சமீப காலங்களில், இசை விழா நடை பெறும் அரங்குகளில், ரசிகர்கள் இசையிலோ அல்லது நாட்டிய நிகழ்ச்சிகளிலோ தன்னை மறந்து முழ்கி இருக்கும் போது, சில விஷமிகள் அரங்கினுள் நுழைந்து, ரசிகர்களின் கைப்பை, செல் போன், காமிரா ஆகியவற்றினை ஆட்டையப் போட்டுவிடுகின்றார்களாம்.எனவே நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி சீட்டு, அழைப்பிதழ் ஆகியவற்றை அரங்கினுள் நுழையும் போது சோதனை செய்யக் கேட்டுக் கொண்டால், அதனை சங்கடமாக நினைக்காமல், அமைப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அதனைத் தங்களின் பாதுகாப்புக்காகவே செய்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.சமீப காலங்களில், கலைஞர்கள், தங்களது...