Wednesday, May 11, 2016

ஆரஞ்சு மிட்டாய் ஆராவமுதன்

எம்.எல்.ஏவாக இருந்த ஆராவமுதன் ஆடி அமாவாசையன்று அதிர்ஷ்டம் அடித்து, அமைச்சரானார். கவர்னர் மாளிகையில் பதவியேற்ற மறு நாளே குல தெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குப் பயணித்தார். ஆராவமுதன் அமைச்சராகி விட்டார் என்றதுமே பாரியூர் பரபரப்பாகி விட்டது. அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழாவுக்கு எற்பாடு செய்து விட்டார்கள். 

பள்ளியின் ப்யூன் முதல் தலைமை ஆசிரியர் வரை பாராட்டு விழாவில் பரவசமாய் இருந்தார்கள். அதிலும் தமிழ் ஆசிரியர் தங்கதுரைக்கு ஒரே மகிழ்ச்சி.  ஆம். அவர்தான் மூன்றண்டுகள் ஆராவமுதனுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர். அவர் பத்தாம் வகுப்பில் ஆசிரியராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி, நினைவுக்கு வந்தது. அதனைப் பற்றி மேடையில் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டுமென்று எண்ணினார்.

"ஆசிரியர்களே! மாணவர்களே! இங்கே நம்மிடையே அமர்ந்துள்ள அமைச்சர் ஆராவமுதன் நம் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தலைமைப் பண்புகள் நிரம்பியவராக இருந்தவர். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு நாள், நான் ஒரு கண்ணாடி பாட்டில் முழுவதும் மிட்டாய் நிரப்பி வகுப்புக்குக் கொண்டு வந்து அலமாரியில் வைத்தேன். மாணவர்களிடம் "இந்த சீல் செய்த பாட்டிலில் எத்தனை மிட்டாய் இருக்கின்றது என்று நாளைக்குள் சரியாக கணித்துச் சொல்பவர்தான் மாணவர் தலைவர். மற்றபடி மாணவர் தலைவர் பதவிக்கு தேர்தல் எதுவும் கிடையாதுஎன்றேன். மாணவர்களும் அதற்கு ஒத்துக் கொண்டு ஆளாளுக்கு வாய்க்கு வந்த எண்ணைச் சொன்னர்கள். ஆனால் ஆராவமுதன் மட்டுமே மிகச் சரியாக 135 என்று சொன்னார். அவனுடைய ஊகத்தையும், மிகச் சரியாக கணிக்கும் திறனையும் கண்டு வியந்து போனேன். அன்று வகுப்புக்கு மாணவர் தலைவரான ஆராவமுதன், பள்ளிக்கும் மாணவர் தலைவரானார்."

பாராட்டு விழாவில் தமிழ் ஆசிரியர், தலைமை ஆசிரியர் என ஒவ்வொருவராகப் புகழ்ந்து கொண்டே போனார்கள்.

சென்னை வரும் வழியில் ஆராவமுதன் மனைவி கேட்டார்.

"அது எப்படிங்க, ஸ்கூல்ல இருக்கும் போதுபாட்டில்ல இருக்கிற மிட்டாய கரெக்டா கண்டு பிடிச்சீங்க? தமிழ் வாத்யார் கேட்ட கேள்விங்கரதுனால  திருக்குறள் அதிகாரம் 135ன்னு கெஸ்பண்ணீங்களா?"


"அடியே! திருக்குறள்ல 133 அதிக்கரம் தானடி! 135 அதிகாரம் கிடையாது! நான் கண்டு பிடிச்சது ரொம்ப சிம்பிள். தமிழ் வாத்யார் வாங்கிட்டு வந்த பாட்டில் மாதிரியே ஒண்ணு புதுசா வாங்கி, அவர் வாங்கின அதே ஆரஞ்சு மிட்டாயப் போட்டு ரொப்பி, சீல் பண்ணி, கிளாசுக்கு எடுத்துகிட்டு போனேன். யாரும் பாக்காதப்ப  பாட்டிலை மாத்திட்டேன். நான் ரொப்பின பாட்டில்ல எவ்வளவு மிட்டாய் இருக்கும்னு எனக்குத் தெரியாதா?"


- சிமுலேஷன்

Wednesday, May 04, 2016

யாருக்கு ஓட்டுப்போடலாம்? - சுஜாதா சொன்ன யோசனைகள் சரிதானா?


