Thursday, June 07, 2007

அண்ணலின் ஆணையேந்தி...


பல்லவி

அண்ணலின் ஆணையேந்தி
அன்னை ஜானகியைத் தேடி
அலைகடல் கடந்தாய் அன்றே
அஞ்சனைத் தவப் புதல்வா!

அனுபல்லவி

அசோகவனம் அழித்தாய்
அக்சனை அங்கே மாய்த்தாய்
இலங்கையை கடைந்தெரிந்தாய்
இடர்களைக் களைந்தெரிந்தாய்
இத்தனை செயல் புரிந்தும்
இறுமாப்பே இல்லையானாய்
எத்தனை எட்டினாலும் ஐய
நின் நிகருமுண்டோ

சரணம்

ஒப்பிலா வலிமை பெற்றாய்
ஓதுவோம் உந்தன் நாமம்


இராகம்: கல்யாண வசந்தம்
தாளம்: ஆதி

பாடியவர்: ஆதித்யா
மிருதங்கம்: குரு. நெய்வேலி கணேஷ்