Monday, December 27, 2010

இளகிய நெஞ்சம் கொண்டவர்கள் இதைக் கேட்க வேண்டாம்

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்கள் அன்புக்குரிய்வரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்பவரா? அல்லது இளகிய நெஞ்சம் கொண்டவரா? அடிக்கடி ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி சோகப்படுபவரா? அப்படியானால் இந்த இசையினை நிங்கள் கேட்க வேண்டாம்.     Get this widget |     Track details  | eSnips Social DNA                                                                  ...

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது... 1.    1. மிருதங்கம், கடம், கஞ்சிரா எல்லாம் சேர்ந்து வாசிக்கும்போது கூட 'தனி ஆவர்த்தனம்'னு சொல்லறாங்களே! ஏன்?   2. ஏன் ஒரு கச்சேரிலேகூட ‘மங்களம்’ மொதல்ல பாட மாட்டேங்கறாங்க? 3. சங்கீத முமோர்த்திகள் ஏன் ‘ஜம்பை’ ராகத்தில் ஒரு கீர்த்தனை கூடப் போடல்லே? 4. ‘தம்பூரா கண்ணன்’ ஏன் ‘ஸோலோ’ கச்சேரி செய்யறதில்லே? 5. Portable, Vennai, Portable Thamboor கண்டுபிடிச்சா மாதிரி Portable Flute, Portable Mohrsing ஏன் யாரும் கண்டுபிடிக்கல? 6. நேத்திக்குக் கச்சேரிலே காம்போதி ராகத்திலே வாசிச்ச ‘மல்லாரி’ சூப்பர்! 7....

Thursday, December 23, 2010

குற்றம் நடந்தது என்ன? - குறைவான விலையில் காய்கறிகள்

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவரிடம் ஒரு கோப்பு சென்றது. அதில் அன்றைய தினம் ஐ.சி.எஸ் அதிகாரி எஸ்.ஏ.வெங்கட்ராமன், தனது மகளின் கல்யாணத்திற்கு காய்கறிகள் வாங்க, ஜெயில்களுக்கும், மாணவர்கள் விடுதிகளுக்கும் காய்கறி சப்ளை செய்யும் ஒருவரிடம், மார்க்கெட் விலையை விடக் குறைவான விலைக்கு, காய்கறிகளை வாங்கியதாகக் குற்றச்சாட்டு. இதை விசாரணை செய்ய ஒரு கமிஷன் அமைக்குமாறு நேரு உந்தரவிட்டார். கமிஷன் விசாரணையில் "காய்கறிக்கு நான் பணம் செலுத்தி விட்டேன்" என்று வெங்கட்ராமன் கூறினார். எனினும், குறைந்த விலைக்கு வாங்கியது அவரது ஊழல் எண்ணத்தை, அதாவது உத்தியோகத்தை,...

Wednesday, December 22, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள் - ராகங்களைக் கண்டுபிடியுங்கள்

இசை விழா 2010 - 11 - சில புதிர்கள் இங்கே 10 ராகங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடியுங்கள் முடிந்தால்.   1  2  3 4 5 6 7 8 9 10 - சிமுலேஷன...

சபாஷ் சரியான போட்டி!

யதார்த்த வாழ்வில், எந்தச் சந்தர்ப்பத்துக்காகவும் யாரும் பாடுவதில்லை என்ற போதும், இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் என்றும் அபத்தங்களாய் ஒலித்ததில்லை. அதிலும் பாட்டுப்போட்டி நடத்தி ஒருவரை மற்றவர் வெல்லும் சாத்தியக்கூறு வெகு அரிதென்றாலும், திரையுலகில், பாட்டுப் போட்டிக்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இத்தகைய பாட்டுப்போட்டிக்களில் இடம் பெரும் பாடல்கள் பெரும்ப்பாலும் அழியாப் புகழ் பெற்றவை. தமிழ்த் திரையுலகில் இடம் பெற்ற மறக்க முடியாத போட்டிப் பாடல்களைப் பார்போமா! "வஞ்சிகோட்டை வாலிபன்" படத்தில் இடம் பெற்ற "கண்ணும் கண்ணும் கலந்து" என்ற நடனப் போட்டி...

Monday, December 20, 2010

கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா?

