ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்."என்னம்மா? இந்த நேரத்திலே?""அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ.""எதுக்கும்மா?""அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்.""மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்""என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?""அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு""எதுக்கு?...""என்னடி இது? என்னோட டான்ஸ்...