Thursday, July 14, 2011

இந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்


"சமுத்ரா" ஜூன் மாத  இதழில் வெளியான இந்திய இசை மற்றும் நடனம்" குறித்தான எனது குறுக்கெழுத்துப் புதிர்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-02


காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம்.


பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர்.  தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர், ஆந்திராவைச் சார்ந்தவர். தற்போதைய பரபரப்பான டில்லி அரசியல் சூழ்நிலையில், நிர்மலா ஐந்து நாட்கள் விடுமுறையில் ஆந்திரா சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஏன் இந்த திடீர் ஆந்திர பயணம்' என்றால், "அவசர வேலை' என்கிறார். அந்த அவசர வேலை, ஆவக்காய் ஊறுகாய் போடுவது தான்.


மாங்காய் சீசனில் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆவக்காய் ஊறுகாய் போடுவது வழக்கமாம். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஊறுகாய் போடுவது வழக்கம். எனவே, வீட்டு பெண்கள் எங்கு இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும், அனைத்தையும் விட்டு விட்டு, மாங்காய் சீசனில் சொந்த ஊருக்கு வந்து விடுகின்றனர். சுத்த பத்தமான நிலையில் ஆவக்காய் ஊறுகாய் போடுகின்றனர். இதில், நிர்மலா சீத்தாராமனும் சேர்ந்து கொள்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கலின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார். பிரதமர் நேரு அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் ஏற்றுக் கொள்கின்றார். லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணமேன்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம்? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியாவேன்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.


போன வாரம் நாரதகான சபாவில் "அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை"யின் சார்பில் இயக்குநர் மௌளிக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த 2 மணி நேர விழாவில் பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், கு.ஞானசம்பந்தன், டி.வி.வரதராஜன் ஆகியோர் பேச்சுக்களைக் கேட்டு  சிரித்து, சிரித்து வயிறு வலித்தது என்றால் அது பொய்யில்லை.

மௌளி சிறுவனாக இருந்த்த போது அவரது மாமா, பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்றாராம். மாமா, ஒரு கையில் சிறுவன் மௌளியையும், மற்றொரு கையில் தனது பெண் மஹாலட்சுமியையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார். இருவருக்கும் பலூன் வாங்கிக் கொடுக்கின்றார். மஹாலட்சுமி, மௌளியைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பதால், சிறுவன் மௌளியே இரண்டு பலூன்களையும் பிடித்தபடி நடந்து வருகின்றான், இந்தச் சமயத்தில்  அவன் கையில் இருந்த ஒரு பலூன் கை தவறிப் பறந்து செல்ல, மௌளி கூறுகின்றான்.

 "மாமா, மாமா, மஹாலட்சுமியோட பலூன் பறந்து போச்சு...!"




இந்தியாவின் தேசியப் பறவையான மயிலினை யாரும் கொல்லக் கூடது எனகிறது சட்டம். ஆனால் இந்த மயில்களால் பெருத்த பயிர் சேதம் ஏற்படுவதால், கோபிச்செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் விஷம் வைத்துச் சாகடிக்கப்படுகின்றனவாம். மயில்கள் விவசாயிகளால் இவ்வாறு விஷம் வைத்துச் சாகடிக்கப்படுவது சகஜம்தான் என்றும், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே விஷயம் பெரிதுபடுத்தப்படுவதாகவுல கூறப்படிகின்றது. பயிர் சேதத்தைத் தவிர மயில்களின் இனப்பெருக்கத்தால், பாம்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாம். பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம். மயில்களுடன் சேர்ந்து கொண்டு, எலிகளும் வேறு பயிரகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக் குருவிகளையே காண முடிவதில்லை என்று எல்லா ஊடகங்களிலும் கூறப்படுகின்றது. ஆனால், குயிலினங்கள் அதிகமாகி விட்டதோவென்று எண்ணுகின்றேன். யாராவது கவனித்தீர்களா? காலை 4 மணிக்கே குயில்கள் கூவி எழுப்பிவிடுவது போதாதென்று நடுப்பகலில் கூட இவை கத்திக் கொண்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை.

2010 அக்டோபர் மாதம் இங்கிலாந்திலுள்ள Cambridge University Pressக்கு 35,174 புத்தகங்களுக்காக £1.275 மில்லியன் பெருமானமுள்ள ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த நிறுவந்த்தின் வரலாற்றிலேயே இதுதான் பெரிய ஆர்டராம். இன்வாய்ஸ் மட்டுமே 2,794 பக்கங்கள் உள்ளது. இந்த ஆர்டர் கொடுத்தது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையமாகும்.




- சிமுலேஷன்