ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவரிடம் ஒரு கோப்பு சென்றது. அதில் அன்றைய தினம் ஐ.சி.எஸ் அதிகாரி எஸ்.ஏ.வெங்கட்ராமன், தனது மகளின் கல்யாணத்திற்கு காய்கறிகள் வாங்க, ஜெயில்களுக்கும், மாணவர்கள் விடுதிகளுக்கும் காய்கறி சப்ளை செய்யும் ஒருவரிடம், மார்க்கெட் விலையை விடக் குறைவான விலைக்கு, காய்கறிகளை வாங்கியதாகக் குற்றச்சாட்டு. இதை விசாரணை செய்ய ஒரு கமிஷன் அமைக்குமாறு நேரு உந்தரவிட்டார்.
கமிஷன் விசாரணையில் "காய்கறிக்கு நான் பணம் செலுத்தி விட்டேன்" என்று வெங்கட்ராமன் கூறினார். எனினும், குறைந்த விலைக்கு வாங்கியது அவரது ஊழல் எண்ணத்தை, அதாவது உத்தியோகத்தை, தனது தனி நன்மைக்குப் பயன்படுத்தும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதி, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் வெங்கட்ராமன் ஐ.சி.எஸ் ஜெயில் தண்டனை பெற்றார். ஜெயிலில் இருக்கும்போது, ஜெயில்களின் நடத்தை விதிகளுக்கான புத்தகத்தை முழுமையாகப் படித்து, புதிய அம்சங்களைச் சேர்த்தும், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த விதிமுறைகளைக் களைந்தும், புதிதாக ஒரு மேனுவலை உருவாக்கினார். நாடெங்கிலும் அது இன்றும் பின்பற்றப்படிகிறது.டது.
"வேலையில் நேர்மையான நீங்கள் காய்கறிக்கு டிஸ்கவுண்ட் பெற்றது சிறையிலடைக்கும் அளவுக்குப் பெரிய குற்றமா?" என்று அவரிடம் கேட்கப்பட, அதக்ற்குப் பதிலளித்த அவர், "எனது பதவியை உபயோகித்து பலனடைந்தது தவறுதான். அடைந்த பலன் எவ்வளவு என்பதைவிட, இது போல் பதவியை துஷ்பிரயோகம் செய்யும் மனநிலை, பிற்காலத்தில் பெரிய தவறுகளையும், ஊழலையும் செய்யும் தைரியம் எனக்கும் பிற அதிகாரிகளுக்கும் அளிக்கலாம்" என்று கூறினார்.
முருகன். ஐ.ஏ.எஸ் (ஓய்வு), துக்ளக்கில்
- சிமுலேஷன்
Thursday, December 23, 2010
குற்றம் நடந்தது என்ன? - குறைவான விலையில் காய்கறிகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இதைப் படித்து விட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விடுவதைத் தவிர வேறென்ன செய்ய?அது அந்தக் காலம்!
Post a Comment