நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்கள் அன்புக்குரிய்வரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்பவரா? அல்லது இளகிய நெஞ்சம் கொண்டவரா? அடிக்கடி ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி சோகப்படுபவரா? அப்படியானால் இந்த இசையினை நிங்கள் கேட்க வேண்டாம்.
இந்த இனிய பாகேஸ்ரீ ராகத்தினை வாசித்தவர் எம்பார் கண்ணன் அவர்கள். வாசித்த பொழுது கடம் கார்த்திக் குழுவினரின் “என்ஸெம்பிள்” நிகழ்ச்சி. இடம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா. நாள் 27th Dec 2010. சிமுலேஷன்
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவரிடம் ஒரு கோப்பு சென்றது. அதில் அன்றைய தினம் ஐ.சி.எஸ் அதிகாரி எஸ்.ஏ.வெங்கட்ராமன், தனது மகளின் கல்யாணத்திற்கு காய்கறிகள் வாங்க, ஜெயில்களுக்கும், மாணவர்கள் விடுதிகளுக்கும் காய்கறி சப்ளை செய்யும் ஒருவரிடம், மார்க்கெட் விலையை விடக் குறைவான விலைக்கு, காய்கறிகளை வாங்கியதாகக் குற்றச்சாட்டு. இதை விசாரணை செய்ய ஒரு கமிஷன் அமைக்குமாறு நேரு உந்தரவிட்டார்.
கமிஷன் விசாரணையில் "காய்கறிக்கு நான் பணம் செலுத்தி விட்டேன்" என்று வெங்கட்ராமன் கூறினார். எனினும், குறைந்த விலைக்கு வாங்கியது அவரது ஊழல் எண்ணத்தை, அதாவது உத்தியோகத்தை, தனது தனி நன்மைக்குப் பயன்படுத்தும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதி, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் வெங்கட்ராமன் ஐ.சி.எஸ் ஜெயில் தண்டனை பெற்றார். ஜெயிலில் இருக்கும்போது, ஜெயில்களின் நடத்தை விதிகளுக்கான புத்தகத்தை முழுமையாகப் படித்து, புதிய அம்சங்களைச் சேர்த்தும், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த விதிமுறைகளைக் களைந்தும், புதிதாக ஒரு மேனுவலை உருவாக்கினார். நாடெங்கிலும் அது இன்றும் பின்பற்றப்படிகிறது.டது.
"வேலையில் நேர்மையான நீங்கள் காய்கறிக்கு டிஸ்கவுண்ட் பெற்றது சிறையிலடைக்கும் அளவுக்குப் பெரிய குற்றமா?" என்று அவரிடம் கேட்கப்பட, அதக்ற்குப் பதிலளித்த அவர், "எனது பதவியை உபயோகித்து பலனடைந்தது தவறுதான். அடைந்த பலன் எவ்வளவு என்பதைவிட, இது போல் பதவியை துஷ்பிரயோகம் செய்யும் மனநிலை, பிற்காலத்தில் பெரிய தவறுகளையும், ஊழலையும் செய்யும் தைரியம் எனக்கும் பிற அதிகாரிகளுக்கும் அளிக்கலாம்" என்று கூறினார்.
யதார்த்த வாழ்வில், எந்தச் சந்தர்ப்பத்துக்காகவும் யாரும் பாடுவதில்லை என்ற போதும், இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் என்றும் அபத்தங்களாய் ஒலித்ததில்லை. அதிலும் பாட்டுப்போட்டி நடத்தி ஒருவரை மற்றவர் வெல்லும் சாத்தியக்கூறு வெகு அரிதென்றாலும், திரையுலகில், பாட்டுப் போட்டிக்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இத்தகைய பாட்டுப்போட்டிக்களில் இடம் பெரும் பாடல்கள் பெரும்ப்பாலும் அழியாப் புகழ் பெற்றவை. தமிழ்த் திரையுலகில் இடம் பெற்ற மறக்க முடியாத போட்டிப் பாடல்களைப் பார்போமா!
"வஞ்சிகோட்டை வாலிபன்" படத்தில் இடம் பெற்ற "கண்ணும் கண்ணும் கலந்து" என்ற நடனப் போட்டி மிகவும் புகழ் பெற்றது. பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா அவர்களின் நடனப் போட்டி மிகவும் சுவாரசியமானது.போட்டியின் இடையே வரும் பி.எஸ்.வீரப்பவின் "சபாஷ்! சரியான போட்டி!" என்ற வசனம் காலத்தால் அழிக்க முடியாதது. பத்மினி, வைஜயந்தி மாலா இருவருமே புகழ் பெற்ற கலைஞர்கள் என்பதானால், யாருமே தோல்வி அடையாதபடியாக காட்சி அமைக்கப் பெற்றிருக்கும்.