ஐ.டி கார்டு இல்லையென்றாலும் வோட்டுப் போடலாம்... போட வேண்டும். யாருக்கு என்று என்னைக் கேட்டாலும், கீழ்க்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

·         இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள்.
//படித்த மற்றும் இளைய அரசியல்வாதிகள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததற்கு சமீபத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. படிப்புக்கும், வயதுக்கும் ஊழல் செய்வதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.//
·         சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள். 
//வெளியிலிருந்து விதைக்கப்பட்டவர் தொகுதிக்கு எதுவும் செய்ய மாட்டார். உள்ளூர்க்காரர்தான் விழுந்து, விழுந்து வேலை செய்வார் என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை.//
·         உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம். 

//அரசியல் பேசுவது என்றாலே அலர்ஜியாக ஓடும் குடும்பத்தாரும் சுற்றுப்பட்டவர்களிடமும் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்று சொல்லக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.//
·         உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்... பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.

//சொர்ணாக்காவாக இருந்தாலும் பரவாயில்லையா?//
·        
சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.

//வேஸ்ட் என்றால் என்ன? வெற்றி வாய்ப்புக் குறைவானவர்களா? தகுதியான வேட்பாளர்களாக இருந்து வெற்றி வாய்ப்புக் குறைவாக இருக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வோட்டுப் போடக் கூடாதா?//

http://www.vikatan.com/news/miscellaneous/63527-for-whom-do-we-vote-writer-sujathas-suggestion.art

சிமுலேஷன்

Sunday, December 27, 2015

அறநிலையத் துறை சுற்றறிக்கை


ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.



உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெற்றியில் திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது என்பது இந்துப் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளம். எனவே, இந்துக் கோயிலுக்கு வருபவர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நெற்றியில்  திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு வராவிடில் அனுமதி இல்லை  என்றும் சொல்லலாம்.


Saturday, October 24, 2015

என் பெயர் விஸ்மயா - 4 - (குறு நாவல்)





என் பெயர் விஸ்மயா - 2


என் பெயர் விஸ்மயா - 3


இந்த வருஷம் தீபாவளி ரொம்ப விசேஷம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னமே பரத் மாமா குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். அனதராமனும் தன தம்பி, மச்சினர் எல்லோரையும் தீபாவளிக்கு முதல் நாளே வரச் சொல்லியிருந்தார். ஒவ்வொருவராக வர, வர தீபாவளி களை கட்டத் தொடங்கி விட்டது.

"குரு, என்ன இருந்தாலும் தீபாவளி மாதிரி எந்தப் பண்டிகையும் வராதுரா. நாமெல்லாம் சின்னப் பசங்களா இருந்தப்போ, ஒரு வாரத்துக்கு முன்னாடியே தீபாவளி ஜொரெல்லாம் வந்துரும். இப்பப் பாரு, தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் தான் லீவு."

"தீபாவளிலேயே ஸ்பெஷல் மொத நாள்தான். ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்புட்டுட்டு, பட்டாசெல்லாம் வெடிச்சுட்டு, மணிக் கணக்கா ஒக்காந்து அரட்டை அடிக்கறோமே, அந்த சுகம் வரவே வராதுரா. அதிலேயும் இந்த வருஷம் பரத் வேற குடும்பத்தோட, அமெரிக்காவ்லேந்து வந்த்ருக்கான். இந்த வருஷம் சூப்பர் தீபாவளிதான்."

"ஆபீஸ்லே ஒரு நாள் லீவு விட்டாலும், நாம எல்லோரும் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு, வருஷா வருஷம் யாராவது ஒர்த்தர் வீட்ல தீபாவளி கொண்டாடறோமே, அது தாண்டா செம்ம."

அனந்து விடு தீபாவளியில் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. அருண் ஹாலிலேயே ஒரு பட்டாசு வைத்து, அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான்.

"பை வே. விஸ்மயாவ எங்க காணோம்? அவளும் ரெண்டு நாள் லீவு போடுவாளே. ஒரு வேலை இந்த செக்யுலர் காலேஜ்ல லீவு கொடுக்கலியோ?

"பரத் அண்ணா. விஸ்மயா இப்பத்தான் போன் பண்ணினா. ஒரு பிப்டீன் மினிட்ஸ்லெ வந்துடுவாளாம்."

மணி ஆறாயிற்று. ஆறரையும் ஆயிற்று.

"என்னடா இது?. அவளுக்குப் போனைப் போடேண்டா! அவ, வீட்டில இல்லாம களையே இல்ல."

