மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .
மாசில் - சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய . மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி . பௌர்ணிமை மதியைக் குறித்தது . வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல் ; வீங்கு - பெருகிய . இளவேனில் - சித்திரை , வைகாசி மாதங்கள் . மூசு வண்டு - ( மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற ) வண்டுகள் . அறை - ஒலிக்கின்ற . பொய்கை - அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை . ஈசன் எந்தை , இருபெயரொட்டு . தலைவனாகிய என் தந்தை . இணையடி - இரண்டு திருவடிகள் . திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார் ;
வீணை , செவி . மதியம் , கண்கள் . தென்றல் , மூக்கு . வண்டு அறை பொய்கை, வாய் . வேனில் மெய் . இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடி நீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார் .
திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - பாடல் எண் - 1
ராகம் - மலயமாருதம்
மெட்டமைத்தவர் - நெய்வேலி கணேஷ்
- சிமுலேஷன்
5 comments:
இனிய பாடல். தமிழின் இனிமையும் சமய பெருமையும் பேசும் தன்னிகரற்ற பாடல். ஒவ்வொரு தந்தையும் தாயும் தன் பிள்ளைகளுக்கு சொல்லி மனப்பாடம் செய்ய வைக்க முன்வர வேண்டும். அற்த்தமற்ற ஆங்கில மழலை ( உண்மை ) பாடல்களைக்காடிலும் நம் தமிழ் மொழியின்கண் உள்ள நல்ல பாடல்களை கற்று கொடுக்கலாம்.
அன்பன்,
கணேசன் இளங்கோவன்
குவளை இணையம்.
இனிய பாடல். தமிழின் இனிமையும் சமய பெருமையும் பேசும் தன்னிகரற்ற பாடல். ஒவ்வொரு தந்தையும் தாயும் தன் பிள்ளைகளுக்கு சொல்லி மனப்பாடம் செய்ய வைக்க முன்வர வேண்டும். அற்த்தமற்ற ஆங்கில மழலை ( உண்மை ) பாடல்களைக்காடிலும் நம் தமிழ் மொழியின்கண் உள்ள நல்ல பாடல்களை கற்று கொடுக்கலாம்.
அன்பன்,
கணேசன் இளங்கோவன்
குவளை இணையம்.
மிகவும் {சிறப்பு.
மிக்க நன்று.
ஓம் நமசிவாய
Post a Comment