஆதார நிகழ்ச்சியினை உற்றுக் கவனித்தால் அது, சுஜாதாவின் "அடிமைகள்" என்ற நாடகத்தில் ஏற்படும் முக்கிய சம்பவத்துடன் ஒத்திருப்பதனைக் கவனிக்கலாம்.  தமிழ்க் கதை படிக்கும் வாசகர்களுக்கு, வட இந்தியக் கதாபாத்திரங்களை வைத்து எழுதப்பட்ட கதை, ஒரு போதும் சோர்வை ஏற்படுத்தாமலும் அன்னியப்படுத்தாமலும் எழுதப்பட்டதில் சுஜாதாவின் திறமை நன்கு பளிச்சிடுகின்றது. 50களில் எழுதப்பட்டு கதை என்பதை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டே படித்தால், "அப்போதும், இப்போதும், எப்போதும் வாத்யார், வாத்யார்தான்", என்பதை வாய்விட்டுக் கூறிக் கொண்டேயிருக்கலாம்.

முன்பே கூறியது போல இதே தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்ற இரு கதைகள் "ரோஜா" மற்றும் :ஜோதி". ரோஜா கதையில் ஒரு அப்பாவிப் பெண் , அரசியல் வியாதியான மிருகத்திடம் பலியாகிறாள். பலிஆனது யார் (லட்சுமி)? பலி வாங்கியது யார் (துரை)? என்று முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர் கூறிவிட,  இப்போது கதையினை எப்படி நகார்த்திச் செல்லப் போகின்றார் என்பதுதான் வாசகர்களுக்கு விருந்து.

அடுத்து வரும் ஜோதியில் மீண்டுமொரு பெண் பலியாகின்றாள். இம்முறை குற்றவாளி யார் என்று புரிந்தாலூம் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.    நமக்கு மட்டுமல்ல. இன்ஸ்பெக்க்டருக்கும் கூடத்தான். க்ளைமேக்ஸை அறிய ஆவல் கொண்டு பக்கத்தை புரட்ட, அடுத்த கதை ஆரம்பித்து விட நாம் பல்பு வாங்க்குகின்றோம்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் மூன்றிலுமே உள்ள பொது அம்சம், அப்பாவிப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதுதான். அந்த்க் கால கட்டத்தில் இந்த வகைக் கதைகள் மூலம் சுஜாதா பரபரப்பாகப் பேசப்பட்டிருப்பார். Poetic Justice எனப்படும் 'கவித்துவாமான நீதி' வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தாலும், நடைமுறை வாழ்க்கையில்  அப்படி ஒன்றும் நல்லவர்கள்  எப்போதும் வாழ்ந்ததாகவும், கெட்டவர்கள் எப்போதும் வீழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லையே! எனவே நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு சாராருமே  வாழ்வதும், வீழ்வதும் சகஜமே என்ற நடைமுறை யதார்த்தினை உணர்த்துகின்றன இந்த மூன்று கதைகளுமே.

கதை:            6961
ஆசிரியர்:  சுஜாதா
பதிப்பு:         விசா பப்ளிகேஎஷன்ஸ், 1989-2004
பக்கங்கள்: 120
விலை:        Rs.52

- சிமுலேஷன்

Friday, September 09, 2011

தேவன் நினைவு சொற்பொழிவு - இந்திரா பார்த்தசாரதி - அசோகமித்திரன்

செப்டம்பர் 8ஆம் தேதியன்று சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் 'மெட்ராஸ் புக் க்ளப்'பின் ஆதரவில் நடைபெற்ற "தேவன் அறக்கட்டளை தொடர் சொற்பொழிவின்" முதல் கட்டமாக இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுத்தாளர் தேவன் அவர்களை நினவு கூறும் வண்ணம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும் அசோகமித்திரன் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். ஸ்ருதி இதழின் ஆசிரியர் ராம் நாராயண் முன்னுரை கொடுத்து இவர்களை அறிமுகம் செய்தார். இவற்றின் ஆடியோத் தொகுப்புக்கள் இங்கே:-



    Get this widget |     Track details  | eSnips Social DNA    



    Get this widget |     Track details  | eSnips Social DNA    


- சிமுலேஷன்

Sunday, September 04, 2011

வண்ணநிலவனும் திராவிட மாயையும்

http://simulationpadaippugal.blogspot.com/2011/02/blog-post_19.html

"நகர்ந்து செல்லும் நாட்கள்" என்ற தலைப்பில் கல்கி வார இதழில் 'வண்ணநிலவன்' அவர்கள் கடந்த 6 இதழ்களாக பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகின்றார். இந்த இதழில் 'சுப்பு' அவர்களின் "திராவிட மாயை" என்ற புத்தகம் பற்றி எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் குறித்த எனது ஆயாசத்தினை இந்தப் பதிவில் தெரிவிதிருந்தேன். வண்ணநிலவன் கருத்துக்களும் இதையே சுட்டுகின்றது.

- சிமுலேஷன்