Saturday, August 20, 2005

Read Only Memory

Read Only Memory!!!

அஞ்சாறு வருஷங்ளுக்கு முன்பு, பொழுது போகவில்லையே; எங்கேயாவது போகலாம் எண்று எண்ணி பேப்பரில் என்கேஜ்மெண்ட் காலத்தைப் பார்த்தேன். சாந்தோம் அருகே உள்ள பெரிய அரங்கத்தில் ஒரு மெமரி நிறுவனம் தனது விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி வித்தியசமாக ஆக இருக்கும் போல உள்ளதே என்று எண்ணி குடும்பத்துடன் சென்றோம்.நினைத்தபடியே நிகழ்ச்சி புதுமையாகத்தான் இருந்தது.

முதலில் சிறுமி ஷாமினி வந்து மேஜை மீதிருந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை ஓரிரு நிமிடங்களே பார்த்து விட்டு அத்தனை பொருட்கள் பெயரையும் தப்பில்லாமல் கட கடவென்று ஒப்பித்தாள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரது கைதட்டலையும் வாங்கிச் சென்றாள். பின்பு ராமகிருஷ்ணன் என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து இன்கம்டாக்ஸ் ஆக்ட்டின் க்ளாஸ் (clauses of income tax act) ஒவ்வொன்றையும் பிட்டுப் பிட்டு வைத்தார். இந்த வயதில் கூட மெமரி பயிற்சி சூப்பராக வேலை செய்கிறதே என்று எண்ணி வியந்தோம். இப்படியே இந்த மெமரி நிறுவனத்தில் பயிற்சி எடுத்திருந்த அனைவரும் வந்து
ஒவ்வொருவாக வந்து தத்தம் திறமைகளை காட்டிக் கலக்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்தபடியாக வந்தவர் குட்டியப்பன். சற்றே ஆர்த்த்டாக்ஸ் ஆக தோற்றம் அளித்த குட்டியப்பன் எடுத்துக் கொண்டது பகவத் கீதை. கீதையின் சருக்கங்கள் ஓவர் ஹெட் ப்ரொஜக்டரில் திரையிடப்பட்டது பார்வையளர்களுக்கு. பயபக்தியுடன் மேடை ஏறிய குட்டியப்பன் திரையைப் பார்க்காமலே, எந்த சருக்கத்தில் எந்த ச்லோகம் வருகின்றது என்பதை ஒரு பிழையும் இல்லாமல் சொல்லிக் கைதட்டல் பெற்றார். பின்னர் மேலும் அவர் பார்வையாளர்கள் கீதையிலிருந்து கேட்ட கேள்விகளுக்கும் தனது மெமொரி பவர் மூலம் பதிலளித்துக் கலக்கினார். மேடையை விட்டு கீழே இறங்கிய குட்டியப்பன் பெற்ற கைதட்டல் அடங்க வெகு நேரமாகியது.

அடுத்த நிகழ்ச்சியை அறிவிக்க வந்த அறிவிப்பாளர், ஒலிபெருக்கியில் அறிவித்தார், "Mr.Kuttiappan, You have forgotten and left your slippers on the stage. Please come and take them".

0 comments: