Saturday, August 20, 2005

ஸ்ரீராம நவமிக் கச்சேரி

"ஸார், ஆதித்யா ரொம்ப நன்னா பாடறான். அவனை இந்தவச சக்கரை அம்மன் கோயி¢லே, ஸ்ரீராம நவமிக் கச்சேரியிலே பாட கேட்டிருக்கா. சரின்னு சொல்லிட்டேன்." என்றார் பாட்டு வாத்யார். ஸ்ரீராம நவமிக் கச்சேரி என்று காதில் விழுந்தவுடன், நினைவு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஓடத் தொடங்கியது. அப்பா ஒரு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ்ச் சங்கம், இஸ்கஸ், ரோட்டரி கிளப் என்று எல்லா ஸோஷியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இருந்தபோதும் அவர் அதிக ஈடுபாடு கொண்டது ஸ்ரீராம நவமிக் கமிட்டியில்தான். அவர்தான் உப தலைவர். எழுபதுகளில் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீராம நவமிக்...

சூடான் அனுபவங்கள்

 பெரும்பாலும் யாரும் அதிகம் போகாத நாடு ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. ஆம். ஆப்பிரிக்க நாடான சூடான் தான் அது. சூடானின் தலை நகரான கார்ட்டுமில் (Khartum) உள்ள எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வரும் சூடானீஸ் பெட்ரோலியம் கார்பொரேஷனில் இரண்டு மாச அசைன்மெண்ட். சூடான் ஒரு சர்வாதிகார நாடு. தீவிரவாதிகள் உலா வரும் பயங்கர நாடு என்று நண்பர்கள் மாற்றி மாற்றி எச்சரிக்கை. ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் நம்ம டெல்லி அல்லது ஹைதராபாத் போலத்தான்...

Embarrassment

முன்னொரு காலத்தில் விருப்பப்பட்ட திரைப்படங்களை மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்போம். ஆனால் தற்போது விரும்பியோ விரும்பாமலோ டிவி மூலம், திரைப்படங்கள் வரவேற்பு அறைக்கு வந்து விடுகின்றது. சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. மும்பாயிலுள்ள எனது மாமா மாமிக்கு, கிரிஷ் என்று நாலு வயதில் பையன். மாமா மாமி டிவியில் சினிமா பார்க்கும்போது, கிரிஷ¤ம் கூட இருப்பான். படத்தில் கொஞ்சம் ஏடாகூடமாக சீன் வரும்போது, மாமி, பையனிடம், கிரிஷ் வா, சின்ன பாத்ரூம் போயிட்டு வந்துடலாம், என்று நைஸாக அவனை டிவி இருக்கும் இடத்திலிருந்து அப்புற்றப் படுத்துவது வழக்கம்....

Read Only Memory

Read Only Memory!!! அஞ்சாறு வருஷங்ளுக்கு முன்பு, பொழுது போகவில்லையே; எங்கேயாவது போகலாம் எண்று எண்ணி பேப்பரில் என்கேஜ்மெண்ட் காலத்தைப் பார்த்தேன். சாந்தோம் அருகே உள்ள பெரிய அரங்கத்தில் ஒரு மெமரி நிறுவனம் தனது விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி வித்தியசமாக ஆக இருக்கும் போல உள்ளதே என்று எண்ணி குடும்பத்துடன் சென்றோம்.நினைத்தபடியே நிகழ்ச்சி புதுமையாகத்தான் இருந்தது. முதலில் சிறுமி ஷாமினி வந்து மேஜை மீதிருந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை ஓரிரு நிமிடங்களே பார்த்து விட்டு அத்தனை பொருட்கள் பெயரையும் தப்பில்லாமல்...

என்றான் முருகன்

சுஜாதா அவர்கள் விகடனில் "என்றான் முருகன்" என்ற தலைப்பில்வாசகங்கள் எழுதக் கேட்டிருந்தார்.வாத்யார் பிரசுரிக்காமல் விட்டு நான் எழுதிய வாசகங்கள் கீழே வருமாறு:-1. அம்மா மாம்பழம் பிடிக்குமே உங்களுக்கு என்றான் முருகன் கனிவாக.2. பாம்பைப் போன்ற தீவிரவதிகளை விஷம் வைத்துக் கொன்றால் கூடத் தவறில்லை என்றான் முருகன் நச்சென்று.3. டிபன் பாக்ஸி¢ல் மிளகாய் பஜ்ஜியை வைத்தது யார் என்றான் முருகன் காரமாக.4. உனக்காக ஸ்பெஷல் ஐஸ் க்ரீம் வாங்க வந்தி¢ருக்கேன் சாப்பிடு என்றான் முருகன் குழைவாக.5. பில்டர் காபிதான் பெஸ்ட்; இல்லை இல்லை. இன்ஸ்டன்ட் காபிதான் பெஸ்ட் என்றான் முருகன்...