மீண்டும் பத்மினி ஒரு போட்டிப் பாடலில். இந்த முறை எம்.ஜி.ஆருடன் "மன்னாதி மன்னன்" படத்திற்காக. எம்.ஜி.ஆரின் நடனம் நல்லதொரு முயற்சி! இறுதியில் சிங்கம் படம் வேறு வரைந்து ஜெயித்தும் விடுகின்றார்.
"திருவிளையாடல்" படத்தில் இடம் பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய "ஒரு நாள் போதுமா?" பாடல். வடநாட்டிலிருந்து வந்த ஒரு இசைக் கலைஞர் பாடுவது போல அமைந்த இந்த புகழ் பெற்ற பாடல் பல ராகங்கள் அடங்கிய ஒரு அற்புதமான ராகமாலிகா ஆகும். பாடலின் பல்லவி 'மாண்டு' ராகத்தில் துவங்கும். சகிக்க முடியாதது பாலையா பின்னால், உசிலைமணி போன்ற ஒரு குடுமிக் கூட்டம் தேவையில்லாமல் தலையாட்டிக் கொண்டிருப்பது மட்டுமே. இந்த வடநாட்டுப் பாடகரைத் தோற்கடிக்கும் வண்ணம், சிவபெருமான் பாடுவதாக அமைந்த பாடல் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் பாடிய "கௌரி மனோகரி" ராகத்தில் அமைந்த "பாட்டும் நானே" என்ற பாடல். டி.எம்.எஸ் அவர்கள் குரலில் நல்ல பாவத்துடன் அமைந்த அற்புதமான பாடல். இருந்த போதும் தட்டையான இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு "ஒரு நாள் போதுமா?" என்ற ராகமாலிகா பாடியவர் பயந்து ஓடிவிட்டார் என்பதை சங்கீதம் தெரிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
அடுத்தாக "அகத்தியர்" படத்தில் இடம் பெரும் "வென்றிடுவேன்; எந்த நாட்டையும் வென்றிடுவேன்" என்ற பாடல். அகத்தியருக்கும், ராவணனுக்கும் நடக்கும் இந்தப் போட்டியில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், டி.எம்.எஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள். நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோஹனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கல்யாணி, சரஸ்வதி போன்ற எக்கச்சக்க ராகங்கள் இந்தப் பாடலில் இடம் பெரும். ஆனால் 'ஒருநாள் போதுமா?' பாடல் போல இயல்பாக இல்லாமல் வலிந்து புகுத்தப்பட்டது போல இருக்கும்.
"பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு நிகரானவன்" என்ற சுத்தமான சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடலை சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைந்திருக்கும். இருவதுமே ஓவர் ஆக்டிங் செய்தாலும், எல்லோராலும் ரசிக்கபடும்படியாக இருக்கும். குறிப்பாக, ஸ்வரம் பாடும் க்ளைமாக்ஸ் காட்சி.
"தாய் மூகம்பிகை" என்ற படத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி மற்றும் ராஜேஷ்வரி குரலில் "இசையரசி என்னாளும்" என்ற பாடல் 'சூர்யா' எனப்படும் 'சல்லாபம்' என்ற ராகப் பாடல். தாய் மூகாமிபிகையாக கேயார் விஜயா நடிக்க மனோரமா அவருடன் போட்டி போடுவதாக் அமைந்த பாடல். மூகாம்பிகையின் பக்தையான வாய் பேச முடியாத சரிதா, க்ளளைமேக்ஸில் எண்ட்ரீ கொடுப்பது நல்ல திருப்பம்.
"சிந்து பைரவி" படத்தில் பாடகரான சிவக்குமார் "மரி மரி நின்னே" என்ற தியாகராஜரின் பாடலை சாரமதி ராகத்தில் பாட (ஒரிஜினல் ராகம் தோடி), அதற்குப் பதிலடியாக, சுஹாசினி, அதே ராகத்தில் "பாடறியேன்.. படிப்பறியேன்" என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடி, இறுதியில், மரி மரி நின்னேவையும் கலந்து பாடி கைதட்டலை அள்ளிச் செல்வார். இந்தப் பாடலில் சுஹாசினியின் முகபாவங்கள் குறிப்பிடும்படி இருக்கும்.
கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ அவர்கள் தமிழ்த் திரையில் பாடிய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தது "படையப்பா" படத்தில் இடம் பெற்ற "மின்சாரப்பூவே" என்ற பாடல். இது வெறும் பாட்டுப் போட்டியாக இல்லாமல், ரஜினி பாட, ரம்யா கிருஷ்ணன் ஆடும்படியாக அமைந்திருக்கும். ஹம்சாநந்தி ராகத்தில் அமைந்துள்ளது இது.