"இல்ல சித்தப்பா, மறுபடியும் அவளே போன் பண்ணிட்டா. டிராபிக் ஜாமாம். 'இன்னம் பத்து நிமிஷத்லே வீட்லே இருப்பேன்னு' சொல்லிட்டா.

கரெக்டாக மணி ஏழாக காலிங் பெல் அடித்தது.

"வா. ஹரி. வா. எல்லோருமே இப்ப வீட்லேதான் இருக்காங்க."

"ஹாய் டூயிங்" என்று சொல்லி பரத் அந்த இளைஞனை வரவேற்றார்.

"உட்காருப்பா. என் பேரு அனந்து. விஸ்ம யாவோ அப்பா."

"சார்.. என் பேரு ஹரி.."

"வெய்ட். வெய்ட். ஹரி.. நானே இன்ட்ரட்யூஸ் பண்றேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டீ, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, ரவி, ஷைலூ எல்லோரும் கேட்டுக்கோங்க. இதுதான் ஹரி. எங்க காலேஜ்லே கல்சுரலுக்குப் பாட வந்தார். அப்பேல்லேர்ந்து எங்களுக்குள் பழக்கம். அவர் என்னை விரும்பினார். அதவிட நான் அவர அதிகமா விரும்பினேன். மே மாசம் ரெண்டு பெரும் கோர்ஸ் முடிக்கறோம். அதுக்கப்புறம் ஒரு ஆறு மாசத்லே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.      

ஆறு மாசத்லே நீங்க எப்ப தேதி சொன்னாலும் சரி."

எல்லோரும் என்ன பேசுவது என்று தெரியாமல் திரு,திருவென்று முழித்திருக்க சித்திதான் முதல் குரல் கொடுத்தாள்.

"வஸு. நீ இப்படிப் பண்ணுவேன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கலை!"

"சித்தி... ஹரிக்கு எந்தக் கொறையும் கிடையாது. எம்.ஏ சோஷியல் சைன்ஸ் படிச்சுட்டிருக்கார். அலப்பி வெங்கடேசன் சார்கிட்ட பா ட்டு கத்துகீட்டு இருக்கார். டீ டோட்டலர். ஒங்களால ஹரிகிட்ட எந்த ஒரு கொறையும் கண்டு பிடிக்க முடியாது. ஆனா, நானா…. என்னோட மாப்ளையத் தேடிக்கிட்டேன்னு ஒங்களுக்கெல்லாம் கோபமாயிருக்கும். நானா இப்படி ஒரு முடிவு எடுக்காட்டி, நீங்கள்ளெல்லாம் ஒரு நல்ல பையனை எனக்காக செலெக்ட் பண்ணியிருப்பீங்க. ஆனா அவனை எனக்குப் பிடிச்சுருக்குமான்னு தெரியாது. சின்ன வயசுலேந்து எனக்காக பெஸ்ட் திங்க்ஸ்தான் செலெக்ட் பண்ணீயிருக்கீங்க. ஆனா அது ஒங்க பாய்ண்ட் ஆப் வியுலே. என்னோட பாய்ன்ட் ஆப் வியுவ்லேந்து யாருமே எப்பவுமே யோசிச்சதில்லே. அட்லீஸ்ட் எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்த பின்னாடியாவது, யாரவது, "வஸு, உனக்கு இந்தப் பாவாடை பிடிச்சிருக்கா? இந்த மொபைல் மாடல்  பிடிச்சுருக்கா?, இந்த மாடல் கார் பிடிச்ச்சுருக்கா?ன்னு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கேட்டிருந்தாக் கூட, “ஆஹா, என்னையும் மதிச்சு ஒரு கேள்வி கேட்டாங்களேன்னு சந்தோஷப்பட்டிருப்பேன். என்னோட லைப் பார்ட்னர் விஷயத்லையும் இந்தத் தப்பு நடந்துடக் கூடாதுன்னுதான் நெனைச்சேன். அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாப் போச்சு"

"அனந்து. விஸ்மயான்னு பேர் வெச்சியேடா. கரெக்டா ப்ரூவ் பண்ணிட்டா?"

