Sunday, February 26, 2006

பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத (அல்லது) - உரக்கச் சொல்லு

"ஹரி ஓம் விச்வம் விஷ்ணும் - வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:|" பூஜையறையிலிருந்து கணீரென்று குரல் வந்தது, பார்த்தா என்ற பார்த்தசாரதியிடமிருந்து. அதே நேரம் , "அம்மா போன்; உங்களுக்குத்தான்" என்று மாலினியிடம் கார்ட்லெஸ் போனை நீட்டினாள், சாந்தி. "போன் அடிச்சது கூடக் காதிலே விழல. உங்க அப்பா வழக்கம் போல சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரா". இது வழக்கமான பல்லவி. தினமும் நடக்கும் கூத்துதான். பார்த்தா தினமும் சத்தமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விடுவார். மாலினியும்...

Friday, February 24, 2006

அமெரிக்க அனுபவங்கள்-01

ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்கா ------------------------ அமெரிக்காவில் பொதுவாகப் போலீஸை, ஆபீசர்ஸ் என்று குறிக்கிறார்கள். இங்கு அவர்கள் அனவருக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்களும் அதற்குத் தக்கபடி, மக்களின் தோழனாகவும், குற்றம் செய்பவருக்குக் கிலியாகவும் இருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்காவுடன், எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட சில அனுபவங்கள். நரேஷ், ராஜன், ராமன் மற்றும் நான் நால்வரும் அப்போது நியூஜெர்சியிலுள்ள, டிரைடென்டிற்கு ஒரு...

Thursday, February 23, 2006

ஜப்பான் அனுபவங்கள்

"இகேபுகரோ"விலுள்ள "விங்ஸ்" ஹோட்டலில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிடா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, ஷட்டில் பஸ் பிடித்து வந்து விடுங்கள்" என்ற செய்தியும், இகேபுகரோ வரை படமும் இமெயிலில் அனுப்பியிருந்தார், நககோமி ஸான். சரிதான், இதொ வந்து விடும் என்று எண்ணி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், சுமார் இரண்டு மணி நேரப் பயணம். வரும் வழியெங்கும் சிக்கலான மேம்பாலங்கள். ஒவ்வொன்றும் ராட்சத சங்கிலிகள் கொண்டு பிணைக்கப்ப்ட்டிருந்தன. அடிக்கடி வரும் நில நடுக்கத்தால்...

அனைவரையும் கவரும் ஐயப்பன் ஆலயம்

சமீபத்தில் திருச்சி சென்ற போது, அங்குள்ள கன்டோன்மென்ட் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். இந்த ஆலயத்தில் என்னையும் மற்றும் பெரும்பாலோனரையும் கவர்ந்த அம்சங்கள் வருமாறு:-1. எந்த மதத்தினரும் ஆலயத்தில் நுழையலாம்.2. ஆண்டவன் பெயரிலே மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.3. அமைதிக்கு முக்கியத்துவம் தந்து, "அமைதியாய் இருக்கலாமே!", "மெளனமாய் தரிசிக்கலாமே!" என்று ஆங்காங்கே பலகைகள். இப்படிப் பல்வேறு அறிவுரைப் பலகைகள். ஆனால் எதுவுமே வலிந்து பேசாதவை. உ-ம்;"அருகம்புல்...

Wednesday, February 22, 2006

அரசு ஆவணம்-1846

1. சந்த்ரமா, பாங்க், டிளா பட்டியைக் கட்டக் கூடாது.2. புடவை, ஸாடி, பந்தளம் இவைகளுக்குக் கூட முந்தாணிக்கு ஜாலர் தைக்கக் கூடாது.3. குசூம்பா நாடா போடக் கூடாது.4. நாடாவுக்கு துய்யா தைக்கக் கூடாது.5. மக்தாபீ ரவிக்கை போட்டுக் கொள்ளக் கூடாது.6. பூ ராக்கடிக்கு பஞ்ஜ்யாவையும் களைகளையும் போட்டுக் கொள்ளக் கூடாது.7. க்ருஷ்ண கொண்டை, முத்துவின் கொத்தைப் போடக் கூடாது.8. சடையின் நுனியில் தங்கத்தில் குஞ்சத்தைத் தவிர பட்டுக்குஞ்சலத்தைப் போடக் கூடாது.9. புத்தியை வாங்கக் கூடாது.10. துப்பட்டாவைப் புழங்கக் கூடாது. 11. தாண்டாவிற்கு எலுமிச்சம்பழம் போடக் கூடாது.12. குங்குமம்...

ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தமக்கென்று ஒரு தாய் மொழியைக் கொண்டுள்ளன. உதாரணமாக...தமிழ் நாடு - தமிழ்புதுச்சேரி - தமிழ்கேரளம் - மலையாளம்லட்சத் தீவுகள் - மலையாளம்கர்னாடகா - கன்னடம்ஆந்திரப் பிரதேசம் - தெலுங்குஒரிஸ்ஸா - ஒரியாமஹாராஷ்டிரம் - மராட்டிகுஜராத் - குஜராத்திதாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி - குஜராத்திடாமன் மற்றும் டையூ - குஜராத்திகோவா - கொங்கணிபிகார் - மைதிலி ஜார்க்கண்ட் - சந்தாலிஜம்மு மற்றும் காஷ்மீர் - உருது, காஷ்மீரி மற்றும் டோக்ரிஅஸ்ஸாம் - அஸ்ஸாமீஸ், போடோமேற்கு வங்கம் - பெங்காலிதிரிபுரா...

Tuesday, February 21, 2006

தூண்டுதல்

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் திறம்பட நிர்வகித்தவர் திரு.வி.ஆர்.தீனதயாளு. அவர் ஒருமுறை அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் திரு.விக்கிரமன் அவர்களுடன் உரையாடும் போது, தனது ஆலையிலுள்ள எழுத்துச் சிற்பிகளின் எழுத்தோவியங்கள் கொண்ட ஒரு சிறப்பிதழ் வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவ்வாறே ஒரு சிறப்பிதழ் எங்களுக்கென ஒதுக்கப்பட்டது. எனது கதை ஒன்றும் அதில் பிரசுரமானது....

Saturday, February 18, 2006

தமிழ்த் தாத்தா உ.வே.சா

காவேரி வாய்ப்படவும், கறையான் வாய்ப்படவும், இருந்த கடைக்கழக நூல் ஏட்டுச் சுவடிகளை, ஊரூராகவும், தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும், திரிந்து தேடியும், விறகுத் தலையன்போல் தலையிற் சுமந்து கொணர்ந்தும், அல்லும் பகலும் கண்பார்வை ¦கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும், அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாகவும், பிறர்க்குப் பெரும் பயன்படவும், வெளியிட்டவர் தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர், பண்டாரகர்,...

Friday, February 17, 2006

விடையவன் விடைகள்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சிலகேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்றுசொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அதுஎப்படி வந்தது?8. தேவகுசுமம்...

இழிது இழிது ஈயெனெ இரத்தல் இழிது; அதனினும் இழிது.....

நியூயார்க் 'பென்' (Penn) ஸ்டேஷனில், ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளில், "தட்டு ஏந்துபவர்களை ஊக்குவிக்காதீர்கள்; அவர்களைக் கவனித்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளன" (Do not encourage pan-handlers; Charities are there to take care of them), என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். இந்த அமெரிக்கவாசிகள், மாதா மாதம் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, டாலர்களை நன்கொடையாகக் கொடுத்து விட்டுக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால், நம்ம பாடு கஷ்டம்தான். அது போன்ற ஒழுங்குடன் உருப்படியாக அமைப்புகள் ஏதும் இருக்காது. எங்கு திரும்பினாலும், பிச்சைக்கார்கள் மயம்தான்....

