Monday, December 28, 2009

எம் தமிழர் செய்த படம்

திரைப்பட வரலாறு, காட்டுயிர் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் பங்களித்தவர் தியோடர் பாஸ்கரன். இவர் தமிழ் சினிமா குறித்து எழுதிய ஒரு புத்தகம், "எம் தமிழர் செய்த படம்". தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் முக்கிய பரிணாமங்கள் சிலவற்றின் மீது கவனத்தைச் செலுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது இப்புத்தகம்.இது புத்தக வடிவம் என்று சொன்னாலும் கூட, குங்குமம், தீராநதி, மனோரமா இயர் புக், இந்தியா டுடே, தினமணி, காலச்சுவடு, புதிய பார்வை, கசடதபற ஆகிய இதழ்களில்,...

Wednesday, December 23, 2009

புகைப்படப் புதிர்-7

இந்த இரண்டு படங்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னென்ன?- சிமுலே...

Monday, December 21, 2009

சென்னை இசை விழா 2009-2010

முதலில் சென்னை இசை விழாவிற்கென ஒரு தனிப்பதிவு தொடங்கி, இசை விமர்சனங்கள் எழுதலாமென நினைத்தாலும், அதற்கென நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு புகைப்படப் பதிவு மட்டுமே! புகைப்ப்டங்கள் மட்டும் அவ்வப்போது தரவேற்றம் செய்யும் எண்ணம். இந்த வருடத்திற்கான் நான் கேட்ட முதல் கச்சேரி சாகேத ராம். சிவகாமி பெத்தாச்சி அரங்கினில், ப்ரம்மகான சபா ஆதரவில். நாரதகான சபாவில் கலாக்ஷேத்ரா குழுவினரின் குழு நடனங்கள். குழு நடனத்தின் மற்றொரு காட்சி. குழு நடனத்தின் மற்றுமொரு...

Friday, December 18, 2009

ஒற்றன்-அசோகமித்திரன்

அசோகமித்திரன் என்ற ஆளுமையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது ஒற்றன் பற்றிப் பேசப்படுதல் கண்டுள்ளேன். ஒற்றன் என்ற தலைப்பினைக் கேட்டவுடன், ஒரு துப்பறியும் நாவலாக இருக்குமோ அல்லது ஒரு உளவாளியின் வாழ்க்கை வரலாறோ என்றெண்ணத் தோன்றினாலும், அசோகமித்திரன், இந்த மாதிரி வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டரே என்று அழுத்தமாகப்பட்டது தவறாகவில்லை. (ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, "இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்" என்று சொன்னார்....

Thursday, December 17, 2009

அம்மையே அப்பா... ஒப்பிலா மணியே...

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே! இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே! ராகம்: த...

Saturday, December 12, 2009

இசை விழாவில் திருடர்கள்

சமீப காலங்களில், இசை விழா நடை பெறும் அரங்குகளில், ரசிகர்கள் இசையிலோ அல்லது நாட்டிய நிகழ்ச்சிகளிலோ தன்னை மறந்து முழ்கி இருக்கும் போது, சில விஷமிகள் அரங்கினுள் நுழைந்து, ரசிகர்களின் கைப்பை, செல் போன், காமிரா ஆகியவற்றினை ஆட்டையப் போட்டுவிடுகின்றார்களாம்.எனவே நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி சீட்டு, அழைப்பிதழ் ஆகியவற்றை அரங்கினுள் நுழையும் போது சோதனை செய்யக் கேட்டுக் கொண்டால், அதனை சங்கடமாக நினைக்காமல், அமைப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அதனைத் தங்களின் பாதுகாப்புக்காகவே செய்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.சமீப காலங்களில், கலைஞர்கள், தங்களது...

சாகேதராமன் - சிவகாமி பெத்தாச்சி அரங்கம் - ப்ரம்மகான சபா

நேற்று ப்ரும்மகான சபாவின் ஆதரவில் சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற லால்குடியின் சிஷ்யரும், விசாகா ஹரியின் சகோதரருமான சாகேதராமன் கச்சேரி குறித்த எனது பதிவு இந்த தனி வலையில். - சிமுலே...