இவை தவிர, "இது நம்ம ஆளு" படத்தில் ஷோபனா, பாக்யராஜ் இருவரும் பாடும் "சங்கீதம் பாட ஞானம் உள்ளவர் வேண்டும்" என்ற பாடலில் பாடத் தெரியாத பாக்யராஜ் நன்றாகவே சமாளிப்பார். சுட்டி கிடக்கவில்லை.
மேற்கண்ட பாடல்களைத் தவிர, வேறேதும் பாடல்கள் விடுபட்டுப் போயிருந்தால், சுட்டியுடன் குறிப்பிடுங்கள். அவற்றையும் இணைக்கின்றேன்.
நம்மில் பலருக்கு கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா என்ற எண்ணம் வருவது இயற்கை. இதற்குப் பெரிய காரணம் சோம்பல்தான். தேர்தல் சாவடிக்க்குச் சென்று, கால் கடுக்க வரிசையில் நின்று ஒட்டுப் போடுவதனால் என்ன பயன் என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே, உட்கார்ந்த இடத்திலிரிருந்தே குறிப்பிட்ட தேதிக்குள், எந்த நேரத்தில் வேண்டுமானால் ஓட்டுப் போடலாம் என்றிருந்தால் எப்படி இருக்கும்?
ஆம். சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்க அப்படி ஒரு வசதி தமிழ்மணம் செய்து கொடுத்திருகின்றாரகள். வீட்டிலிருந்தே ஓட்டுப் போடலாம். அப்புறம் என்ன கவலை? கீழ்க்கண்ட என்னுடைய படைப்புகளையும் போட்டிக்காக இணைத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பிடித்தால் ஒட்டும் போடுங்கள்.
இந்த வருடத்திய (2010 - 11) இசை விழா ஆரம்பமாகிவிட்டது. அதனால் சங்கீத ஜாம்பவான்களைப் பற்றிய சில புதிர்களைப் பார்ப்போமா? ஒவ்வொரு படத்தொகுப்பிலும், ஒரு பிரபல சங்கீத மேதை ஒளிந்து கொண்டிருக்கின்றார். அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது, இந்தக் குறிப்பிட்ட படங்களிலிருந்து விடையினை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றும் சொல்ல வேண்டும்?
தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிறது.)
வீட்டு சுவர்களில் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சுவிட்ச் பாயிண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுகளும் பொருத்தும் பழக்கம் அறிமுகமாகியிருந்த நேரம் அது. குளிப்பதற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண்டிருந்த கவிஞர், அப்போதுதான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த்தார்; பார்த்ததும் திகைத்தார்.
"இவ்வளவு தாழ்வாக சுவிட்ச் போர்டும், ப்ளக் பாயிண்ட்டும் இருந்தால் குழந்தைகள் தவழ்ந்து விளையாடும்போது, ப்ளக் பாயிண்ட்டுக்குள் விரலை விட்டுவிட்டால் அது குழந்தையின் உயிருக்கே அல்லவா உலை வைத்துவிடும்?" கவிஞர் உலவியபடியே சிந்தித்தார்.
தோட்டத்திலிருந்து கொஞ்சம் களிமண்ணை எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்து நன்றாக உள்ளங்கையில் வைத்துக் குழைத்தார். பின்னர் அதை அப்படியே ப்ளக் பாயிண்டில் இருந்த ஓட்டைக்குள் திணிக்க முயன்றார்.
அவ்வளவுதான்...
"அம்மா" என்று ஒரு அலறல். கண்ணதாசன் அலறினார்.
மின்சாரம் 'சப்ளை'யாகிக் கொண்டிருந்த ப்ளக் பாயிண்ட், ஈரக் களிமண்ணை உள்வாங்கிக்கொண்டு, அதை உள்ளே திணித்த கவிஞருக்கு "ஷாக்" கொடுத்து தூக்கி எறிந்துவிட்டது.
கவிஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது, கவிஞர் ஹலில் மல்லாந்து மயங்கிக்கிடந்தார்.
நல்லவேளை! கவிஞரின் உயிருக்கொன்றும் ஆபத்து ஏற்படவில்லை.
சொல்லும் 'பொருளின்' மீது நொடியில் பாட்டெழுதும் புலமை பெற்ற அந்தப் பிறவிக் கலைஞருக்கு, மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்போது, அதில் தண்ணீர் பட்டால் "ஷாக்" அடிக்கும் என்ற சாதாரண விஷயம் அந்தச் சூழலில் ஞாபகம் வராதது ஆச்சரியம்தான்.