நம்மில் பலருக்கு கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா என்ற எண்ணம் வருவது இயற்கை. இதற்குப் பெரிய காரணம் சோம்பல்தான். தேர்தல் சாவடிக்க்குச் சென்று, கால் கடுக்க வரிசையில் நின்று ஒட்டுப் போடுவதனால் என்ன பயன் என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே, உட்கார்ந்த இடத்திலிரிருந்தே குறிப்பிட்ட தேதிக்குள், எந்த நேரத்தில் வேண்டுமானால் ஓட்டுப் போடலாம் என்றிருந்தால் எப்படி இருக்கும்? ஆம். சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்க அப்படி ஒரு வசதி தமிழ்மணம் செய்து கொடுத்திருகின்றாரகள். வீட்டிலிருந்தே ஓட்டுப் போடலாம். அப்புறம் என்ன கவலை? கீழ்க்கண்ட என்னுடைய...

Saturday, December 11, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள்

இந்த வருடத்திய (2010 - 11) இசை விழா ஆரம்பமாகிவிட்டது. அதனால் சங்கீத ஜாம்பவான்களைப் பற்றிய சில புதிர்களைப் பார்ப்போமா? ஒவ்வொரு படத்தொகுப்பிலும், ஒரு பிரபல சங்கீத மேதை ஒளிந்து கொண்டிருக்கின்றார். அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது, இந்தக் குறிப்பிட்ட படங்களிலிருந்து விடையினை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றும் சொல்ல வேண்டும்? - சிமுலே...

Saturday, December 04, 2010

கவிஞர் கண்ணதாசனும் களிமண்ணும்

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிறது.) வீட்டு சுவர்களில் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சுவிட்ச் பாயிண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுகளும் பொருத்தும் பழக்கம் அறிமுகமாகியிருந்த நேரம் அது. குளிப்பதற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண்டிருந்த கவிஞர், அப்போதுதான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த்தார்; பார்த்ததும் திகைத்தார். "இவ்வளவு தாழ்வாக சுவிட்ச் போர்டும், ப்ளக் பாயிண்ட்டும் இருந்தால் குழந்தைகள் தவழ்ந்து விளையாடும்போது, ப்ளக் பாயிண்ட்டுக்குள்...

Friday, November 26, 2010

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

ராகசிந்தாமணி கிளப்பில் முன்பு ஒரு முறை "ஹேமவதி-தர்மவதி-நீதிமதி" ராகங்களுக்கிடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்தோம். இப்போது தமிழ்த் திரையிசையில் 'தர்மவதி' ராகத்தில் அமைந்த சில பாடல்களைப் பார்க்கலாம். அதற்கு முன்னால், தர்மவதி ராகத்தின் ஆரோகணம், அவரோகணம் என்னெவென்று பார்ப்போம். இராகம்:               மாயாமாளவ கௌளை 59ஆவது மேளகர்த்தா இராகம் ஆரோகணம்:     ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ் அவரோகணம்: ஸ நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ தர்மவதி ராகத்தினை தீக்ஷிதர் வழி வந்தவர்கள் 'தம்மவதி'...

Tuesday, November 09, 2010

கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா - நூல் விமர்சனம்

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற...

Saturday, November 06, 2010

பந்து விளையாட்டும், பஞ்சரத்ன கீர்த்தனையும்

சமீபத்தில் 'பெட்ரோடெக் 2010" மாநாட்டிற்காக புது டெல்லி சென்றிருந்தேன். நோய்டாவிலிருந்து வந்த டாக்சி டிரைவர் ராம்சிங்கிற்கு புது டில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை போலும். ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்பாத், ஜனபாத், அக்பர் தெரு போன்ற முக்கிய தெருக்களிலெல்லாம் அழைத்துச் செல்கிறார். நானோ 'ஹிந்தி நஹி மாலும் ஹை' கேஸ். இருவரும் சேர்ந்து கொண்டு "விக்ஞான் பவனை" தேடிக்கொண்டு, இந்தியா கேட்டினை ஐந்து முறை வலம் வந்துவிட்டோம். திடீரென புதிதாக...

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில், ஜி.ராமநாதன் அமைத்த அழகான பாடல்தான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ஜி.ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும். இதன் பின்னரே சாருகேசி ராகம் கர்நாடக இசையிலும், த்மிழ்த்...

