Thursday, November 20, 2008

தமிழ்த் திரையிசையில் ஸ்வராக்ஷரம்

ஸ்வராக்ஷரம் என்பது கர்நாடக இசையின் ஒரு படிமம். ஸ்வராக்ஷரம் என்ற வார்த்தையினைக் கூர்ந்து கவனித்தால் அது ஸ்வரம், அக்ஷரம் என்ற இரு வார்த்தைகளின் கலவை என்பது புரியும். ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஏழு ஸ்வரங்களே இராகங்களுக்கு ஆதாரமாகும். அக்ஷரம் என்றால், பாடலில் பொதியப்பட்டுள்ள வார்த்தைகளாகும். ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும். திருவாரூர் ராமசாமிப் பிள்ளை என்பார் எழுதிய மோஹன இராகத்தில் அமையப் பெற்ற "ஜகதீஸ்வரி... கிருபை புரி"...

Thursday, September 25, 2008

செம்மங்குடி மாமாவும் ஏர்போர்ட் கச்சேரியும்

(செம்மங்குடி, லால்குடி மற்றும் திருச்சி சங்கரன்) "சங்கீதப் பிதாமகர்" என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரை ரசிக்காத பாரம்பரிய கர்நாடக இசையின் இரசிகர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். தனது இடைவிடாத உழைப்பாலும், இசையோடு ஒன்றிப் பாடும் பாவத்தினாலும், எளிமையான வாழ்க்கையாலும் அனைவரின் நன்பதிப்பையும் பெற்றவர் செம்மங்குடி மாமா. குறிப்பாக, ஒரு காலத்தில் இசையுலகில் சிலர் முன்னே, பின்னே இருப்பது சகஜமாக இருந்த போதிலும், தனி மனித ஒழுக்கத்திற்கு மிகுந்த...

Sunday, September 07, 2008

"ரெகார்ட் ப்ளேயர்" காலம்

"டெலெராட்" என்ற பெயர் கொண்ட வால்வ் ரேடியோ மட்டும் வைத்திருந்த எங்கள் இசை வாழ்வில் வசந்தம் வீசியது ஒரு நாள். உறவினரின் திருமணத்திற்கு கோவை சென்றிருந்த அம்மாவும், அப்பாவும் திரும்பி வரும்போது சர்ப்ரைஸாக "ரெகார்ட் ப்ளேயர்" ஒன்று வாங்கி வந்தது கண்டு நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனால், அதற்கு எலெக்ட்ரிக் கனெக்ஷன் எப்ப்டிக் கொடுப்பது என்பது மட்டும் புரிபடவில்லை. எந்த இடத்தில் எலெக்ட்ரிக் ப்ளக் இருக்கு என்றே தெரியவில்லை. மறுநாளே, கோவைக்கு...

Thursday, August 21, 2008

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

"சென்னை தினம்", மற்றும் "சென்னை வார" விழாக்களையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, நேற்று முன் தினம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற "அனில் ஸ்ரீனிவாஸின்" பியானோ இசை மற்றும் சென்னை இசை குறித்தான 'லெக்டெம்'. காதுக்கு அருமையான விருந்து. கூடப் பாடியவர் சுபிக்ஷா ரங்கராஜன். ("கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடியவர்) இப்படிக்கூடஒரு காம்பினேஷன் இருக்க முடியுமா என்று முதலில் யோசிக்க வைத்துப் பின்னர் பார்வையாளர் அனைவரையும் பரவசப்படுத்தினார் 'கஞ்சிரா' புருஷோத்தமன்....

Thursday, August 14, 2008

பிறந்தநாள் வேஷ்டியும் காலணிப் பரிசும்

பொதுவாகவே பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும், 'பிராண்டட்' சட்டை பேண்ட் மற்றும் ஹோட்டல் வகையறாக்களுக்கு 1500-2000 ரூபாய் வரை செலவாவது வழக்கம். இந்த முறை சற்றே வித்தியாசமாகக் கொண்டாட எண்ணி, பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டு வேஷ்டி சட்டையுடன் முடித்துவிடத் திட்டம் போட்டேன். காரணம்*** இறுதியில் சொல்கிறேன். ஒரிரு நாட்கள் முன்பு தி.நகரில் கண்ணில் பட்ட ராம்ராஜ் ஷோ ரூமுக்குச் செல்ல எண்ணினேன். நடிகர் ஜெயராமை கலக்கலாக மாடலிங் செய்ய வைத்து, வேஷ்டி மார்க்கெட்டில்...

Monday, July 07, 2008

உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?

உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?அவர் சீக்கிரம் விடுதலையாகி பத்திரமாக வீடு திரும்ப நீங்கள் சாப்பிட வேண்டிய மருந்துகள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ராக் வாட்டர் மற்றும் ஸ்வீட் செஸ்ட்நட்.உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் (IC Unit), “இப்போது ஏதும் சொல்ல முடியாது”, என்று டாக்டர்கள் கைவிட்ட கேசுகளில் (மூளையில் இரத்தப் பெருக்கு, மூன்றாவது ஹார்ட் அட்டாக்) நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ஸ்வீட் செஸ்ட்நட் மற்றும் கார்ஸ் ஆகிய நான்கு மருந்துகளையும் சேர்த்து (2-4 மணிக்கோர் தடவை)...

Saturday, July 05, 2008

கரம்சந்த் காந்தியும் கறி முயல்களும்

நாங்கள் உங்களுக்கு உயர்ரக முயல்கள் தருகின்றோம். அது போடும் குட்டிகள் 4 மாதம் கழித்து, 3 கிலோ வந்ததும் கிலோ நூறு ரூபாய் வீதம் அனைத்துக் குட்டிகளையும் உயிருடன் உங்கள் இடத்திலேயே வந்து, எடை போட்டு எடுத்துக் கொள்கின்றோம்.மேலும் ஈமு கோழிகளையும் நாங்கள் தருகின்றோம். நீங்கள் பெற்று அதை முறையாக வளர்க்க வேண்டும். அது போடும் முட்டைகளை, ஒரு முட்டை 1500 ரூபாய் வீதம் நாங்களே உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். இதனுடைய கறி உயிருடன் எடை போட்டு கிலோ 800 வீதம் உங்கள் இடத்திலேயே வந்து பெற்றுக் கொள்கின்றோம்.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளத் தேவையான இடம்:மகாத்மா...

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா - நூல் விமர்சனம்

ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355. சமீபத்தில் இந்த விளம்பரத்தை தினமணியில் பார்த்திருப்பீர்கள். இரண்டாம் பக்கத்தில் ஒரு ஒரத்தில் ஏல விளம்பரம், கோர்ட்டு நோட்டீஸ் இதுக்கெல்லாம் மத்தியிலே பொடி எழுத்திலே வந்தது. மேற்கண்ட இந்த விளம்பரத்தைப் பார்த்த...

Saturday, June 21, 2008

மந்திரமாவது நீறு...சிமுலேஷன் பாடிய சிவன் பாடல்-01

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே Get this widget | Track details | eSnips Social DNA பதிகம்: திருநீற்றுத் திருப்பதிகம் பாடல்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தலம்: திரு ஆலவாய் (மதுரை) பாடியவர்: சிமுலேஷன் இராகம்: யமன் கல்ய...

Saturday, May 17, 2008

கொய்யா மரத்துடன் ஒரு டேட்டிங்

பண்பலை வானொலி நிலையங்களுக்கும், தொலைக்காட்சி நிலையங்களுக்கும், திரைப்படப் பாடல்களைத் தொடர்ந்து ஒலி/ஒளிபரப்ப ஏதெனும் ஒரு காரணம் வேண்டும். ஏதாவது ஒரு பெயரில் நிகழ்ச்சி ஒன்றினை வைத்து, இடையிடயே திரைப்படப் பாடல்களைப் போட ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு "கருத்து" (theme) எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, "ரோட்டில் எச்சில் துப்புவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கலாம்" என்று ஒவ்வொரு நேயரிடமும் கேட்டுவிட்டு, அவர்களுக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்புவது ஒரு வகை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில், ஏதேனும் பயனுள்ள கருத்து ஒன்றினைப் பகிர்ந்து கொள்கின்றார்களே...

Friday, May 16, 2008

புகைப்படப் புதிர்-6

1) இந்த அம்மிணி யார்?2) இவர் ஏன் இப்படிப் பார்க்கின்றார்? இப்படிப் பார்ப்பதனை என்னவென்று சொல்லலாம்? 3) இவ்ன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்? 4). இந்த வியாதிக்கு என்ன பெயர்? ஏன் அந்தப் பெயர்? 5). இவர் எதற்காக இப்படிச் செய்கின்றார்? 6) இது என்ன? எதற்குப் பயன்படுகின்றது?விடைகளை உடனே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடைகள் நாளை வெளியிடப்படும். - சிமுலே...