"ஆமாம், பாட்டீ, அண்ணா பிறந்து பத்து வருஷம் கழிச்சு ஸர்ப்ரைஸா நான் பொறந்ததால எனக்குப் 'விஸ்மயா'ன்னு பேர் வச்சதாச் சொல்லுவே. ஒவ்வொரு முறையும் எனக்கு யாராவது சர்ப்ரைஸ் கொடுக்கும் போதும் என் பேரே தான் எனக்குப் பெரிய  எதிரின்னு நினைச்சுப்பேன். ஆனா, இன்னிக்குத்தான் ஒங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஸர்ப்ரைஸ் கொடுத்ததிலே என் பேரே எனக்கு இப்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு."

வசுமதி அனந்துவைப் பார்த்துக் கண்ணசைக்க, அனந்து "விஸ்மயா, மாப்ளைக்கு ஸ்வீட் எடுத்துண்டு வாம்மா" என்றார்.  

என் பெயர் விஸ்மயா - 3 - (குறு நாவல்)




சித்தப்பா, சித்தி, மாமா, மாமி எல்லோரும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு வருவது அபூர்வம். அதுவும் ஞாயிற்றுக் கிழமை மாலையில் டி.வி. படங்களைப் பார்க்காமல் வந்திருக்கிறார்கள் என்றால் ஏதோ விசேஷம் கண்டிப்பாக இருக்கும்.

"வசு, ரவி என்னமோ எங்களையெல்லாம் வரச் சொல்லியிருக்கான். ஆனா, அவனைக் காணோமே! எங்கே போயிட்டான்?"

"சித்தப்பா. இப்பத்தான் ரவி போன்பண்ணினான். இன்னமும் பத்து நிமிஷத்லே வீட்லே இருப்பேன்ன்னுட்டு"

"எங்கே அவன் பைக் வாசல்லே தான் இருக்கு. பஸ்லே எல்லாம் போக மாட்டாரே நம்ம மாப்ள!"

ஒவ்வொருவராக கலாய்க்க ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் ரவி.

"எங்கேடா போயிட்டே? பைக் வாசல்ல இருக்கு!"
"மாமா. அதெல்ல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப எல்லோரும் வாசலுக்கு வாங்கோ... பாட்டி  நீயும் வா...   தாத்தா நீயும் வா. அப்புறமா பேப்பர் படிக்கலாம்... விஸு நீ முன்னாடி வா"

வாசலுக்கு வந்து பார்த்தால் சிவப்பு நிறத்தில் ஒரு மாருதி சுஸுகி.

"அடேய்! என்னடா இது? யார் கார்ரா இது?

"கொஞ்சம் வெய்ட் பண்ணு பாட்டி. சொல்றேன்."

"விஸு இப்படி இங்கே வா. கையை நீட்டு. இந்தா சாவியைப் பிடி."

"ஹிப் ஹிப் ஹுர்ரே...ஹிப் ஹிப் ஹுர்ரே. ஹிப் ஹிப் ஹுர்ரே"

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கும்பலாகக் கத்தினார்கள்.

"இந்த மாதிரி ஒரு அண்ணா எனக்கும் இருந்திருக்கலாம்" என்றாள் கௌரி மாமி.

"அடுத்த வாரத்லேர்ந்து விஸு காலேஜுக்குப் போகப் போறா. பஸ்லெதான் போவா. ஆனா, ஒரு ஆத்திர அவசரத்துக்குன்னு ஒரு கார் இருந்தா நல்லாத்தானே இருக்கும்."

"பஸ் இல்லேன்னா ஆட்டோ இருக்கேடா" என்று இழுத்த சித்தப்பா, யாரும் அதனை ரசிக்கவில்லை என்று தெரிந்ததும் அந்தர் பல்டி அடித்தார்.

"விஸு, உனக்கு இந்த ரெட் கலர் கார் நல்ல மேட்சாக இருக்கும்"

அனந்து பெருமையாக ரவியைப் பார்த்தார்.

'என்னோட மகனை நெனைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. இவ்வளவு சின்ன வயசிலே யாரும் கார் வாங்கினது கெடையாது. அதுவும் கார் வாங்கி தங்கைக்குப் பிரசன்ட் பண்ணினது கிடையாது.'

"கார் சாவியை விஸுகிட்டெ கொடுத்திட்டே. ஆனா, யார் பேர்ல கார் வாங்கியிருக்கேடா?" இது நடராஜா மாமா.

"மாமா, செந்தில் ரஜினி படத்லே சொன்ன மாதிரி ஒங்களுக்கு ஞாபகம் வந்த்துடுத்தா? 'மாப்ள இவர்தாம்; ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது' அப்படீனு சொல்வேன்னு நெனச்செளா? ஆர்.சி புக் விஸ்மயா பேர்லதான் இருக்கு. விஸு…. இது ஒன்னோட கார். ஒன பேர்ல இருக்கிற சொந்தக் கார்!"