Thursday, November 04, 2010

இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை

மற்ற எந்த இந்துப் பண்டிகைகளுக்கும் இல்லாத பல விசேஷங்கள் தீபாவளித் திருநாளுக்கு உண்டு. அவை என்னவென்றால்: குழந்தைகளையும், பெரியவர்களையும் பரவசப்படுத்தும் பட்டாசுகளும், மத்தாப்புக்களும் தீபாவளிக்குப் பலநாடகள் முன்பிருந்தே வெடிக்கப்படும். நான்கைந்து நாட்கள் முன்பாகவே, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்களும், பலகாரங்களும் செய்யப்படும். மற்ற பண்டிகைகள் போல பண்டிகை தினம் நைவேத்யம் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டுமென்ற கட்டாயம், தீபாவளிக்கு இல்லை. அடுப்படியிலிருந்து  அப்படியே சுடச்சுட எடுத்துச் சாப்பிடலாம். மற்ற பண்டிகைகளுக்கு புதுத் துணிமணிகள் எடுக்காவிட்டாலும்,...

Sunday, October 24, 2010

பாரதி இருந்த வீடு - சுஜாதா- நாடகம் - நூல் விமர்சனம்

தலைமுறை இடைவெளி கொண்ட தாத்தாக்களின் கதையென்றால் சுஜாதாவுக்கு அல்வா. அதில் ஒன்றுதான் "பாரதி இருந்த வீடு்". இதில் ஓய்வு பெற்ற சுப்ரமண்ய அய்யர்தான் கதாநாயகர். இரண்டு மருமகள்களிடமிருந்தும், 'அம்மா, தாயே!' என்று அவர்கள் பின்னே செல்லும் பையன்களிடமிருந்தும்  படாதபாடுபடுகின்றார். திருவல்லி்க்கேணி சிங்கராச்சாரி தெருவில் ஒரு வீடு மட்டுமதான் அவருக்குச் சொந்தம். அதில் ஒரு டைலர் 22 ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு 22 வருடமாகக் குடியிருந்துகொண்டிருக்கின்றான்....

Friday, October 15, 2010

எங்க வீட்டு கொலு

காணொளியில் இங்கே காணுங்கள். சென்ற வருடக் கொலு இங்கே. - சிமுலே...

Friday, September 24, 2010

கடம் கார்த்திக்கின் கலக்கல் மிமிக்ரி - பாலமுரளி கிருஷ்ணா மற்றும் சேஷகோபாலன்

கடந்த சில வருடங்களாக "கர்னாடிகா.காம்" (Carnatica.com) என்ற அமைப்பு ஆங்கில வருட புத்தாண்டு துவங்கும் வேளையில் சென்னை மியூசிக் அகாடெமியில் கர்னாடக இசையின் அடிப்படையில் அமைந்த பல புதுமையான நிகழ்ச்சிகள் நடத்துவதுவும் வழக்கம். நானும் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் செல்வது வழக்கம். 2010 வருடத் துவக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்தது Dr.கடம் கார்த்திக்கின் மிமிக்ரி நிகழ்ச்சியாகும். அவர் பெரிதும் மதிக்கும் Dr.பாலமுரளி் கிருஷ்ணா அவர்களும் சேஷகோபாலன் அவர்களும் சேர்ந்து ஒரு ஜுகல்பந்தி நிகழ்ச்சி கொடுத்தால் எப்படியிருக்கும்...

Saturday, August 07, 2010

சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன் - நூல் விமர்சனம்

தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பல ஆண்டுகளாகப் பாதித்து வருவது திரையுலகமாகும். அது விடுதலைப் புரட்சியாக இருக்கட்டும் அல்லது சமுதாயப் புரட்சியாக இருக்கட்டும். பல்வேறு தளங்களில் திரையுலகம் தனது பங்கையளித்துள்ளது என்றால் உண்மையில்லாமலில்லை. ஆனால் அது ஆற்றிய நன்மைகளை விட ஆற்றிய சீரழிவுகள்தான் அதிகம் என்று பொங்கியெழுந்து தைரியமாகத் தன் கருத்துக்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தவர் ஜெயகாந்தன்.  சினிமாவுலகத்தின் மீதான பெருங்கோபத்தினை தனது "சினிமாவுக்குப்...

Sunday, June 20, 2010

தமிழிசை - ஒரு மீள் மீள் பதிவு

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த...