Thursday, July 23, 2015

அவதானிப்பு



"சார்! இது ஒரு புதுமையான ஓவியப் போட்டி. ஒரு போட்டோவை பவர்பாய்ண்ட்லெ போட்டுக்க் காம்பிக்கறோம். அஞ்சு நிமிஷம் மட்டும் அத நல்லாப் பாத்துக்கணும். அதுக்கப்புறம் ஜஸ்ட் ரெண்டு மணி நேரம் மட்டும் தருவோம். அப்புறம் யார் தத்ரூபமாக வரையறாங்கன்னு பாத்துப் பரிசு தர்றோம்"

"சரி. நான் இப்ப என்ன பண்ணனும்?"

"ஒரு பத்து நிமிசம் ரெஸ்ட் எடுங்க சார்? இன்னம் பத்து நிமிஷத்லே வரஞ்சு முடிச்சுருவாங்க."

நகுலன் முதல் போட்டியாளரின் ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தார். நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ குறை தென்பட்டது. ஆமாம் தாடிதான் வித்தியாசம். கிட்டத்தட்ட டி.ஆர் தாடி மாதிரி வரஞ்சுருக்கான் மனுஷன். தாடிய ஒழுங்கா வரஞ்சுருந்தா கொஞ்சமாவது ரியலிஸ்டிக்கா இருந்திருக்கும்.

அடுத்த ஓவியத்தைப் பார்க்க எடுத்துக் கொண்ட நேரம் மொத்தம் மூணு நிமிஷங்கள் மட்டுமே.

"சார்! சார்! அந்த மூணாவது டேபிள்லே போய்ப் பாருங்க சார்! எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார்?"

மூணாவது டேபிள் ஓவியன் அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான். ஆடிப் போய் விட்டார் நகுலன்.

"மணி, அந்த ப்ரொஜெக்டர ஆன் பண்ணு. ஒரிஜினல் படம் எப்படி இருக்குன்னு பாக்கறேன்."

ப்ரொஜெக்டரை ஆன் செய்த அடுத்த நொடி, அந்தக் கல்லூரி வளாகத்திலிருந்த கிட்டத்தட்ட ஐநூறு பெரும் திரையிலிருந்த புகைப்படத்தையும், ஓவியத்தையும் மாறி, மாறிப் பார்த்து வியந்தனர்.

"மவனே! இது எப்படி? ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியலியே!"

"அதுவும் அத்தனை டீடெயில்ஸும் அஞ்சு நிமிஷத்லே அப்சர்வ் பண்ணியிருக்கானே."

நகுலன் ஒரிஜினலுக்கும், நகலுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா என்று உத்து உத்துப் பார்த்தார். தோல்விதான்!

"தம்பி! ரொம்ப நல்லா வரஞ்சுருக்கீங்க. ஒங்க பேரு....?"


"எம்.எல்.என்.எஸ். ரவி சார்"!

1 comments:

Suguna said...

Dear Sir,
I read a lot of comments written by you about ancient foods of sangam age in a blog. You had told a lot of things. for example, "வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்,
முரமுரெனவே புளித்த மோரும், - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து இட்ட சோறு
எல்லா உலகும்பெறும்".
I write a food blog at http://kannammacooks.com.
Would you have a compilation of food related songs in the sangam age.
It will be really helpful if you can share.
Thank you very much.