Showing posts with label Falooda Pages. Show all posts
Showing posts with label Falooda Pages. Show all posts

Sunday, July 31, 2011

ஃபலூடா பக்கங்கள்-03



இந்த வாரம் நிறையக் கேள்விகள் மனதில் தோன்றிவிட்டன. ஃபலூடா பக்கங்க்களைப் படிக்கும் யாராவது பதிலளித்தால் தேவலை

தமிழ்நாட்டுப் ப்ளாட்டினம் என்ன ஆச்சு?



கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, "ஜியாக்ரபிகல் ஸர்வே ஆஃப் இண்டியா" அமைப்பு தனது ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையத்திலும், மற்றும் நாமக்கல்லிலும் தங்கத்தினையும் விட விலை அதிகமான உலோகமான பிளாட்டினப் படிவுகள் எக்கச்சக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்களே! அது என்ன ஆச்சு? அதனை வெட்டியெடுப்பதற்க்காக ஏதேனும் திட்டங்கள் போடப்பட்டதா? மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

கடற்கரையில் பலூன் சுடுதல்


வெகுநாட்கள் கழித்து பெசண்ட் நகர் பீச் சென்றிருந்தோம். மக்கள் தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியினால் கலர், கலராகப் பலூன்களை குறி பார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.

என் பையன் கேட்டான், "அப்பா, இந்தத் துப்பாக்கி குண்டுகள் யார் மீதாவது தவறாகப் பட்டுவிட்டால் என்ன ஆகும்? "அவை குண்டுகள் இல்லை. காரீய ரவைகள்" என்று சொன்னேன்.

ரவைகள் பட்டு யாரும் சாகாவிட்டாலும், அவை குறி தவறி, வேகத்துடன் வந்து யாராவது கண்ணில் பட்டால் அதோ கதிதானே? சுற்றிலும் தடுப்புக்கள் ஏதுமில்லாத இந்தத் துப்பாக்கி விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது? ஒரு வேளை இந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கவில்லையோ?

மயிலாப்பூர் காக்கைகள்

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் நிறைய மரங்கள் உள்ளன. அதனால் நிறையப் பறவைகளும் உள்ளன. அதிகாலையில் இவை காச்சூ, மூச்சென்று கத்தி எல்லோரையும் எழுப்பிவிட்டு விடும். ஆனால், ஏழு மணிக்கு மேலே ஒரு பறவையையும் பார்க்க முடியாது. அவை இரை தேடக் கிளம்பிவிடும் போல. பின்னர் மாலை 6-7 மணி வாக்கில் மீண்டும் இவைகளின் சப்தம் கேட்கும். என்னுடைய கேள்விகள்:--

இந்த பறவைகள் இரை தேட தினமும் எவ்வளவு தூரம் செல்லும்?   மயிலாப்பூரிலுள்ள காக்கைகள், மாம்பலம் வரை செல்லுமா? அல்லது மாங்காடு வரைசெல்லுமா? ஒவ்வொரு நாளும் ஒரே திசையில் பறக்குமா? அல்லது தினமும் வெவ்வேறு திசைகளில் பறக்குமா? தினமும் இரை கிடக்குமா? இல்லை, சில நாட்கள் பட்டினியும் கிடக்குமா? பட்டினி  கிடந்து சாகவும் நேரிடுமா?

- சிமுலேஷன்

Thursday, July 14, 2011

ஃபலூடா பக்கங்கள்-02


காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம்.


பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர்.  தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர், ஆந்திராவைச் சார்ந்தவர். தற்போதைய பரபரப்பான டில்லி அரசியல் சூழ்நிலையில், நிர்மலா ஐந்து நாட்கள் விடுமுறையில் ஆந்திரா சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஏன் இந்த திடீர் ஆந்திர பயணம்' என்றால், "அவசர வேலை' என்கிறார். அந்த அவசர வேலை, ஆவக்காய் ஊறுகாய் போடுவது தான்.


மாங்காய் சீசனில் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆவக்காய் ஊறுகாய் போடுவது வழக்கமாம். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஊறுகாய் போடுவது வழக்கம். எனவே, வீட்டு பெண்கள் எங்கு இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும், அனைத்தையும் விட்டு விட்டு, மாங்காய் சீசனில் சொந்த ஊருக்கு வந்து விடுகின்றனர். சுத்த பத்தமான நிலையில் ஆவக்காய் ஊறுகாய் போடுகின்றனர். இதில், நிர்மலா சீத்தாராமனும் சேர்ந்து கொள்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கலின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார். பிரதமர் நேரு அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் ஏற்றுக் கொள்கின்றார். லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணமேன்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம்? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியாவேன்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.


போன வாரம் நாரதகான சபாவில் "அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை"யின் சார்பில் இயக்குநர் மௌளிக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த 2 மணி நேர விழாவில் பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், கு.ஞானசம்பந்தன், டி.வி.வரதராஜன் ஆகியோர் பேச்சுக்களைக் கேட்டு  சிரித்து, சிரித்து வயிறு வலித்தது என்றால் அது பொய்யில்லை.

