Monday, February 22, 2010

ஸத்குரு தியாகராஜரும் கோபாலகிருஷ்ண பாரதியும்


கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் முன்பு, (1985) "ஸத்குரு தியாகராஜரும் கோபாலகிருஷ்ண பாரதியும்" என்ற தலைப்பில் என் அப்பா கோவை வானொலி நிலையத்தில் ஆற்றிய உரைச்சித்திரம் இங்கே.

Get this widget | Track details | eSnips Social DNA

- சிமுலேஷன்

Friday, February 19, 2010

அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog)

ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:      S G3 M1 P N2 S

அவரோகணம்:  S N2 P M1 G3 R3 S

இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம். காஷ்மீரத்து இசைக் கருவியான சந்தூர் எனப்படும் இசைகருவியில் இந்த ராகத்தினை வாசிக்கக் கேட்க, ஆனந்தப் பரவச நிலை ஏற்படும்.

ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். முதலில் பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் இந்த ராகத்தினை வாசிப்பதை கேட்போமே.



அடுத்தபடியாக எஸ்.காயத்ரி சதாசிவ ப்ருமேந்திராவின் "ஸ்மரவாரம் வாரம்’ என்ற பாடலைப் பாடுவதை இங்கே கேட்போம்.

இந்த உருப்படிகளையெல்லாம்விட, எனக்கு மிகவும் பிடித்தது, கடம் கார்த்திக் குழுவினரின் ஜோக்தான். எம்பார் கண்ணன், கீ போர்ட் சத்யா ஆகியோருடன் வாசிக்கும் ஜோக் ராக உருப்படியினை நேரிலும் கேட்டிருக்கின்றேன். நீங்களும் கேளுங்களேன்.



தமிழ்த் திரைப் பாடல்களில் ஜோக் ராகத்தில் அமைந்த பாடல்கள் என்னென்ன?

1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்
2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி

இந்தத் தமிழ்த் திரைப்பாடல்களின் சுட்டிகள் கிடைக்கவில்லை.

திரைப்பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் என்றால் அது ஒரு மலையாளப் படப்பாடலாகும். அது என்னெவென்று இந்நேரம் கண்டுபிடித்திருபீர்களே? ஆமாம். "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" என்ற அருமையான படம்தான் அது. "ப்ரம்மதவனம் வேண்டும்" என்ற அந்தப் பாடல் ஜேஸுதாஸின் ஒரு அழகிய படைப்பு. பாடுவதற்கு கடினமான பாடல். ஆனால் கேட்பதற்கு சுகமான பாடல். கேளுங்கள் இப்போது.



- சிமுலேஷன்

Saturday, February 13, 2010

அபூர்வ ராகங்கள்-03-மஹதி

மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகாணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:    S G3 PA N2 S
அவரோகண்ம்: S N2 PA G3 S

இந்த ஆரோகணம், அவரோகணத்தினைப் பார்த்தால் வெறும் நான்கே நான்கு ஸ்வரங்கள் தான் உள்ளன. நாலு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு ராகம் இருக்க முடியும்? அதில் எப்படிப் பாட முடியும்? என்று கேட்டால், சங்கீத மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவால் மட்டுமே இது முடியும் என்றுதான் சொல்லலாம். ஆம். இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு.


சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராகத்தினை அறிமுகம் செய்ததாகத் தெரிகின்றது. இந்தக் கச்சேரியிலிருந்து பாடிய "மஹதி" ராகப் பாடலான "மஹனீய மதுர மூர்த்தே" என்ற பாடலைக் கேட்போமா?

'அபூர்வ ராகங்கள்' தமிழ்த் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். விஸ்வநாதன் தற்செயலாக பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கின்றாராம். அப்போதுதான் பாலமுரளி தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் உருவானதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான "அதிசய ராகம்; ஆனந்த ராகம்; அழகிய ராகம்" என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. அதிசய ராகத்தினைக் கேளுங்கள் இங்கே.

 

கொசுறுச் செய்தி: மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், 'எந்தப் படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார்', என்று நீங்கள் வியப்பது புரிகின்றது. முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரத இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டுபடும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

- சிமுலேஷன் 

Friday, February 12, 2010

அபூர்வ ராகங்கள்-02-சாவித்ரி

சாவித்ரி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும்.. இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: S G3 M1 P N2 S
அவரோகணம்: S N2 P M1 G3 S

இந்த ராகத்தில் கர்நாடக இசையில் பாடல்கள் ஏதும் அமைந்ததாகத் தெரியவில்லை. ஏன்? விருத்தம், RTP போன்ற வகையறாக்களைக் கூட யாரும் பாடுவதாகத் தெரியவில்லை. நினைவுக்குத் தெரிந்த வரையில் எல்.சங்கர் மட்டுமே வயலினில் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். அதுகூட சாவித்ரியில் தொடங்கிப் பின்னர் ஒர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. இந்த சாவித்ரி ராகமாலிகையைக் கேட்க வேண்டுமென்றால் இங்கே சென்று கேட்கலாம்.

