Tuesday, January 17, 2012

வனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்

"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதாசனின் சுயவாழ்க்கை வரலாறான் "வனவாசம்". வாழ்க்கை வரலாறு என்பதனால், சிறுவயது பள்ளி அனுபங்கள் மற்றும் வீட்டை விட்டுப் பட்டினத்திற்கு ஓடி வந்த அனுபவங்கள் என்று பல அனுபவங்களைக் குறிப்பிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில்     இரு(ண்ட)ந்த தன பத்தாண்டு அனுவங்களையே வனவாசம் என்று குறிப்பிடுகின்றார் கண்ணதாசன்.

இதனை கண்ணதாசான் எழுதிய ஆண்டு 1965. வானதி பதிப்பகத்தால் கிட்டத்தட்ட 37 பதிப்புகள் கண்ட இந்தப் புத்தகம், தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தால் நான்காம் பதிப்பாக வெளிவந்துள்ளது. ஒரு காலத்தில் குமுதம் பத்திரிகை தனது இதழில் வனவாசத்திலிருந்து குறிப்ப்பிட்ட சில பகுதிகளைப் பிரசுரித்து வந்தது. அதற்கும் காரணம் இல்லாமலில்லை!

சிறு வயது முதலே அடுத்தவர்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு தீராத ஆசையுடன் படைப்புலகில் நுழையும் கண்ணதாசன் எத்தனையெத்தனையோ பத்திரிகைகளிலும் பணிபுரிகின்றார். அங்குதான் எத்தனை மனிதர்கள், எத்தனை அனுபவங்கள் அவருக்கு.

முதன் முதலாக கோம்புத்தூர் லாட்ஜில் கருணாநிதியைச் சந்த்தித்த போது ஏற்பட்ட பரவசத்தினை அவரால் விவரிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு காதலியைக் காணும் உணர்ச்சி ஏற்ப்பட்டதாகக் கூறுகின்றார். சில சமயங்களில் கருணாநிதியென்று பட்டவர்த்தானமாகாப் பெயர் சொல்லும் கண்ணதாசன், சில சமயங்களில் 'கலை நண்பர்' என்று சொல்லி அடக்கி வாசிக்கின்றார். இருவரும் ஒரு முறை ரயிலில் பசியுடன் பயணம் செய்யும் போது, சக பயணியான ஒரு முதியவரிடம் இருந்து பழம் திருடலாமாவெனா திட்டம் போட்டதாகத் தெரிகின்றது. ஒரு முறை வேசிகளிடம் சென்று காமக்கடலில் எழுந்து, அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் வந்தது, சில பெண்களை அனுபவித்து விட்டு, அவர்களிடம் மிரட்டி பணத்தைத் திருப்பி வாங்கியது போன்ற சம்பவங்களைப் போட்டு உடைக்கின்றார். குமுதம் பத்திரிகை ஏன் வனவாசம் பகுதிகளை பிரசுரித்தது என்று இப்போது புரிந்த்திருக்கும்.

கருணாநிதி தான் எழுதிய "வாழ முடியாதவர்கள்" என்ற கதையினைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றார். வறுமையின் காரணமாக தந்தையே பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த அந்தக் கதையினைப் படித்து விட்டுக் காறித் துப்புகின்றார் கண்ணதாசன். மேலும் அவரது குமரிக் கோட்டம், ரோமாபுரி ராணிகள், கபோதிபுரத்துக் காதல் போன்ற கதைகளைப் படித்து விட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தினை வெளிப்படுத்துகின்றார். இதற்குப் பிறகு, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதிய எதனையும் படிப்பதில்ல என்றும் முடிவு செய்கின்றார்.

தான் அறிய, மனமறிய தன்னை இயக்கிக் கொள்ளாமல், இழுப்பவர் இழுப்புக்கு வந்து உணர்ச்சி வேகத்தில், "கல்லக்குடி போராட்டத்தில்" ஈடுபடுகின்றார். இதன் காரணமாகக் கிடைத்த சிறை வாசத்தில் படும் அவஸ்தைகளுயும், அந்தச் சமயத்தில் கட்சிப் பிரமுகர்கள் நடந்து கொண்ட விதமும் அவரைத் தீவிர மன உளைச்சலுக்குள்ளாக்குகின்றதூ. குறிப்பாகக்க் "கல்லக்குடி வழக்கு நிதி" என்ற பெயரில் நிதி சேர்த்த சி.பி.சிற்றரசு, அந்த நிதியிலிருந்து காலணா கூட வழக்கு நடத்தவோ, கைதிகளின் பசியினைப் போக்கவோ செலவழிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றார். மேலும் சிறையிலிருக்கும் போது அவர் எழுதிய "இல்லற ஜோதி" படத்தின் வசனத்தின் பெரும்பகுதியினைத் தான் எழுதியதாக "கலை நண்பர்" பத்திரிகையில் எழுதியது கண்டு ஆத்திரம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்.