Thursday, February 16, 2006

கச்சா எண்ணெய்க்கு ஒரு வாழ்த்து

(வலைப்பதிவு இல்லாத காலமாயிருந்தாத்தான் என்ன. வாய்ப்பு கிடைச்சா விடுவமா (கிறுக்க).) கச்சா எண்ணெய் நாயகியே,கறுப்புத் தங்கக் காதலியே,மண்மகளின் பொன் மகளே,மணலி ஆலையின் மருமகளே!காலமெல்லாம் பொன்னாககளிப்புடன் வாழி எந்நாளும்.வளைகுடா நாடுகளில்வனப்புடனே வளைய வந்தாய்அரவிக்கடல் முதல் அஸ்ஸாம் வரை அழகுடனே பவனி வந்தாய்- இன்றோஎம்தமிழர் மகிழும் வண்ணம்எழில் நதியாம்காவேரிப் படுகைதன்னில்களிப்புடனே விளைகின்றாய்!சுத்திகரிப்பு ஆலைதன்னில்பக்குவமாய் பல உருவம் பெறுகின்றாய்.எந்தனை...

Monday, February 13, 2006

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்1. பி.எஸ்.கிருஷ்ஸ்வாமி ஐயங்கார்2. மதுரை.ஏ.வைத்தியனாத ஐயர்3. எல்.என்.கோபால்சாமி ஐயர்4. னீதிபதி.வி.பாஷ்யம் ஐயங்கார்5. கல்லிடைக்குறிச்சி பு.யக்ஞேஸ்வர சர்மா6. கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர்7. கல்லிடைக்குறிச்சி லஷ்மி சங்கர ஐயர்8. ஜி.மகாதேவன்9. தேவகோட்டை எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்10. மானாமதுரை எஸ்.ராமஸ்வாமி ஐயர்11. எஸ்.ராஜம் ஐயங்கார்12. தேவகோட்டை ரங்கண்ணா13. டாக்டர். ஆர்.காளமேகம் ஐயர்14. மாயனூர்.கே.ஜி.சிவசாமி ஐயர்16. ஜே.நடராஜ ஐயர்17. பெரம்பலூர் நரசிம்ம ஐயங்கார்18. அன்பில் ராஜகோபால ஐயங்கார்19. டாக்டர். ராமச்சந்திர ஐயர்20....

புதிரோ புதிர்... விடைகள்

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?- 1927ல் தேவகோட்டையில், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும், 1928ல் திருச்சி ஸ்ரீரங்கம் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும்ஏற்படுத்தி மின்சார வினியோகம் செய்ய ஆரம்பித்தனர். தனியார் மின்சார வினியோகத்தில் அவர்களே முன்னோடிகள்.2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?- திருத்தணி3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம்...

Saturday, February 11, 2006

புதிரோ புதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம் படித்து, 150 படங்களுக்கும் மேல் கதானாயகனாக நடித்த தமிழ் நடிகர் யார்?4. 1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மானாட்டுக்கு, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு உதவி செய்து மானாட்டை வெற்றிகரமாக முடிக்க உதவி செய்த திரைப்படப் பிரபலம் யார்?5. பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண...

Wednesday, February 08, 2006

அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் - புதிர்கள்

1. "அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்" புத்தகத் தொகுப்பினைத் தலை மீது வைத்து நடந்த்து வந்த ஐந்து வயது அருண்குமாரின் அப்பா ஆச்சரியப்பட்டார். ஏன்?2. உஷாஸ்ரீயும், தேவாவும் பஸ் ஸ்டாண்டில் தமது பெண் குழந்தைகளுடன் பஸ்ஸ¤க்காகக் காத்திருந்தனர். தேவாவையும், குழந்தைகளைªயும், 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் ஏற்றி விட்டு, அடுத்த பஸ்ஸில் தான் வருவதாகச் சொல்கிறார் உஷாஸ்ரீ. எப்படி?3. 1988ல் ரகுராமையா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்றிருந்த அணியில், தானும் இருந்தாக, வினோத் காம்ப்ளி சொன்ன போது, சச்சின் டெண்டுல்கர், விழுந்து விழுந்து சிரித்தார். ஏன்?4. கார்ப்பொரேஷன்...