"அப்படின்னா அவ பேப்பர்லே எல்லாம் சைன் பண்ணியிருந்திருக்கனுமே? சர்ப்ரைஸா இருந்திருக்காதே!. எப்டி மேனேஜ் பண்ணினே?

"மாமா, அவதான் எல்லாப் பேப்பர்லயும் சைன் பண்ணிக் கொடுத்தா. ஆனா, அவளுக்கே அது தெரியாது"

"கரெக்ட். ஒரு மாசம் முன்னாடி ரவி ஏதேதோ பேப்பர்லே கையெழுத்து வாங்கினான். ஆனா, அது காருக்காகத்தான்னு ஒரு போதும் நெனைக்கவேல்லே."

"விஸு. காலேஜ்லேர்ந்து திரும்ப போகும்போது எங்களையும் கண்டுக்கோ. லிப்ட் கேட்டாக் கொடுப்பதானே?"

"சித்தி. எனக்கே கார் ஓட்டத் தெரியாது. நான் எங்கே ஒங்களுக்கு லிப்ட் கொடுக்கறது?"

"ஹேய் விஸு, அதுக்கும் எற்பாடு பண்ணியாச்சு. நாளைலேர்ந்து பிரம்மாஸ் டிரைவிங் ஸ்கூல்லெர்ந்து சுகந்தின்னு ஒரு லேடி வந்து உனக்குக் கார் டிரைவிங் கத்துக் கொடுப்பாள். ஒரே வாரத்லே ப்ராக்டிஸ் பண்ணிடலாம்.

"ரவி ஆட்டோ கியர்னு ஒண்ணு இருக்காமே? க்ளட்ச், கியர்னு எதுவுமே மாத்தாம அப்படியே ஈஸியா ஓட்டிண்டு போலாமாமே?"

"சே அதெல்லாம் ஒத்து வராது. பெட்ரோல் வேற எக்கச்சக்கமாக்குடிக்கும். இதுதான் உனக்கு பெஸ்ட்."

மறு நாள் காலை ஆறு மணிக்கு காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தாதாள் விஸ்மயா.

"வாங்க..வாங்க.. சுகந்தி மேடம்தானே? குட் மார்னிங்"

"இல்ல. இல்ல. சுகந்திக்கு ஒடம்பு சரியில்ல. நான் மணிமேகலை. குட் மார்னிங் மேடம்"

மணிமேகலை விஸ்மயாவை சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே உள்ள மைதானதுக்குக் கூட்டிச் சென்றாள். இடம் மாறி விஸ்மயாவை டிரைவர் சீட்டில் அமரச் செய்தாள்.

"சும்மா க்ளட்சை ரிலீஸ் பண்ணி, ஆக்சிலரேட்டரை ஸ்லைட்டா பிரஸ் பண்ணுங்க."
வண்டி நகர ஆரம்பித்தது. ஆனால் செகண்ட் கியர் மாற்ற முயற்சிக்கையில் 'பொக்'கென்று நின்றது. ஒரு மணி நேரத்தில் பதினைந்து முறை வண்டி நின்றது.

"மேடம்.. ஆட்டோ கியர்னு ஒண்ணு இருக்காமே. இந்த மாதிரி கியர் எல்லாம் மாத்தும் போது  வண்டி ஆப் ஆகாதாமே. உண்மையா?"

"கரெக்ட் மேடம். ஆட்டோ கியர் சூப்பரா இருக்கும். அதுவும் நம்ள மாதிரி லேடீஸுக்கு ரொம்பவே கரெக்டாக இருக்கும். நீங்க கூட ஆட்டோ கியர் வாங்கியிருக்கலாமே. கொஞ்சம்தான் வெலை அதிகம். ஆனா இந்த மாதிரியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்காது!"

நான் எங்கே கார் வாங்கினேன். ரவி கேட்டானா? இல்ல அப்பாதான் என்னைக் கேட்டாரா? அவருக்கும் இந்த விஷயம் தெரிஞ்ச்சுருக்குமே. அதுவும் 'சேப்பாயி' மாதிரி இப்படி ஒரு கலர். நான் வாங்கியிருந்தால் சூப்பரா கருப்புக் கலர்லே வாங்கியிருந்திருப்பேனே!