தமிழ்த் திரையிசையில் சாவித்ரி ராகத்தில் அமைந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி நாலே பாடல்கள்தான் உள்ளன. இவற்றில் முதன்மையானது எது என்றால் இசைஞானி இளையராஜா இசையமைத்து ஜெயச்சந்திரன் தனது குழுவினரோடு பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடலாகும். இது, 'காற்றினிலே வரும் கீதம்' என்ற திரைப்படத்தில் அமைந்துள்ளது. இடையிடையே 'தையரத் தையா; தையரத் தையா' என்று வரு கோரஸை கேட்கும்போது நாமும் அந்தப் படகில் சவாரி செய்வது போலவே இருக்கும். இன்டர்லூடாக வரும் புல்லாங்குழல் இசை அனைவரையும் மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது. என்னுடைய பேவரைட் பாடல்களில் இதுவும் ஒன்று. எனது மனைவிக்கும்கூட. இந்தப் பாடலைப் பாடித்தான் அவளைப் பதின்ம வயதில் மயக்கினேனாம். (பிப்ரவரி 14ஐ நெருங்கும்போது தானாக இதையெல்லாம் எழுதக் தோன்றுகின்றது). இப்போது இந்தப் பாடலைக் கேட்போமா?



அடுத்தாக 'புன்னகை மான்னன்' படத்தில் வரும் "கவிதை கேளுங்கள்" என்ற பாடல். இதுவும் சாவித்ரி ராகத்தில் அமைந்ததுதான்.



 மூன்றாவது பாடல், நம்ம டி.ஆர் இசையமைத்த "வசந்தக் காலங்கள்" என்ற பாடல். இடம் பெற்ற திரைப்படம் 'ரயில் பயணங்களில்". இதுவும் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் என்று தெரியும்போது, ஒரு வேளை சாவித்ரி ராகம் மளையாளத்தில் பரவலாகப் பாடப்படும் ராகமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.



நிறைவாக 'அழகன்' திரைப்படத்தில் இடம் பெற்ற "துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி" என்ற பாடல். சிறுவர், சிறுமியர் கோரஸாகப் பாடிய பாடல். பாடலின் அமைந்துள்ள தாளக்கட்டினைக் கவனித்தால் காட்சியமைப்புக்குப் பொருத்தமாக இசையமைத்திருப்பது தெரிய வரும்.



இன்னொமொரு சாவித்ரி தெலுங்குத் திரையுலகிலிருந்து. பாடியவர் மனோ.



மேலே கண்ட எல்லாப் பாடல்களுமே வெவ்வேறு மெட்டுக்களில் அமைந்திருப்பதனால் வெவ்வேறு ராகங்களில் அமைந்திருப்பது போலத் தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தால் அவற்றினிடையே இழையோடும் "சாவித்ரி" ராகத்தினை அறிந்து ரசிக்கலாம்.


- சிமுலேஷன்

Thursday, February 11, 2010

Tuesday, February 09, 2010

கமல் ஹாசனும், நானும், ராகசிந்தாமணியும்






சமீபத்தில் 'முத்துமீனாள்' எழுதிய "முள்" என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் (என் மனைவியின் தோழி சுபா மொழி பெயர்த்தது) வெளியீட்டு விழா புக் பாயிண்ட் அரங்கினில் நடைபெற்றது. கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர். விழா துவங்க சற்று நேரம் முன்பாகவே வந்திருந்த கமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் பரிசளித்தேன். ஒரிரு பக்கங்களைப் புரட்டிய பின், கர்நாடக இசை குறித்து சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டார். பின்னர் விழா துவங்கும் வரை எனது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். விழாவின் முடிவில் பதிவர்கள் துளசி கோபால், மதுமிதா, கவிஞர்கள் இன்பா சுப்ரமணியம், புதிய பார்வை கல்யாண்குமார் ஆகியோருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்தேன்.

- சிமுலேஷன்

Sunday, February 07, 2010

அபூர்வ ராகங்கள்-01-ஸ்ரோதஸ்வனி

ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம் - S G2 M1 P N3 S
அவரோகணம் - S N3 P M1 G2 S

இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த ராகம், நினைவுக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பாடல் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற படத்தில் இடம் பெரும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்ற பாடல். ஜேசுதாஸ் மற்றும் சுசீலா குரலில் பாடப்பட்ட ஒரு இனிமையான பாடல்.




இரண்டாவது பாடல் "நீங்கள் கேட்டவை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஓ. வசந்த ராஜா" என்ற பாடலாகும். இதுவும் ஸ்ரோதஸ்வனியில் அமைந்த ஒரு இனிமையான பாடலாகும். இதன் சுட்டி கிடைக்கவில்லை.

கர்நாடக இசையில் இந்த ராகத்தைக் கேட்க வேண்டுமென்றால், வயலின் எம்பார் கண்ணனும், கீ போர்ட் சத்யநாராயணவும் சேர்ந்து வாசித்துள்ள ஒரு அருமையான ஆலாபனையைக் கேட்க வேண்டும். கடந்த வருடம் லாஸ் ஏஞ்கல்ஸ் நகரில் இதனை வாசித்துள்ளார்கள். இந்த ஆலாபனையைக் கேட்கும்போது யாராக இருந்தாலும் சில நிமிடங்களுக்காவது பரவச நிலை அடைவது நிச்சயம்.




இந்த ராகத்தில் மேலும் பாடல்கள் இருப்பதாகத் தெரிந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

- சிமுலேஷன்

Tuesday, February 02, 2010

அம்பா பாட்டி

தனது பாட்டியைப்பற்றி ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் என் அம்மா. இசைத் துறையில் அவருக்குள்ள ஈடுபாடும், உறவினருக்கு அதனைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமும் அலாதியானதாம். தனது சொந்தக் காலிலேயே நிற்க வேண்டுமென்ற அவரது வைராக்கியமும் பெரியது. எனது கொள்ளுப் பாட்டியான அம்பா பாட்டியின் கதையினை என் அம்மாவின் வாயிலாகவே படிக்கலாமே!