மேடையில் தமிழர் பண்பாடு என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அரசியல் தலவரைக் குஷிப்படுத்த, அர்த்த சாமத்தில் ஆண் வாடத்தில் வந்த பெண்ணொருத்தி, "சுந்தரகோஷ்" என்று குறிப்ப்பிடப்படுகின்றாள். இந்தத் தலைவர் யார் என்று புரிந்து கொள்வது கடினமல்ல. சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட கண்ணதாசன் ஒரு முறை அண்ணாத்துரையின் பேச்சைக் கேட்டு மயங்கி, திராவிடச் சித்தாந்தத்திலும், பின்னர் தீவிர அரசியால்வாதியாகவும் மாறுகின்றார். அண்ணவை ஒரு தேவதூதன் போலப் பார்க்கின்றார். ஆனால் காலம் செல்லச் செல்ல மதிப்பீடுகள் மாறூகின்றன.

சென்னை மாமான்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்ற சமயம் அண்ணா தலமையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறுகின்றது. வெற்றிக்காகப் பாடுபட்டவர்க்களின் பெயர்கள் அழைக்கப்படும் போது அந்தத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்த தனக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று எண்ணிக் கொண்டிருக்க்படும் போது கண்ணதாசன் மேடைக்குக் கூட அழைக்கபடுவதில்லை. மேலும் அண்ணா, கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்துக் கவுரவம் வேறு செய்கின்றார். பெரிதும் ஏமாற்றமடந்த கண்ணதாசன், நேராக அண்ணாவிடம் சென்று, "என்ன அண்ணா! இப்படி சதி செய்து விட்டீர்கள்?" என்று கேட்க, அவரோ, "அட, நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு; அடுத்த கூட்டத்தில் போட்டு விடுகின்றேன்" என்று சொல்ல, 'இதென்ன தில்லாலங்கடி' என்று திகைத்து நிற்கின்றார்.

பத்தாண்டுகளில் அண்ணாவின் அரசியல் அணுகுமுறை கண்டு வெறுத்துப் போய், அவரை "சாதி வெறியர்" என்ரும், "சந்தர்ப்பவாதி" என்றும் அடையாளப்படுத்துகின்றார். குறிப்பாகக், கட்சியில் பெரும் செல்வாக்குப் பெற்ற்றிருந்த ஈ.வெ.கி.சமபத் எப்படி ஓரங் கட்டப்படுகின்றார் என்று அறிந்த போதும், கட்சிப் பொதுக் குழுவில் வேண்டுமென்றே வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போது மனம் வெறுக்கின்றார். இது நாள் வாரை பட்ட அவமானங்களைப் பற்றி யோசித்து, enough is enough என்ற முடிவுக்கு வந்து, ஒரு வழியாக திமுகவிலிருந்து ராஜினாமாச் செய்கின்றார். அப்போது,

- கண்மூடித்தனமான அரசியல் வனவாசம் முடிந்து விட்டது
- காட்டுக் குரங்குகளிடமிருந்து விடுதலை கிடைத்தது
- சபலத்திற்கும், சலனத்திற்கும் ஆட்பட்ட கோழை மனிதர்களை "தலைவர்கள்" என்று போற்றிப் பாடிய பாட்டு முடிந்து விட்டது

என்றெல்லாம் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகின்றார்.

திமுகவிலிருந்து ராஜினாமா செய்த நாளான 9.4.1961 ஆம் தேதியை மறக்க முடியாத நாளென்றும், அன்றோடு தனது பத்தாணடு வனவாசம் முடிந்து விட்டதாகவும் பராவசப்படுகின்றார்.

நூல்: வனவாசம்
ஆசிரியர்: கண்ணதாசன்
பதிப்பு: கண்ணதாசன் பதிப்பகம் - நாலாம் பதிப்பு - 2011
பக்கங்கள்: 424
விலை: Rs. 120

- சிமுலேஷன்