மௌளி சிறுவனாக இருந்த்த போது அவரது மாமா, பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்றாராம். மாமா, ஒரு கையில் சிறுவன் மௌளியையும், மற்றொரு கையில் தனது பெண் மஹாலட்சுமியையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார். இருவருக்கும் பலூன் வாங்கிக் கொடுக்கின்றார். மஹாலட்சுமி, மௌளியைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பதால், சிறுவன் மௌளியே இரண்டு பலூன்களையும் பிடித்தபடி நடந்து வருகின்றான், இந்தச் சமயத்தில்  அவன் கையில் இருந்த ஒரு பலூன் கை தவறிப் பறந்து செல்ல, மௌளி கூறுகின்றான்.

 "மாமா, மாமா, மஹாலட்சுமியோட பலூன் பறந்து போச்சு...!"




இந்தியாவின் தேசியப் பறவையான மயிலினை யாரும் கொல்லக் கூடது எனகிறது சட்டம். ஆனால் இந்த மயில்களால் பெருத்த பயிர் சேதம் ஏற்படுவதால், கோபிச்செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் விஷம் வைத்துச் சாகடிக்கப்படுகின்றனவாம். மயில்கள் விவசாயிகளால் இவ்வாறு விஷம் வைத்துச் சாகடிக்கப்படுவது சகஜம்தான் என்றும், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே விஷயம் பெரிதுபடுத்தப்படுவதாகவுல கூறப்படிகின்றது. பயிர் சேதத்தைத் தவிர மயில்களின் இனப்பெருக்கத்தால், பாம்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாம். பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம். மயில்களுடன் சேர்ந்து கொண்டு, எலிகளும் வேறு பயிரகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக் குருவிகளையே காண முடிவதில்லை என்று எல்லா ஊடகங்களிலும் கூறப்படுகின்றது. ஆனால், குயிலினங்கள் அதிகமாகி விட்டதோவென்று எண்ணுகின்றேன். யாராவது கவனித்தீர்களா? காலை 4 மணிக்கே குயில்கள் கூவி எழுப்பிவிடுவது போதாதென்று நடுப்பகலில் கூட இவை கத்திக் கொண்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை.

2010 அக்டோபர் மாதம் இங்கிலாந்திலுள்ள Cambridge University Pressக்கு 35,174 புத்தகங்களுக்காக £1.275 மில்லியன் பெருமானமுள்ள ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த நிறுவந்த்தின் வரலாற்றிலேயே இதுதான் பெரிய ஆர்டராம். இன்வாய்ஸ் மட்டுமே 2,794 பக்கங்கள் உள்ளது. இந்த ஆர்டர் கொடுத்தது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையமாகும்.




- சிமுலேஷன்

Sunday, July 03, 2011

ஃபலூடா பக்கங்கள்-01



பறவைகளுக்கும் தாகம் உண்டு

போட் கிளப் ரோடு அருகே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவின்யூ என்ற நிழற்சாலையில் ஒரு மரத்தினடியில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் வெயில் காலத்தில் பறவைகளுக்கென்று ஒரு நீர்த் தொட்டி வைத்துள்ளனர். என்ன ஒரு கரிசனமான ஒரு காரியம்.




தென்னந் தோப்பு தேவதையும் கேட்பரி நிறுவனமும்

ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வரும் "வயலும் வாழ்வும்; நிகழ்ச்சியினை பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். அரிய பல விஷயங்கள் சுவையாக இருக்கும். அதே போலத் தற்போது மக்கள் டி.வியில் மலரும் பூமி என்ற பகுதியில் "தென்னந் தோப்பு தேவதை" என்ற நிகழ்ச்சி ஒளீபரப்பாகின்றது. இதன் ஸ்பான்ஸர் யாரென்றால் Cadbury நிறுவனத்தினர். Cadbury நிருவந்துக்கும் க்கும் இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தால்,  இந்த வீடியோவில் இருக்கின்றது விடை.





ஞானி அங்கீகரித்த ஆபாசம்




சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புத்தகம் ஒன்றினைப் பரிசளித்தார். என் மேல் என்ன கடுப்போ தெரியவில்ல. "விருந்து"என்ற தலைப்பு கொண்ட நாவலை எழுதியவர் அலிடாலியா ராஜாமணி, ப்ரியாராஜ் என்ற பெயர்களில் எழுதி வரும் கட்டளை வெங்கட்ராமன் ராஜாமணி என்ற நபர்.   'கதை எப்படி?' என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "உவ்வே" ரகம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது வன்மம் கொண்டு எழுதப்பட்ட கதையென்றால் மிகையில்லை. இதில் நான் மிகவும் நொந்த விஷயம் என்னவென்றால், இந்த நாவலை மிகவும் சிலாகித்து "ஞாநி" முன்னுரை எழுதியிருப்பதுதான். ஞாநியின் மீதிருந்த மதிப்பு தடாலென்று இறங்கியது.

பற்கள் தேய்ந்த காரணம்

பல் மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது, "மேல்வரிசைப் பல்லின் விளிம்பு மட்டும் சற்றே தெய்ந்த்திருகின்றதே! ஒரு வேளை கால்ஷியப் பற்றாக் குறையாக இருக்குமோ?" என்றேன்.

"நகம் கடிக்கும் பழக்கம் உண்டோ" என்றார் டாக்டர்.

"அட. ஆமா."

- சிமுலேஷன்