- சிமுலேஷன்

Wednesday, January 20, 2010

புதிரோ புதிர்

1. கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் ராவ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று வழங்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில், விசாகப்பட்டினத்தில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டபோது மறைந்த கொல்லபுடி ஸ்ரீனிவாசராவ் அவர்களின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகின்றது. எந்தச் சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது?

2. மூன்று உயர்ந்த விளையாட்டு விருதுகளான அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது
அனைத்தையும் பெற்ற முதல் இந்தியர் யார்?

3. 5 -> 1 -> 3 -> 2. நான் வங்கித் துறையைச் சேர்ந்தவன். என் நினைவுகளிலிருந்து எண்களை நீக்க முடியாது. "ஹரி, ஷ்யாம், கோவிந்த்,
கிருஷ்ணா." எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருகின்றோம்.

4. Y என்ற கம்பெனியின் ஒரு தயாரிப்பான X என்ற பொருளானது, 2007-08 ஆண்டுகளில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழிதின் "பிராண்ட் ஈக்யுடி"யால், வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் முதல் இடமாகத் தேர்வு செய்யப்பட்டது. இப்பொருளானது ஆசியாவிலேயே அதன் வகைகளில் பெரியதாக இருந்தது. மஸ்தி (2004), கூலி நம்பர் 1 (1995), ஆவாரா பகல் தீவானா (2002), டார்ஜான் தி வொண்டர் கார் (2004), கோல்மால் ரிடர்ன்ஸ் (2008), ஜோரு கா குலாம் (2000) மற்றும் லஜ்ஜா (2001) ஆகிய திரைப்படங்களில் இந்தப் பொருள் குறித்து
பேசப்பட்டுள்ளது. X என்ற இந்தப் பொருளின் புகழுக்கு அதன் அறிவார்ந்த விளம்பரங்களும் ஒரு காரணமாகும். X மற்றும் Yயினைக் கண்டுபிடிக்கவும்.

5. காசிநாதுனி நாகெஸ்வர ராவ் பந்துலு என்பவரால் உருவாக்கப்பட்ட X என்பது Y என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைமையகம் பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டது. எனினும், அதன் பழைய தலைமையகமான Y என்பது இன்றும் Xன் புகழ்பெற்ற பொருளில் பொறிக்கப்பட்டுளது. ஆரம்பக் காலங்களில் இந்தப் பொருளை நாகேஸ்வரராவ் அவர்கள் இசைக் கச்சேரிகளில் இலவசமாக வழங்கிப் பிரபலப்படுத்தினார். x என்ற இந்தப் பொருள் என்ன? Y எந்த இடம்?

6. X என்ற நிகழ்ச்சி, "சிரிக்கும் புத்தா" என்றழக்கப்பட்டது. அது அமெரிக்காவில் "மகிழ்ச்சியான கிருஷ்ணா" என்றும் அழைக்கப்பட்டது. X என்ற இந்த நிகழ்ச்சி என்ன?

7. "வெஸ்டர்ன் இண்டியா வெஜிடெபிள் புராடக்ட்ஸ்" என்ற நிறுவனம், 1947ல் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள அமல்நேர் என்ற இடத்திலுள்ள ஒரு எண்ணெய் ஆலையில் துவங்கப்பட்டது. பின்னர் இதன் பெயர் "வெஸ்டர்ன் இண்டியா புராடக்டஸ்" என்று மாற்றப்பட்டது. இதன் உரிமையாளர் மறைந்த பின்னர், அவரது மகனால், X என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. X நிறுவனமானது சமையல் எண்ணெய், துணி துவக்கும் சோப்பு, மெழுகு மற்றும் டின் கலன்கள் முதலிய நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாகியது. X என்ற இந்த நிறுவனத்தின் தற்போதய பெயர் என்ன?

8. ரோமானியர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கிரேட் பிரிட்டன் பிரதேசத்தினை X என்ற பெயரால் குறிப்பிட்டனர். X இண்டஸ்ட்ரீஸ்
லிமிடெட் என்பதி கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு இந்தியக் கம்பெனியின் பெயராகும். இந்தக் கம்பெனி 1892 ஆம் ஆண்டில் 295 ரூபாய் மூலதனத்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. X ன் உற்பத்திப் பொருளுக்கு இரண்டாவது உலகப் போரின் போது நிறையக் கிராக்கி ஏற்பட்டு விற்பனை அதிகரித்தது. "தி எகனாமிஸ்ட்" பத்டிரிக்கை இது ஒரு மாபெரும் சகாப்தம் என்று குறிப்பிட்டது. X என்பது என்ன?

9. புபன் தகாத் என்ற உள்ளூர் கொள்ளைக்காரன் பெயரால் X என்ற இந்த இடம், "புபன்தங்கா" என்றழைக்கப்ப்ட்டது. X என்ற இந்த இடத்தில் Y என்ற புகழ்பெற்றவர் "பாத பவனா" என்ற பள்ளினைத் துவக்கினார். இதன் நோக்கமே, இயற்கைச் சூழலில் கல்வி பெறுவதுதான். Y "அமர் ஷோனார் பங்ளா" என்ற வங்க தேசத்தின் நாட்டுப்பண்ணையும் எழுதினார். X மற்றும் Yயினைக்
கண்டுபிடிக்கவும்.

