Saturday, January 27, 2007

ஒடிசி குவிஸ் 2007 (2)

1. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த இருவர், துவக்கி இன்றும் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனம் எது? (காலத்தை வென்று செயல்படுவதும் சாதனையல்லவா?)

2. 1914ல் மேக்ஸ் வான் லா மற்றும் ஜேம்ஸ் ப்ஃராங்க் என்ற இரு விஞ்ஞானிகள் எக்ஸ் கதிர்கள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்கள். தங்க மெடல் பெற்ற இருவருக்கும் சில வருடங்கள் கழித்து, நோபல் சொசைட்டி தங்கப் பதக்கங்களை மீண்டும் வழங்கியது ஏன்? (கரையாத மனமும் உண்டோ?)

3. 1980ஆம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற 'நேஷனல் ஹாக்கி லீக்' போட்டிகளின் போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 110,000 கலந்துகொண்டு ஒரு புதிய சாதனை செய்தார்கள். அது என்ன? (அலை பாயுதே கண்ணா)

4. சென்னை ம்யூசிக் அகாடெமி வழங்கும் 'சங்கீதக் கலாநிதி' விருதினை 1946 மற்றும் 1967 ஆண்டுகளில், பெற்றவர்களிடையே உள்ள ஒற்றுமை என்ன? (ஹேப்பி பர்த் டே தியாகு)

5. ரே ஹாருன் என்னும் கார் பந்தய வீரர், 1911ஆம் ஆண்டு தனது காரில் ஒரு சிறிய மாற்றம் செய்த காரணத்தினால், பந்தயத்தில் முதலாவதாக வர முடிந்தது. அதன்பின் எல்லாக் கார்களிலும் ஏற்பட்ட அந்த மாற்றம்தான் என்ன? (1953ல் சிவாஜியுடன் பண்டரி பாய்)

- சிமுலேஷன்

ஒடிசி குவிஸ் 2007

நேற்றைய தினம் சென்னை ம்யூசிக் அகாடெமியில், "ஒடிசி குவிஸ்" நடை பெற்றது. 'ஒடிசி' சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த்கக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆண்டுதோறும, பெரிய குவிஸ் நிகழ்ச்சிகளை நடத்திப் பல பரிசுகளையும் வழங்குகின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இந்திய ரூபாயாகும். சில மாதிரிக் கேள்விகள் இங்கே. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.



01. மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார்? இந்தப் படத்தின் சிறப்பு என்ன?


02. இந்தக் கொடியினை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றியவர் யார்?



03. இந்த விலங்கின் பெயர் என்ன? எந்த அமைப்ப, இந்த விலங்கினை தனது சின்னமாகக் (Logo) கொண்டுள்ளது?


04. இந்த வரைபடத்தில் உள்ள நாட்டிற்கும், நாம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அது என்ன?



05. இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும்


இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன?

- சிமுலேஷன்

Thursday, January 25, 2007

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து



பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


மாணிக்கவாசகரின் திருவாசகம்

பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்

(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)



இராகம்: பாகேஸ்ரீ
பாடியவர்: ஆதித்யா

Friday, January 05, 2007

பாட்டுக் கேட்கப் போனார்...படம் வரைந்து வந்தார்

இசை விழாக்களுக்குச் செல்லும் பலரும், கச்சேரிகளைக் கேட்பது மட்டுமின்றி, அரட்டை அடிப்பது, கேன்டீனில் ரவுண்டு கட்டுவது போன்ற இன்ன பிறவும் செய்வதுண்டு. ஆனால், ஆள்வார்ப்பேட்டை சீத்தம்மா காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தணிக்கை அதிகாரியும், வருமானவரி ஆலோசகருமான வி.சுப்பிரமணியன், புதுமையான பொழுதுபோக்கு ஒன்றினை வைத்துள்ளார்.

கச்சேரிகளுக்கு செல்லும் போது, வெற்றுத்தாள்களும், வண்ணப் பென்சில்களும் கொண்ட ஒரு 'கிட்'டினை எடுத்துச் செல்கிறார். வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, பாட்டுக்களை இரசித்துக் கொண்டே, இசைக் கலைஞர்களை வரைந்து தள்ளுகின்றார். கச்சேரி முடிவதற்குள்ளாகவே, வண்ணமும் அடித்து, முடிவில் அந்தந்த இசைக் கலைஞர்களிடம், தான் வரைந்த படத்தினைக் காண்பித்து ஆட்டோகிராஃபும் வாங்கி விடுகின்றார். இதனால் எல்லா இசைக் கலைஞர்களிடமும், இவருக்கு நன்கு பரிச்சயமுண்டு. இந்த வருட இசை விழாவில் இவர் வரைந்த சில படங்களை இங்கே காணலாம்.


01. ப்ரவசனக் கலைஞர் விசாகா ஹரி

02. ஓ.எஸ்.அருண் மற்றும் குழுவினர்

03a. மஹதி
03b. கர்னாடிகா சகோதரர்கள் சசிகிரண் & கணேஷ்

04. சாருலதா மணி
05. காயத்ரி கிரீஷ்

06. சரஸ்வதி வாக்கியேயக்காரா டிரஸ்ட் நிறுவனர் என்.வி.எஸ்

07. சங்கீதக் கலாநிதி டி.என்.கிருஷ்ணன்

08a. ஐஷ்வரியா வித்யா ரகுநாத்
08b. வி.சங்கர நாராயணன்

09. மதுரை சுந்தர்

10a. ஆர்.பாலசுப்ரமணியன்
10b. டி.கே.கோவிந்தராவ்

11. புல்லாங்குழல் என்.ரமணி மற்றும் குழுவினர்

12. சவிதா நரசிம்மன்

13. சுகுணா புருஷோத்தமன்


14. சிக்கில் குருசரண்

இவரது 'அனைவரையும் கவரும் ஹரிதாஸ் பஜன்' படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

- சிமுலேஷன்