Showing posts with label Humour. Show all posts
Showing posts with label Humour. Show all posts

Friday, March 05, 2010

அவுரங்கசீபும் தமிழ்த்திரட்டிகளும்


அரசர் அவுரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவராம். இருந்தாலும்  அவருக்கு ஏனோ இசை என்றாலே ஆகாது. இசை, நாட்டியம் போன்ற எல்லாவித நுண்கலைகளையும் அவரது ஆட்சிக் காலத்தில் தடை செய்தாராம்.

 

  

அதே போல வலைப்பதிவுகளை தங்கள் இணைப்பிலே திரட்டிக் கொள்ளும் தமிழ்திரட்டிகள், இந்தப் பதிவுகளை வகைப்படுத்த நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், சினிமா, தொழில் நுட்பம், கார்ட்டூன், கவிதை, ஆன்மிகம் போன்ற எத்தனை, எத்தனையோ பிரிவுகள் வைத்திருந்தாலும் இசைக்கென்று ஒரு பிரிவு வைக்காததேன்? அவுரங்கசீப் வழித்தோன்றல்களோ இவர்கள்?

- சிமுலேஷன்

Tuesday, March 02, 2010

பத்திரமா பார்த்துக்கோங்க

பாலாம்பாள் டீச்சரின் கணவர் பாலு மாமாவுக்கு சூதுவாது தெரியாது. ஒரு முறை டீச்சர் அவரை வீட்டில் விட்டு வெளியே போக வேண்டியிருந்தது. வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய வேலைக்காரி இன்னமும் வரவில்லை. நல்ல திறமையான வேலை செய்பவளாக இருந்தாலும் கொஞ்சம் கை நீளம். சின்னச் சின்னச் சாமான்களை அவ்வப்போது திருடிக் கொண்டு போய்விடுவாள். டீச்சர் தனது கணவரிடம் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றார். வேலைக்காரியிடம் மறக்காமல் பெட்ரூமையும், ஹாலையும் பெருக்கச் சொல்லுங்கள் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.

பாலு மாமாவுக்கோ வேலைக்காரி வருவதற்கு முன்னாலேயே பதட்டம். வேலக்காரி வந்தாள். சமையல் அறை சென்று பாத்திரம் தேய்த்தாள். கையில் ஒன்றுமில்லை. பதட்டம் கொஞ்சம் தணிந்தது. கொல்லைக்குச் சென்று காய்ந்த துணிகளை மடித்து வைத்தாள். அப்போதும் அவள் கையில் ஒன்றுமில்லை. இப்போது இன்னம் கொஞ்சம் நிம்மதி. பெட் ரூமையும்,ஹாலையும் பெருக்கும்போது ஒண்ணும் எடுத்து செல்லாமலிருந்தால், பிறகு நிம்மதியாக பேப்பர் படிக்கலாமே என பாலு மாமா எண்ணினார். வேலைக்காரியிடம் சென்று சொன்னார்.

"மொதல்ல பெட் ரூமிலே திருடிட்டு அப்புறமா ஹால்லே திருடிக்கோ."

- சிமுலேஷன்