10. இந்திய விடுதலைப் போராட்டத்தில் புகழ் பெற்ற " இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற கோஷத்தின் அடிப்படையில் முதலில் இவருக்கு "இன்குலாப்" என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர், தனது சொந்தப் பெயரான் "ஸ்ரீவஸ்தவா" என்ற பெயரை விடுத்து, இவர்தம் தந்தையார் எழுத்துலகில் பயன்படுத்திய புனைபெயரை உபயோகிக்கத் துவங்கினார். தனது இருபதுகளில் கப்பல் கம்பெனியில் தரகராக செய்து வந்த வேலையினை உதறி வேறு ஒரு துறைக்குச் சென்ற இவர், இன்று இந்தியாவில் புகழ் பெற்ற மனிதர்களில் ஒருவர். இவர் யார்?

ஸ்டார்ட் ம்யூஜிக்!

- சிமுலேஷன்

தூர்தர்ஷனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி


எதற்காக மேடையில் இத்தனை கலர்? எத்தனை கல்ர் என்று யாராவது சொல்ல முடியுமா?

- சிமுலேஷன்

Thursday, January 14, 2010

கனுப்பிடி

காணும்பொங்கல் பரிசளித்த சகோதரனுக்காக
கனுப்பிடி வைத்தாள்
காக்காயைக் கூப்பிட்டபடி.

- சிமுலேஷன்

Friday, January 01, 2010

மயிலாப்பூர் ஆலமரங்கள் - விவரணப் படம்

கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் "மயிலாப்பூர் கொண்டாட்டங்கள்" நடைபெற்று வருவதனை முக்கால்வாசி மயிலாப்பூர்வாசிகளும் அறிந்து, அதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் வழக்கமே. அதில் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் குறித்த விவரணப் படங்கள் யாரேனும் எடுத்திருந்தால் அதன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மயிலாப்பூர் டைம்ஸின் வின்சென்ட் டிசோசா கேட்டிருந்தார்.

'இதனை முயற்சித்துப் பார்த்தால்தான் என்ன?' என்றெண்ணி, நானும் ஒரு விவரணப் படமமெடுத்துள்ளேன். மயிலாப்பூர் ஆலமரங்கள் என்ற இந்த படத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று எல்லாக் கருத்துக்களைக் கூறுங்கள்.

சிறிது நேரம் buffering ஆன பின்பு படத்தினைப் பார்க்கவும். இல்லையென்றால் voice synchronization அவ்வளவு சரியாக வராது.

- சிமுலேஷன்



Monday, December 28, 2009

எம் தமிழர் செய்த படம்



திரைப்பட வரலாறு, காட்டுயிர் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் பங்களித்தவர் தியோடர் பாஸ்கரன். இவர் தமிழ் சினிமா குறித்து எழுதிய ஒரு புத்தகம், "எம் தமிழர் செய்த படம்". தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் முக்கிய பரிணாமங்கள் சிலவற்றின் மீது கவனத்தைச் செலுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது இப்புத்தகம்.

இது புத்தக வடிவம் என்று சொன்னாலும் கூட, குங்குமம், தீராநதி, மனோரமா இயர் புக், இந்தியா டுடே, தினமணி, காலச்சுவடு, புதிய பார்வை, கசடதபற ஆகிய இதழ்களில், தியோடர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பேயாகும். ஆகவே, முழுப்புத்தகம் படிக்கும்மோது ஓட்டம் சிறிது தடைப்டுகின்றது. இதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்தப் புத்தகத்தில் நல்ல பல சுவையான விஷயங்கள் இருப்பதனை ரசிக்கலாம். ஆவணப் படங்களின் தோற்றம், பிரிட்டிஷ் அரசும் தமிழ்த் திரையும், சினிமாவும் தணிக்கையும் ஆகிய தலைப்புகளில் அலசியுள்ளார். இது தவிர, தமிழ் சினிமாவில் பாத்திரப் பேச்சு, இலக்கியம், பாட்டு, திராவிட இயக்கத்தின் குரல், நாவல்களின் பங்கு, கலைப் படங்கள், சினிமா ரசனை, ஆபாசம்-வன்முறை உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்த தனது பார்வையயும் எடுத்து வைக்கின்றார்.

இப்புத்தகத்திலிருந்து சில சுவையான சில விஷயங்கள்:-

- திருச்சியில் வசித்து, ரயில்வேயில் டிராஃப்ட்ஸ்மேனாக வேலை பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட்டிற்கு தொழில் நுணுக்கக் கருவிகளில் மிகுந்த ஈடுபாடு. 1905ல் திருச்சி ரயில் நிலையத்தில் டூபா என்ற பிரஞ்சுக்காரரைச் சந்தித்து, அவரிடமிருந்து சினிமாக் காட்சி சாதனங்களிப் பெற்று ஒரு exhibitor ஆக உருவாகின்றார். பின்னர் டாக்கி யுகத்தில், கோவையில் 'லைட் ஹவுஸ்', வெரைட்டி ஹால் முதலிய திரையரங்குகளைக் கட்டுகின்றார்.

- டூரிங் திரையரங்குகள் வந்த போது, டிக்கெட் என்ற்ய் எதுவும் கிடையாது. ஓரணா அல்லது இரண்டணா காசு கொடுத்து உள்ளே நுழையலாம். காசில்லாதவர்கள் அரிசி, ப்ருப்பு, புளி முதலியவற்றைக் கொடுத்து காட்சியைப் பார்க்கலாம். இப்படிச் சேர்ந்த பண்டங்களை அந்த வாரச் சந்தையில் ஒரு ஸ்பெஹல் கடை போட்டு விற்றுவிட்டு, காட்சியாளர் அடுத்த ஊருக்கு மூட்டை கட்டுவார்.