Saturday, April 12, 2008

ராகசிந்தாமணி கிளப் - ஹேமவதி - தர்மவதி - நீதிமதி

"எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். கர்னாடிக் ம்யூசிலே ஒங்களுக்கெல்லாம் இருக்குற ஆர்வத்தைப் புரிஞ்சுண்டு, இன்னிக்கி "ராகசிந்தாமணி ம்யூசிக் க்ளப்"போட இந்த மொதல் மீட்டிங்குக்கு வந்திருக்கிற, ஒங்க எல்லாருக்கும் நன்றி. ஏற்கெனவே சொன்னபடி இந்த விவாதக் களம், ஒரு இன்ஃபார்மல் 'கெட்-டு-கெதர்'தான். அதனால, யார் வேணும்னாலும், எந்த ஆர்டர்ல வேணும்னாலும் பேசலாம்." "ஆனா தலைப்பு மட்டும் என்னென்னு நாங்க ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம்." "ஹேமவதி-தர்மவதி-நீதிமதி". இதுதான் இன்னிக்கித் தலைப்பு." "பாலா!, நீங்க வேணும்னா மொதல்ல ஆரம்பியுங்கோ" "தேங்ஸ், சிமுலேஷன்....

Friday, April 04, 2008

ஓர் உத்தம தினம்

ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள வாத்யாரின் "ஓர் உத்தம தினம்" (சுஜாதா சுவடுகள்) என்ற சிறுகதையின் முடிவினை யாரேனும் விளக்க முடியுமா?(ஹி...ஹி... நான் நினைச்ச முடிவேதான் நீங்களும் நினைச்சிருக்கீங்களான்னு செக் பண்ணத்தான்).- சிமுலே...

Saturday, March 22, 2008

ஜெயமோகனைக் கண்டித்தவர்கள் இதனை ஏன் கண்டிக்கவில்லை?

ஜெயமோகனைக் கண்டித்தவர்கள் இதனை ஏன் கண்டிக்கவில்...

Monday, March 17, 2008

மயிலை திருத்தேர்

"கயிலையே மயிலை; மயிலையே கயிலை" என்றழைக்கப்ப்டும் மயிலாப்பூர் கபாலி திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி உத்திரப் ப்ரம்மோற்சவ நிகழ்ச்சியின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது."காணக் கண் கோடி வேண்டும்" என்று பாடல்பெற்ற இந்த அழகிய திருத்தேர் வைபவத்திற்கு, மயிலாப்பூர் KUTCHERIBUZZன் இந்த இணைப்பில் நேரடி வர்ணனை செய்யப்படுகின்றது. வர்ணன கொடுப்பவர் வின்சென்ட் டிசோசா என்று நம்புகின்றேன்.வெளியூர் ஆத்திக அன்பர்களும் அயல்நாடு வாழ் இந்தியர்களும் நேரடி வர்ணனையைக் கண்டு மகிழுங்கள். வர்ணனை ஆங்கிலத்தில் இருப்பதால் உங்கள் வெளிநாட்டு நண்பர்களையும்...

Saturday, March 15, 2008

டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு - நூல் விமர்சனம்

சுஜாதா எழுதி பூர்ணம் விசுவநாதன் இயக்கத்தில் வெளிவந்த "அடிமைகள்" போன்ற நாடகங்கள் சிலவற்றை எண்பதுகளில் பார்த்திருக்கின்றேன். நேற்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தது நாரத கான சபாவில், குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் குழுவினரின் "டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் மூலம். நாடகத்தின் ஆரம்பக் காட்சியே கோர்ட் சீனாகும். அடுத்த இரண்டு மணி நேரமும் இந்தக் கோர்ட்டிலேயே இருக்கப் போகின்றோம் என்பதினை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்காவில்...

Sunday, February 24, 2008

மாரமணனும் மாயக்கூத்தனும்

சென்ற முறை டல்லஸ் சென்றபோது, "உன்னிக்கிருஷ்ணன் கச்சேரி உள்ளது போலாமா?" என்றான் வைத்யா. ஆஹா, அமெரிக்கா வந்து மண்டை காய்ந்து கொண்டிருக்கும் நமக்கு "கரும்பு தின்னக் கூலியா?" என்றெண்ணி, உடனே சரியென்றேன். டல்லஸ்ஸின் "இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமி", அந்த சனி மாலை, நம்மவர்களால்களை கட்டியிருந்தது. "உன்னோட 'ராக சிந்தாமணி' புத்தகத்தையும் கொண்டு வா. யாராவது ஆர்வம் காட்டக்கூடும்" என்றதால், புத்தகப் பிரதிகளையும் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். கச்சேரி ஆரம்பிக்க...