Saturday, December 12, 2009

இசை விழாவில் திருடர்கள்

சமீப காலங்களில், இசை விழா நடை பெறும் அரங்குகளில், ரசிகர்கள் இசையிலோ அல்லது நாட்டிய நிகழ்ச்சிகளிலோ தன்னை மறந்து முழ்கி இருக்கும் போது, சில விஷமிகள் அரங்கினுள் நுழைந்து, ரசிகர்களின் கைப்பை, செல் போன், காமிரா ஆகியவற்றினை ஆட்டையப் போட்டுவிடுகின்றார்களாம்.

எனவே நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி சீட்டு, அழைப்பிதழ் ஆகியவற்றை அரங்கினுள் நுழையும் போது சோதனை செய்யக் கேட்டுக் கொண்டால், அதனை சங்கடமாக நினைக்காமல், அமைப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அதனைத் தங்களின் பாதுகாப்புக்காகவே செய்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீப காலங்களில், கலைஞர்கள், தங்களது ஒப்பனை அறையில், பல வித மதிப்பு மிக்க பொருட்களக் கோட்டை விட்டுள்ளதாகத் தெரிகின்றது. அரங்கினுள் பரிச்சயமில்லாத ஆடு திருடின கள்ளன் போன்ற முகங்கள் தெரிந்தால் உஷாராகவே இருக்கவும்.

இவ்வாறு நர்த்தகி.காமில் எழுதி ரசிகர்களுக்கும், கலஞர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் ஒரு சிறு கடிதம் எழுதியுள்ளார், மூத்த நாட்டியக் கலைஞர் வி.பி.தனஞ்செயன் அவர்கள்.

நிகழ்ச்சியின் நடுவே எழுந்து போபவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் சொல்கிறார். (தனியாவர்த்தனத்தின் போது யாரும் எழுந்து செல்லாமல் இருக்கவும், நிகழ்ச்சி முடியும் வரையிலும் அனைவரையும் உட்கார்த்தி வைக்கவும் உண்டான உத்தியோ?)

- சிமுலேஷன்

சாகேதராமன் - சிவகாமி பெத்தாச்சி அரங்கம் - ப்ரம்மகான சபா

நேற்று ப்ரும்மகான சபாவின் ஆதரவில் சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற லால்குடியின் சிஷ்யரும், விசாகா ஹரியின் சகோதரருமான சாகேதராமன் கச்சேரி குறித்த எனது பதிவு இந்த தனி வலையில்.

- சிமுலேஷன்