இது போன்ற சுவையான பல் வேறு விஷயங்களையும், எப்படி வேவ்வேறு மனிதர்கள் இந்தத் தமிழ்த் திரையுலகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் என்பதனையும் "எம் தமிழர் செய்த படம்' அழகுற விளக்குகின்றது.


பதிப்பு: உயிர்மைப் பதிப்பகம்
விலை: Rs.100

- சிமுலேஷன்

Wednesday, December 23, 2009

புகைப்படப் புதிர்-7



இந்த இரண்டு படங்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னென்ன?

- சிமுலேஷன்

Monday, December 21, 2009

சென்னை இசை விழா 2009-2010

முதலில் சென்னை இசை விழாவிற்கென ஒரு தனிப்பதிவு தொடங்கி, இசை விமர்சனங்கள் எழுதலாமென நினைத்தாலும், அதற்கென நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு புகைப்படப் பதிவு மட்டுமே! புகைப்ப்டங்கள் மட்டும் அவ்வப்போது தரவேற்றம் செய்யும் எண்ணம்.

இந்த வருடத்திற்கான் நான் கேட்ட முதல் கச்சேரி சாகேத ராம். சிவகாமி பெத்தாச்சி அரங்கினில், ப்ரம்மகான சபா ஆதரவில்.


நாரதகான சபாவில் கலாக்ஷேத்ரா குழுவினரின் குழு நடனங்கள்.


குழு நடனத்தின் மற்றொரு காட்சி.


குழு நடனத்தின் மற்றுமொரு காட்சி. கலாக்ஷேத்ரா குழுவிலுள்ள ஆண்கள், பெண்களைப் போலல்லாமல், ஆண்களைப் போலவே ஆடுவார்கள். இந்த முறை, இந்தக் குழுவினர் சிறப்பாக தீம் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், எல்லா உருப்படிகளிலும் கொஞ்சம் கலந்து, நங்கநல்லூர் பஞ்சாம்ருதம் ஆக்கி விட்டார்கள்.

மியூசிக் அகாடெமியில் "ப்ருகதேசி" என்ற தலைப்பில் லெக்டெம் நடத்திய அனில் பேஹார்.


இந்த வருடத்தின் சங்கீதக் கலாநிதி வலையப்பட்டி ஆர்.சுப்பிரமணியன் அவர்கள், மியூசிக் அகாடெமி பப்புவுடன்.

இசைவல்லுனர் T.R.சுப்பிரமணியன்


இசைவல்லுனர் S.R.ஜானகிராமன்


மயிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற அபிஷேக் ரகுராம் கச்சேரி.

அதே மயிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ம்றுநாள் காலை 5.30 மணிக்கு நடைபெற்ற கணேஷ்-குமரேஷ் வயலினிசைக் கச்சேரி. நிகழ்ச்சிக்கான வெளிச்சமே இவ்வளவுதான். அதிகாலையில் அகல் விளக்கொளியில் நடைபெற்ற இந்தக் கச்சேரியினைக் கேட்டவர்கள் பெற்றது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

டாக்டர்.ரீதா ராஜா நடத்திய லெக்டெம்.

முதன்முறையாக மியூசிக் அகாடெமியில், கர்நாடக இசையின் கமலஹாசன் T.M.கிருஷ்ணா லெக்டெம் நடத்தியபோது அரங்கம் நிரம்பி வழிந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.


சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் பாடிய குல்தீப் பய்.

"ஸரளி வரிசை முரளிகாச்சு; ஜண்டை வரிசை கொண்டைக்காச்சு" என்று சரணத்தில் துவக்கி, ஒரு வித்தியாசமான பாட்டு ஒன்று பாடினார். (ஊத்துகாடோ?)



என்னை கவர்ந்த இளம் பாடகர்கள் திருச்சூர் சகோதரர்கள். சுசரிதா RTP செம அசத்தல். மேலும் விவரங்களுக்கு லலிதாராமின் விரிவான் விமர்சனப் பதிவினைப் பார்க்கவும்.

மியூசிக் அகாடெமியின் முக்கிய இடமான கேண்டீன்.



பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் என்னக் கவர்ந்த பாலகன் ஒருவன்.

அப்புறம், இந்த சீசனில் சந்திப்போம் என்று எதிர்பார்த்த மூத்த பதிர்வர் ஒருவரை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். அவர்..............



V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V


- சிமுலேஷன்

Friday, December 18, 2009

ஒற்றன்-அசோகமித்திரன்



அசோகமித்திரன் என்ற ஆளுமையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது ஒற்றன் பற்றிப் பேசப்படுதல் கண்டுள்ளேன். ஒற்றன் என்ற தலைப்பினைக் கேட்டவுடன், ஒரு துப்பறியும் நாவலாக இருக்குமோ அல்லது ஒரு உளவாளியின் வாழ்க்கை வரலாறோ என்றெண்ணத் தோன்றினாலும், அசோகமித்திரன், இந்த மாதிரி வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டரே என்று அழுத்தமாகப்பட்டது தவறாகவில்லை. (ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, "இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்" என்று சொன்னார். !!!).

இது புதினமா அல்லது அனுபவக் கட்டுரையா என்றெண்ணி முகவுரைக்குள் நுழையும்போது, இது ஒரு புனைகதை வடிவம் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் படித்துப் பார்த்தால் பயண அனுபவமே என்று புரிந்து கொள்ளலாம். இதன் களம் - ஐக்கிய அமெரிக்கா.

ஐயோவா சிட்டியில் நடக்கும் உலக எழுத்தாளர்கள் பட்டறைக்கு அழைக்கப்படுகின்றார் அசோகமித்திரன். அமெரிக்காவில் அப்போது இருந்த ஏழு மாத வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கின்றார் இந்த ஒற்றனில். இதில் வரும் விவரிப்புகள் அமெரிக்க வாழ் வாசகர்களுக்கோ அல்லது அமெரிக்க அடிக்கடி சென்று வந்தவர்களுக்கோ, புதிதாக என்ன சொல்லிவிடப் போகின்றார் என்று முதலில் ஆயாசம் எற்படுத்தலாம். ஆனால், அசோகமித்திரனின் அனுபவங்கள் நடந்தது 197 74 ஐச் சேர்ந்த காலம் என்பதனை நினைவில் வைத்தால் மேலே படிக்க ஆர்வம் உண்டாகும். மேலும், அமெரிக்காவிலுள்ள கட்டடங்கள் பற்றிய வர்ணனையோ அல்லது, இயற்கை அழகின் வர்ணனையோவா முக்கியம்? மனிதர்கள் முக்கியம். மனிதர்களைப் பற்றிப் பேசுவது அ.மித்திரனுக்குக் கை வந்த கலை. இந்த ஏழு மாதங்களில் மட்டும் நிறையவே மனிதர்களைப் பார்க்கின்றார். (கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போல பாவனை செய்பவர்கள். இது மாதிரி நிறைய.) ஒரு முறை Span பத்திரிக்கை ஐயோவா சிட்டி பயணம் குறித்து ஒரு கட்டுரை கேட்க, அ.மித்திரன் எழுதித் தந்ததை சிறுகதை என்ற பெயரில் பத்திரிக்கை வெளியிட்டுவிட்டது!. பயணம் செய்த பத்து வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்து எழுதிய இந்தத் தொகுப்பு 14 அத்தியாயஙள் கொன்டது. காலச் சுவடு பதிப்பு.

முகவுரை: (ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது, எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்தத் தெரிந்தவன் என்று எல்லோரும் என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று அவர்களுக்குத் தெரியாது.)

1.விமான நிலையத்தில்: (எனக்கு முன்னால் நின்ற ஐரோப்பியனுக்கு மிகப் பெரிய உடல். அவன் முதுகில் உலக வரைபடத்தை தெளிவாக எழுத்திவிடலாம்....
ஐரோப்பிய மாது. அவளுடைய பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படம் என்றென்றைக்கும் அவளுக்கு வெட்கமூட்டும்... எந்த புகைப்படம் எடுத்தாலும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது.)

2.படகுப் பயணம்: அமெரிகா வந்த முதல் நாளே மார்க் ட்வெயினின் மிசிசிபி நதிக்குப் பயணம் செய்கிறார்கள். இறைச்சி இல்லாத உணவு என்று கேட்டு சீரில் ஃபுட் வாங்குகின்றார். அதில் பாலை ஊற்றி ஊற வைக்க 'பொத,பொத'வென்றாகிவிட்டது போலும். பல இடங்களில் இது, 'அமெரிக்கப் பொங்கலா'கின்றது அசோகமித்திரனுக்கு. படகுப் பயணத்தில் ஜானையும், வெண்டூராவையும் சந்திகின்றார். வெண்டூரா படகுப் பயணம் ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுக்க, ஜானும், அ.மித்திரனும் உதவுகிறார்கள்

3.கவிதை வாசிப்பு:
டெமாயின் நகரத்துப் பிரமுகர்கள் இறுநூறு பேர் சர்வதேச எழுத்தாளர்களின் கவிதை வாசிப்புக்குக் காத்திருக்க, ஒரு மணிநேரம் தாமதமாக வருகிறார்கள். உபயம் வழி தெரியாத ஜிம்மின் குளறுபடி. தான் கவிஞன் அல்லாததாலும், இந்த கவிதை வாசிப்பு நிகழ்ச்சி தனக்கு முன்னமே தெரியாததாலும், நிராதரவாக உணர்கிறார் அ.மி. ஆனால் விட மாட்டேங்கிறார்கள் அமைப்பாளர்கள். உடனே மூளையைக் குடைந்து, கடைந்து, ஞானக்கூத்தனின் "அன்று வேறு கிழமை"யை ஆங்கிலப்படுத்தி வாசிக்கிறார். கவிதை வேறொருவருடையது என்று கூறினாலும், பாராட்டித் தள்ளுகின்றார்கள் கூட்டத்தினர். மேலும் எல்லோரையும் 'பாட' வேறு சொல்கின்றார்கள்.
(உனக்குத் தெரியுமா? நான் பாட்டெதுவும் பாடவில்லை. எங்கள் தமிழ் மொழியின் 30 எழுத்துக்களைத்தான் நான் ராகம் போட்டுப் பாடினேன். அவன் வியப்படைந்ததாகத் தெரியவில்லை. "அப்படியா? நானல்லவா அப்படிச் சமாளித்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழியின் எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்.)

4.பூண்டு: பட்டினி கிடக்குக் அசோகமித்திரனுக்கு காபி கூடக் குடிக்க முடியாமல் போய் விடுகின்றது பூண்டு வாசனை கொண்ட காபியால். பூண்டு புகழ் அறை நண்பனின் அம்மா இறந்த செய்தி கேட்டவுடன் ஆறுதல் தருகின்றார்.

(கறுப்புத் தோலும், கறுப்புத் தலைமைரும் நான் இந்திய நாட்டுக்காரன் என்பதை என் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. ஆனால் என் பெயரோ, கீழை நாட்டவர் என மேலை நாட்டவர் என இரு சாரார்க்கும் அடங்காத புதிராக இருந்தது.)

இதனாலதான் அ.மித்திரனின் ஒரிஜினல் பெயரான தியாகராஜனை ஜப்பான் நாட்டு கஜுகோ 'டகராஜனா'க்கிவிடுகின்றாள்.

5.இலாரியா: பன்மொழி வித்தகி இலாரியாவுடன் நட்பு பாராட்டுகின்றார். அவள் அறைக்கு வந்து மாக்ரோனி வேறு செய்து கொடுத்துவிட்டுப் போகின்றாள். தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு சுய பச்சாபத்துடன் அழுது கொண்டேயிருக்கும் இலாரியாவுக்குக் 'கட்டிப்புடி' வைத்தியம் செய்து ஆறுதல் சொல்கின்றார்.

6.வீழ்ச்சி: அயோவா சிட்டியில் உறைபனி பெய்த முதல் நாளிலேயே சறுக்கி விழுகின்றார். இதற்குப் அப்புறம் கே-மார்ட் ஷு (ஜோடுகள்) கதை ஒன்று பெரிதாக வருகின்றது. சுவாரசியமாக.

7. அந்த இன்னொரு பஸ் நிலையம்: போர்ட் காலின்ஸிலிருந்த்து பஸ் பிடித்து கிரீலிக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் ஒரே ஒரு பஸ். ஆளும், அரவம், அசைவும் கிடையாத இடத்தில் வந்து காத்திருப்பது ஒரு சோதனைதான். பஸ்ஸுக்காகக் காத்திருந்து கடைசியில் பஸ் எனப்படும் ஒரு மினி லாரியில் ஏறி ஊருக்குச் செல்கிறார். அதுவரை நமக்கு, ஐயோ, பாவம் இந்த ஆளை விட்டுவிட்டுப் போயிடப் போறாங்களே", என்று தோன்றுகிறது உண்மைதான்.

8. கே-மார்ட் ஷூ: பனிக்காலத்திற்கென்று பிரத்யேகமாக கே-மார்டி சென்று ஜோடுகள்(ஷூக்கள்) வாங்குகின்றார். இந்த ஜோடுகளைப் போட்டுக் கொண்டு துடியாய்த் துடிக்கின்றார். இந்த அவதிப்படல்தான் ஒரு அத்தியாயம் எழுதும் அளவுக்கு. அப்புறம் பரம கஞ்சனான வெண்டூரா டைப் ரைட்டர் வாங்கி கஷ்டப்படும் படலமும் இங்கே வருகின்றது.

9. இப்போது நேரமில்லை: தனது ஆட்டோமேடிக் கடிகாரம் வேலை செய்வது நின்று விட்டதால் அமெரிக்காவில் அதனை ரிப்பேர் செய்ய முடியுமாவென்று பார்க்கும் அளவுக்கு அப்பாவி நம்ம அ.மி. இறுதியாக ஒரு கடைக்குச் சென்று 'பேனா கடிகாரம்" வாங்கி ஆச்சரியப்படுகின்றார். நான் கூட பி.யு.சி படிக்கும் போது ஒரு பேனா கடிகாரம் வாங்கி ஆனந்தப்பட்டது நினைவுக்கு வந்தது. அந்தப் பேனா கடிகாரத்தையும் தொலைத்து, பின்னர் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கின்றார்.

10. ஒற்றன்: "ஆஹா! எங்கே ஒற்றன்? எங்கே ஒற்றன்?" என்று நாம் தேடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பத்தாம் அத்தியாயத்தில்தான் ஒற்றன் வருகின்றான். அபே குபேக்னா என்ற எத்தியோப்பிய எழுத்தாளனின் விடா முயற்சியால் உருவான் நாவல்தான் ஒற்றன். இந்த மாதிரி அவே குபேக்னா என்று உண்மையாகவே ஒரு எழுத்தாளர் இருந்தாரா என்று கூகிளிட்டுப் பார்த்ததில், அது உண்மைதான் என்று தெரிய வருகின்றது. அவரது சில மேற்கோள்கள் புகழ் பெற்றவை என்றும் தெரிய வருகின்றது. அபே ரொம்பவும் சிரமப்பட்டு ஒரு சூட் தைக்கிறான். அதனை அணிந்த பின்பு மாசக்கணக்கில் கழட்டாமல், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அணிந்து கொண்டேயிருக்கின்றான். பல நாட்கள் பூட்டிய அறையினில் அஞ்ஞாத வாசம் போல இருந்து "ஒற்றன்" நாவலை முடிக்கின்றான். கஜுகோ, 'டகராஜன்' என்று அன்போடு அழைத்துப் பேசுவது அபேக்குப் பொறாமைத்தீயை மூட்டிவிட ஒருநாள் அ.மியை அடித்தே விடுகின்றான். ஒற்றன் என்ற தலைப்புக்குச் சொந்தமானவன் என்பதாலும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் அபே குபேக்னா ஒரு சுவையான மனிதாகத் தெரிகின்றான்.

11. மகா ஒற்றன்: அசோகமித்திரனின் வாழ்க்கையில் அபே குபேக்னா பிரவேசித்த அதே காலகட்டத்தில் வந்தவன்தான் பிராவோ. அவனைப்பற்றிக் கூறாமல் விடுவது நியாயமில்லை என்கிறார். குபேக்னா ஆப்பிரிக்கக் கண்டமென்றால், பிராவோ தென் அமெரிக்கக் கண்டம். இவன் நாவல் எழுது உத்தியே தனிதான். அசோகமித்திரனை அறைக்கு அழைத்து சென்று, ஒரு வரைபடம் போன்ற சார்ட் ஒன்றினைக் காட்டுகின்றான். இந்தச் சார்ட்தான் நாவலுக்கான டெம்ப்ளேட் போலும். பிராவோ அதனை விவரிக்கும் போது, நமக்கும் அதனைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற அடக்க முடியாத ஆவல் தோன்றுகின்றது. இந்த மாதிரி சார்ட் ஒன்று இருந்தால் நாமும் கூட நாவல் எழுத முயற்சித்துப் பார்க்கலாமே என்ற ஆசையும் எட்டிப் பார்கின்றது. பிராவோவின் நாவலின் தலைப்புதான் "மகா ஒற்றன்".

12. கண்ணாடி அறை: ஜிம் பார்க்கர் என்ற ஓவியனுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உளள சூசி வீட்டிற்கு செல்கிறார்கள். சூஸி வீட்டில் இருக்கும் விருந்தினர்களின் நடவடிக்கைகள் அசோகமித்திரனுக்கு ஆச்சரியம் ஏற்படுத்துகின்றது. திடீரென்று ஒரு இரவு சூஸியின் கணவன் அ.மிதான் சூஸியின் கள்ளக் காதலன் என்றெண்ணிச் சுட வருகின்றான். கண்ணாடி அறையினில் ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்படுகின்றார் அ.மி. (இனி இந்த நாட்டினில் இருக்கப் போகும் நான்கைந்து மாதங்களுக்கு எந்தப் பணக்காரக் குடிகாரனைப் பார்த்தாலும் அவன்தான் என்னைக் கொலை செய்யத் துடிக்கும் சூஸியின் கணவனோவென்று நடுங்கிக்கொண்டிருக்க வேண்டும்.)

13. அம்மாவின் பொய்கள்: அசோகமித்திரனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஞானக்கூத்தனின் "அம்மாவின் பொய்கள்" அவருக்குத் தெரியாமலேயே, விக்டோரியா குழுவினரால் நடித்துக் காட்டப்பட ஒரே ஆச்சரியம்.

14. ஏப்ரல் 27, 1974: பயிற்சிப் பட்டறையின் கடைசி நாள். ஒரு பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் போல இறுதி நாளில் பிரியும் சோகம் அனைவருக்கும். ஏன்? வபின்ஸ்கி, கஜுகோ போன்ற பலரையும் பிரியும் நமக்கும்தான்.

- சிமுலேஷன்

Thursday, December 17, 2009

அம்மையே அப்பா... ஒப்பிலா மணியே...

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!





ராகம்: தேஷ்

Saturday, December 12, 2009

இசை விழாவில் திருடர்கள்

சமீப காலங்களில், இசை விழா நடை பெறும் அரங்குகளில், ரசிகர்கள் இசையிலோ அல்லது நாட்டிய நிகழ்ச்சிகளிலோ தன்னை மறந்து முழ்கி இருக்கும் போது, சில விஷமிகள் அரங்கினுள் நுழைந்து, ரசிகர்களின் கைப்பை, செல் போன், காமிரா ஆகியவற்றினை ஆட்டையப் போட்டுவிடுகின்றார்களாம்.

எனவே நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி சீட்டு, அழைப்பிதழ் ஆகியவற்றை அரங்கினுள் நுழையும் போது சோதனை செய்யக் கேட்டுக் கொண்டால், அதனை சங்கடமாக நினைக்காமல், அமைப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அதனைத் தங்களின் பாதுகாப்புக்காகவே செய்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீப காலங்களில், கலைஞர்கள், தங்களது ஒப்பனை அறையில், பல வித மதிப்பு மிக்க பொருட்களக் கோட்டை விட்டுள்ளதாகத் தெரிகின்றது. அரங்கினுள் பரிச்சயமில்லாத ஆடு திருடின கள்ளன் போன்ற முகங்கள் தெரிந்தால் உஷாராகவே இருக்கவும்.

இவ்வாறு நர்த்தகி.காமில் எழுதி ரசிகர்களுக்கும், கலஞர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் ஒரு சிறு கடிதம் எழுதியுள்ளார், மூத்த நாட்டியக் கலைஞர் வி.பி.தனஞ்செயன் அவர்கள்.

நிகழ்ச்சியின் நடுவே எழுந்து போபவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் சொல்கிறார். (தனியாவர்த்தனத்தின் போது யாரும் எழுந்து செல்லாமல் இருக்கவும், நிகழ்ச்சி முடியும் வரையிலும் அனைவரையும் உட்கார்த்தி வைக்கவும் உண்டான உத்தியோ?)

- சிமுலேஷன்

சாகேதராமன் - சிவகாமி பெத்தாச்சி அரங்கம் - ப்ரம்மகான சபா

நேற்று ப்ரும்மகான சபாவின் ஆதரவில் சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற லால்குடியின் சிஷ்யரும், விசாகா ஹரியின் சகோதரருமான சாகேதராமன் கச்சேரி குறித்த எனது பதிவு இந்த தனி வலையில்.

- சிமுலேஷன்